சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

croppedImg_1198144909.jpeg

’சித்தா’ விமர்சனம்

Directed by : SU Arun Kumar

Casting : Siddharth, Nimisha Sajayan, Anjali Nair, Sahasra Shree, S.Aafiya Tasneem, Balaji

Music :Dhibu Ninan Thomas and Vishal Chandrasekar

Produced by : Etaki Entertainment - Siddharth

PRO : DOne

Review :

"சித்தா" எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை திபு நினன் தாமஸ், விஷால் சந்திரசேகர். இந்த படத்தில்  சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ, எஸ்.ஆபியா தஷ்னீம், பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.  

 

இறந்து போன தனது அண்ணன் மகள் சஹஷ்ரா ஶ்ரீயை சித்தார்த் பாசமாக வளர்க்கிறார். அப்பா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படாத வகையில் சஹஷ்ரா ஶ்ரீயை பாசமாகவும், பாதுகாப்பாகவும் வளர்க்கும் சித்தார்த், நிமிஷா சஜயனை காதலிக்கிறார். இதற்கிடையே திடீரென்று சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போய்விடுகிறார். ஒரு பக்கம் சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் தேட, மறுபக்கம் போலீஸார் தேடுகிறார்கள். அப்படி இருந்தும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இந்த நிலையில், காணாமல் போன 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்படுகிறார். ஆனால், அந்த சடலம் சித்தார்த்தின் மகள் அல்ல என்பது தெரிய வருகிறது. காணாமல் சித்தார்த்தின் மகளுக்கு என்ன நடந்தது?, அவரை சித்தார்த் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

சித்தார்த் கதாநாயகனாக அல்லாமல் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ‘பாய்ஸ்’ படத்தில் பார்த்த சித்தார்த்தை தொடர்ந்து நாம் பல படங்களில் பார்த்திருந்தாலும், இந்த படத்தில் முழுக்க முழுக்க புதியவராக தெரிகிறார். அழுக்கு சட்டை போட்டாலும், பணக்கார வீட்டு பையனாகவே தெரியும் சித்தார்த்தை முதல் முறையாக கதாபாத்திரத்திற்கான நடிகராக மாற்றியிருக்கிறார்கள். உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரமாக வலம் வரும் சித்தார்த், தன் மீது பழி விழுந்ததும் என்ன நடந்தது என்று தெரியாமல் தடுமாறுவது, மகள் காணாமல் போனதால் நிலைகுலைந்து போவது, மகளுக்கு நடந்த கொடுமைக்கு காரணமானவர்களை கொலை செய்ய துடிப்பது, என அனைத்து காட்சிகளிலும் உணர்ச்சிரமான நடிப்பு மூலம் பலம் சேர்த்திருக்கிறார்.

 

சித்தார்த்தின் காதலியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், மிக இயல்பாக நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி ஆக்ரோஷமாக பேசாமல் அளவாக பேசினாலும் அவர் பேசும் வசனங்கள் பார்வையாளர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

சித்தார்த் நாயகன் என்றாலும் சில இடங்களில் அவரையும் தாண்டி, கவனம் ஈர்க்கிறார்கள் சிறுமிகள் சஹஷ்ரா ஶ்ரீ மற்றும் எஸ்.ஆபியா தஷ்னீம். இந்த சிறுமிகளின் இயல்பான நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. அதிலும், சித்தார்த்தின் அண்ணன் மகளாக நடித்திருக்கும் சஹஷ்ரா ஶ்ரீ காணாமல் போன பிறகு எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும், படம் முடிந்து திரையரங்கை விட்டு வெளியே வந்த பிறகும் நம் நினைவில் இருந்து நீங்காமல் இருக்கிறது.

 

சித்தார்த்தின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்கள், அண்ணியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், வில்லனாக நடித்திருக்கும் நடிகர், பெண் காவல்துறை அதிகாரி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

 

பழனியை அதன் அழகியலுடன் படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், நட்சத்திரங்களை கதைக்கான கதாபாத்திரங்களாக வலம் வர செய்வதோடு, அவர்களுடைய உணர்வுகளை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி ரசிகர்களிடத்தில் கடத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருப்பதோடு, கதையோட்டத்திற்கு ஏற்றவாறும் அமைந்திருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை திரைக்கதையின் அழுத்தத்தை சிதைக்காமல் சிறப்பாக பயணித்திருக்கிறது. பல இடங்களில் அமைதியே பலம் என்பதை புரிந்து இசையமைப்பாளர் பயணித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

 

இரண்டு மணி நேரம் நம் கவனத்தை ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் சுரேஷ் ஏ.பிரசாத் காட்சிகளை தொகுத்திருக்கிறார். கதாபாத்திரங்களின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு தான் திரைக்கதையின் பலம் என்றாலும், திரைக்கதை வேகமாக பயணிக்கும் அனுபவத்தை நமக்கு கொடுத்து இருக்கையின் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.

 

தந்தை – மகள் பாசம் குறித்த திரைப்படங்கள் தான் அதிகமாக வெளியாகும் நிலையில், சித்தப்பா – மகள் இடையிலான உறவை மையப்படுத்திய கதையில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களையும் அதன் பின்னணியையும் இணைத்து ஒரு பரபரப்பான அதே சமயம் இதயத்தை கனக்க செய்யும் திரைக்கதை மற்றும் காட்சிகளோடு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார்.

 

கதைக்களம், கதாபாத்திர தேர்வு மற்றும் அவர்களிடம் நடிப்பு வாங்கிய விதம் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, எந்த இடத்திலும் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் திரைக்கதை மிக வலிமையாக பயணிக்கிறது.

 

சிறுமி காணாமல் போனவுடன் அவருடைய குடும்பம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் காவல்துறை அதை கையாளும் விதத்தை மிக தைரியமாக சொல்லியிருக்கிறார். அதிலும், 24 மணி நேரம் ஆகட்டும் என்று காவல் ஆய்வாளர் சாதாரணமாக கடந்து போகும் காட்சிகள் எல்லாம் பேரதிர்ச்சி.

 

தான் எடுத்துக்கொண்ட கதையை முழுக்க முழுக்க சினிமாத்தனமாக அல்லாமல் எதார்த்தமான வாழ்வியலாக கொடுத்ததோடு, அதை விறுவிறுப்பாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்லி ரசிகர்களின் இதயத்தை கணக்க செய்திருக்கும் இயக்குநர் எஸ்.ய்.அருண்குமார் மனித உணர்வுகளை வைத்து மீண்டும் ஒரு மறக்க முடியாத படத்தை கொடுத்திருக்கிறார்.

 

"சித்தா" படத்திற்கு மதிப்பீடு 3.5/5

 

Verdict : விறுவிறுப்பான கதை

மேலும் திரைப்பட விமர்சனம்

  • WORLD TAMIL
  • |
  • CINEMA