சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

பெப்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு மறுப்பு - மன்சூர் அலிகான் குமுறல்
Updated on : 05 June 2015

நடிகர் மன்சூர் அலிகான் நடித்தால் நாங்கள் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம் என பெப்சி நிர்வாகிகள் சிலர் அறிவித்துள்ளதாக செய்திகள்  வெளியாகின, இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் கூறுகையில் :


 


ஒருத்தன் வயித்துல ஒருத்தன் அடிக்கலாமா, எவ்வளு பெரிய டாப்சி அமைப்பை நசுக்குவதற்காக என்னோட வெற்றியை தடுத்து நிறுத்துவதற்கு நேரடியா மோத முடியாமல் இந்த மாதிரி நான் படத்துல நடிச்சா நாங்க ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று சொல்கிறார்கள். அப்பா நீ ஒத்துழைப்பு கொடுக்காட்டி டாப்சி ஒத்துழைப்பு கொடுக்கும் நீ விலகிக்கோ, நான் தாரேன் 100 பேர் வேணுமா.. 200 பேர் வேணுமா.. டாப்சியில் மொத்தம் 400 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் டான்சர்ஸ் இருக்காங்க, சண்டை கலைஞர்கள் இருக்காங்க, மற்றும் பிற தொழில்நுட்ப கலைஞர்கள் சேர்ந்துக்கிட்டே இருக்காங்க.மன்சூர் அலிகான் நடிக்க கூடாதுன்னு சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு. அது தயாரிப்பாளர், டைரக்டர் செய்ய வேண்டிய வேலை. 


 


எத்தனையோ பிரச்சனையை நான் சமாளித்துக்கொண்டு வருகிறேன் ஆனால் இவர்கள் டாப்சியை நசுக்க நினைத்து இப்படி செய்திருக்கிறார்கள். ஆனால் அதே நேரத்துல பெப்சி தொழிலாளர்கள் உலகத்திலேயே தலை சிறந்த தொழில் நுட்ப  வல்லுனர்கள். ஹாலிவுட்டுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப கலை அறிந்தவர்கள். இந்த தொழிலாளிகளுடன் எனக்கு எந்த வித மோதலும் கிடையாது. ஆனால் சிலர் வழி நடத்தறவங்க செய்யிற தவறினாலும், உட்கார்ந்துக்கிட்டு சோறு சாப்பிட நினைக்கிறவர்கள், நிர்வாகத்துல உள்ள சில பேர் கமிசன் அடிக்கிறது, கட்டபஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த ஒரு சில புள்ளுரிவிகளால் தான் இப்ப அவப்பெயர் ஆகுது.நானே பெப்சி உறுப்பினர் தானே.... குரூப் டான்ஸ்ல ஆடியிருக்கேன், டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்கிறேன், இசை கலைஞராக இருந்திருக்கிறேன். நடிகர சங்க உறுப்பினர், டப்பிங் ஆர்டிஸ்ட், லைப் டைம் நடிகர் சங்க உறுப்பினர் பின்பு நான் ஏன் இந்த நிலைக்கு தள்ள பட்டேன். என்னை அவமானப்படுத்தினாங்க. நிச்சயமா அவங்க அழைப்பு வரும். நான் போய் கலந்துக்குவேன். எந்த தயாரிப்பாளருக்கும் நான் பிரச்சனையாக இருக்க விரும்பவில்லை.ஒரு தயாரிப்பாளர் என்னை வைத்து படம் எடுகிறதே அதிசயம். ஆனா இவங்க சூட்டிங்க கேன்சல் பண்றாங்க. இவங்களுக்கு சூட்டிங்க கேன்சல் பண்ண என்ன உரிமை இருக்கு இதுக்குதான்  இப்போ நான் நீதிமன்ற தடை உத்தரவு பெற்றிருக்கிறேன்.நாட்டில எவ்வளோ பிரச்சனை இருக்கு. தேர்தல்ல நிக்கனுமா வேணாமா, ஆந்திரா சிறையில் தமிழன் வாடுகிறான், இலங்கை சிறையில் தமிழன் வாடுகிறான். அந்த பிரச்சனையில இது ஒரு பிரச்சனையா ஈடுபடுவது எனக்கே வெட்கமா இருக்கு.தொழிலாளிகளுடன் எனக்கு எந்த வித மாறுபட்ட பேதம் கிடையாது. டாப்சி வந்து ஏழைகளுக்கான, தயாரிப்பாளர்களுக்கான ஒரு இயக்கம்.எனக்கு தெரிஞ்ச கலையை கற்று கொடுத்து நான் உருவாக்கி வெறும் 2000 ரூபாய்ல ஒரு நடிகர், நடிகைகள், சண்டை மற்றும் நடன கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறேன்.


 ஐந்து லட்சம் தர இயலாத திரை கலைஞர்கள் டாப்சியில் இணைந்து கொள்கிறார்கள் இதில் என்ன தவறு, மேலும் தொழில் தெரிந்த நான் அவர்களுக்கு பயிற்சி அளித்து உறுப்பினர்களாக இணைந்து கொள்வதில் என்ன தவறு. ஒருவருக்கு வேலை தருவது எந்த விதத்தில் தவறாக முடியும், நீங்க வேலை செய்யவில்லை என்றால் பரவாயில்லை நான் இந்த தொழிலாளர்களுக்கு வேலை தருகிறேன்.


 என்னை நடிக்க கூடாதுன்னு சொல்ல இவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, அவங்க கடிதம் அளிக்கட்டும் மன்சூர் அலிகான் நடித்தால் நாங்கள் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று தில் இருந்தா தைரியம் இருந்தா ஆம்பளையா இருந்த ஒரு கடிதம் மட்டும் எனக்கு தரட்டும் நான் எத்தனை கோடி நஷ்டஈடு வாங்கனமோ அதை நீதிமன்றத்திற்கு சென்று பெற்றுக்கொள்கிறேன். நீதிமன்ற உத்தரவின்படி நான் கதாநாயகனாக நடிக்கும் ராஜ் கென்னடி பிலிம்ஸ் வழங்கும் அதிரடி படத்திலும் அல்லது ராஜ் கென்னடி பிலிம்ஸ் தயாரிக்கும் வேறு எந்த திரைப்படத்திலும் பெப்சி அல்லது அதன் உறுப்பினர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி தலையிட கூடாது. 


ஆனால் நான் நடிக்கும் படத்திற்கு ஆதரவு அளிக்க முடியாதுச் சொல்ல அவங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, குடை பிடிக்க சொன்னா குடை பிடிக்கணும் கூட்ட சொன்னா கூட்டனும், டீ கொடுக்க சொன்னா டீ கொடுக்கணும் , அவங்க வேலையை பண்ணிட்டு போகணும். இது வந்து தொழிலாளியை அவமானப் படுத்துகின்ற செயல் அல்ல, என்னை யாராவது  


அவமானப் படுத்தினால் அவங்களை நிக்க வைத்து தோல் உரிப்பேன் அதான் மன்சூர் அலிகான்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா