சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

இப்ராகிம் ராவுத்தர் மரணம்
Updated on : 22 July 2015

இப்ராகிம் ராவுத்தர் சிறுவயது முதல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரையிலிருந்து சென்னைக்கு தன் உயிர் நண்பர் நடிகர் கேப்டன் விஜயகாந்துடன் சென்னை வந்தவர் தான் டைரக்டர் இப்ராகிம் ராவுத்தர்.





இப்ராகிம் ராவுத்தர் டைரக்டர் ஆனவுடன் தன் நண்பர் விஜயகாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து அழகு பார்த்தவர் இவர். இப்ராகிம் ராவுத்தர் படம் என்றாலே ஹீரோ விஜயகந்தான் என்று கூறும் அளவுக்கு இவர் விஜயகாந்தை வைத்து நிறைய படங்களை எடுத்தார். 





ராவுத்தர் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா படங்களை பிரமாண்டமாக முதன் முதலில் எடுத்தவரும் இவரே, பிலிம் இன்ஸ்டிடியுட் மூலம் பயின்றுவரும் மாணவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளித்தவரும் இவரே.  நிறைய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.





இப்ராகிம் ராவுத்தர் முதன்முதலில் சினிமா பிரொடியூசர் கவுன்சில் தலைவராக  இருந்தவர். இவர் தலைவராக இருந்தபோது பல நல்ல காரியங்களை செய்தவர். இவர் தலைவராக இருந்த அந்த காலகட்டத்தில் சினிமா பிரொடியூசர் கவுன்சிலை மிகவும் நல்ல முறையில் நடத்தினர்.





இப்படி பல நற்காரியங்களை செய்த இப்ராகிம் ராவுத்தர் கடந்த வாரம் உடல் நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 





நண்பர் மருத்துவமனையில் இருப்பதை அறிந்த விஜயகாந்த அவரை மிகுந்த வேதனையுடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். சுயநினைவின்றி இருக்கும் நண்பரை பார்த்த விஜயகாந்த கண்கலங்கி சென்றார்.





இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார்.  சொந்த ஊரான மதுரைக்கு செல்ல இருந்த அவரது உடல் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் கொண்டு செல்ல இயலவில்லை எனவே அவரது உடல் சென்னை அரும்பாக்கத்திலுள்ள அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது நாளை அவருடைய இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



 



அவர் இறந்த செய்தி கேட்டு பிரொடியூசர் தேனப்பன், விஜயகாந்த, விக்ரம், RK செல்வமணி ஆகியோர் சென்று அவரது உடலை பார்த்தனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா