சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

ஓம் புரி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்
Updated on : 06 January 2017

பாலிவுட் நடிகர் ஓம் புரி இன்று அதிகாலை மறைந்ததை தொடர்ந்து ஏராளமானோர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் பிரதமர் நரேந்திர, சோனியா காந்தி, நடிகர் கமல்ஹாசன் என பலர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 



இந்நிலையில்,  தென்னிந்திய நடிகர் சங்கம் ஓம் புரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பஞ்சாபில் பிறந்து இந்தியாவிலுள்ள அனேக மொழி படங்களில் நடித்து, 45 வருட காலம் தன் வாழ்க்கையை கலைதுறைக்காக அர்ப்பணித்தவர் ‘ஓம்புரி’ அவர்கள். இந்திய மொழி படங்கள் மட்டுமின்றி ஆங்கில படங்களிலும் நடித்து நம்மை பெருமைப்படுத்தியவர் ஆவார். மேலும், நாடக துறையின் வளர்ச்சிக்காகவும் அரும்சேவை செய்தவர்.



 



‘பத்மஸ்ரீ’, சிறந்த நடிகருக்கான தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளாலும் கௌரவிக்கப்பட்டவர். அவரது மறைவு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா