சற்று முன்

இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |   

சினிமா செய்திகள்

உயிரிழந்த விவசாயிகளுக்காக பொங்கல் கொண்டாடாமல் தவிர்க்கலாம்: தங்கர் பச்சான்
Updated on : 12 January 2017

உயிரிழந்த விவசாயிகளுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்க்கலாம் என இயக்குநர் தங்கர் பச்சான் கூறியுள்ளார்.



 



இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:



 



"நமக்கெல்லாம் உணவளித்து உயிரையும் உடலையும் காப்பாற் றும் விவசாயிகளும் நம்மைப் போல் பொங்கல் கொண்டாட வேண்டும் என்று நாம் நினைக்க வேண்டும். ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் அடுக்கடுக்காக உயிரிழக்கும் விவசாயிகள் பற்றிய செய்திகளை நாம் கண்டுகொள்ளாமல் போகிறோம். விவசாயிகள் வீட்டில் எழும் அழுகுரல் மட்டும் நமக்கோ, கேட்க வேண்டியவர்களுக்கோ கேட்கவே இல்லை.



 



நஷ்டம் வரும் என்று தெரிந்தே விவசாயிகள் விவசா யம் செய் கிறார்கள். கடன் வாங்கியவர் களுக்கு எப்படி பதில் சொல்லப் போகிறோம், எதிர்காலத்தில் எப்படி குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்து மானத்துக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டும் அதிர்ச்சியிலும் விவசாயிகள் உயிரிழக்கிறார்கள்.



 



ஜெயலலிதாவின் மரணத்தால் அதிர்ச்சியால் இறந்தவர்களுக்கு அதிமுக ரூ.10 லட்சம் இழப்பீடு நிதி தருகிறது. ஆனால். உயிரிழந்த விவசாயிகளுக்கு தரப்படும் நிதி ரூ.3 லட்சம். இதுதான் அரசாங்கம் விவசாயிகளின் உயிருக்கு தரும் விலை. விவசாயிகளின் உயிரும் போய் அவர்களின் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காத நிலையில், அந்த குடும்பங்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை.



 



நம்முடைய குழந்தைகளை டாக்டர்களாகவும், இஞ்ஜினீயர் களாகவும் ஆக்குவதற்கு மட்டுமே தயார்படுத்துகிறோம். எந்தவொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் விவசாயியாக மாற வேண்டும் என்று விரும்புவதில்லை. விவசாயிக்கு மரியாதை கிடையாது.



 



நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் வகைவகையான உணவுகள் வேண்டும். புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து தொலைக்காட்சி பார்த்து, புதுப்புது சினிமா பார்த்து, விதவிதமாக படம் பிடித்துக்கொண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண் டும். காளையை அடக்க வேண்டிய வர்கள் மடிந்து கொண்டிருக் கிறார்கள். ஜல்லிக்கட்டில்தான் தமிழர்களின் மானம் காப்பாற்றப் படுவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இனிமே லாவது விவசாயின் அழுகுரல் உலகத்துக்கு கேட்கட்டும்.



 



உயிரிழந்த விவசாயிகளுக்காகவும் சாகப்போகிற விவசாயிகளைக் காப்பாற்றவும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடாமல் தவிர்க்கலாம்".

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா