சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் அகத்தியன் - கவிதை 482015
Updated on : 05 August 2015

தனி அறையில்

நொடிப்பொழுதில்

எனக்கு

மாமல்லபுரத்தின் சிற்பம் காட்டினாய்.

கஜுராஹோவை

கண்முன் நிறுத்தினாய்.

பிறந்ததைப்போலவே

வளர்ந்திருக்கிறேன் என்றாய்.

பின் வந்தவை

நான் பெண் ஆனதும்

பிரம்மன் எனக்கு வைத்த

பொட்டுக்கள் என்றாய்.

கூந்தலுக்குள்

ஒரு கோலம் போடச் சொன்னாய்.

காதுகளைக் காதுகளில்

வரையச்சொன்னாய்.

நெற்றிக்கு

முத்த ஒத்தடங்கள்

பழசு என்றாய்.

கண் இமைகளினால்

நெற்றியைக்

கவ்விப்பிடி என்றாய்.

உன் முத்தங்களைக்

கண்களுக்குக்கொடு

எனக்கட்டளை இட்டாய்.

இதழ்களில் உண்ணாதே

பறிமாறு என்றாய்.

பிரம்மனின் பொட்டுக்களை

விரல்தொட்டு

ஒட்டிக்கொள் என்றாய்.

கன்னத்தின்

மெல்லிய உரோமங்களால்

இடையில்

ஒரு கவிதை எழுது என்றாய்.

களைப்பாக இருந்தால்

நீரருந்தச்சொன்னாய்.

அந்தத் தனி அறையில்

கஜுராஹோவைச்

சுற்றிக்காட்டினாய்.

பின் ஒரு

கவிதை எழுதச்சொன்னாய்.

பூமி பார்த்துப் படுத்து

முதுகில் எழுது என்றாய்.

எழுத்தறிவித்தவன்

இறைவன் என்றேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா