சற்று முன்

இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர் சங்க விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் விஷால்
Updated on : 04 January 2017

தயாரிப்பாளர் சங்கம் குறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு நடிகர் விஷால் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் 3 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.



 



இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கம் குறித்த கருத்துக்கு உயர் நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து பிராமண பத்திர நகல்களைத் விஷால் தாக்கல் செய்துள்ளார்.



 



அந்த மனுவில், "தமிழ் வார இதழான ஆனந்த விகடனின் ஆகஸ்ட் 17 தேதியிட்ட இதழில் எனது பேட்டி வெளிவந்திருந்தது. அதில் படத் தாயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளை பற்றி எனது சொந்தக் கருத்தை தெரிவித்திருந்தேன். அதில், எனது கருத்துக்களை, நான் யாரையும் புண்படுத்தவோ, சர்ச்சையை உருவாக்கவோ கூறவில்லை. மேலும், அதே பேட்டியில் நான், தயாரிப்பாளர் சங்கத்தின் எந்தவொரு தனிப்பட்ட நிர்வாகிக்கு எதிராக நான் செயல்படவில்லை எனவும் விளக்கமளித்திருந்தேன், இருப்பினும் சில நிர்வாகிகள், நான் அவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாக கருதினர்.



 



இந்த சர்ச்சையை மென்மேலும் பெரிதாக்க விரும்பாததாலும், திரையுலகின் பல்வேறு  சங்கங்களின் நட்புறவை நீட்டித்துக்கொள்ளவும், நான் இந்த பிரமான பத்திரத்தை தாக்கல் செய்கிறேன்.”



 



“நான் முன்பே குறிப்பிட்டது போல, நேர்மையானவனாகவும், பொறுப்பானவனாகவும், சட்ட திட்டங்களை மதித்தும் நடந்துகொள்கிற குடிமகன் நான். இதழில் வெளியான பேட்டியில் நான் கூறிய கருத்துக்கள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால், எனது வருத்தங்களை நான் தெரிவித்துகொள்கிறேன், எனது நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. மேலும், நான் படத் தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளை மிகவும் மதித்து நடக்கிறேன். என்னை தற்காலிகமாக, தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நீக்கியதை திரும்பபெறவேண்டுமெனவும், என்னை சங்கத்தில் உறுப்பினராக மீண்டும் சேர்த்துக்கொள்ளவும் கோருகிறேன்.



 



மதிப்பிற்குரிய உயர்நீதிமன்றம், எனது இந்த பிரமாண பத்திர தகவல்களை பதிவு செய்துகொண்டு, தீர்ப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என விஷால் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா