சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

ஜல்லிக்கட்டை மீட்டு தந்த மாணவர்களுக்கு வைரமுத்துவின் வாழ்த்து கவிதை
Updated on : 26 January 2017

மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்தின் விளைவாக தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு மீண்டும் கிடைத்துள்ளது.



 



மாணவர்களின் இத்தகைய வரலாற்று சாதனைக்கு தனது கவிதை மூலம் கவிப்பேரரசு வாழ்த்துகளை சமர்ப்பித்துள்ளார்.



 



வைரமுத்துவின் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள அந்த வாழ்த்து கவிதை:



 



 வாடிவாசல் திறந்துவிடும்



வாழ்த்துகிறேன் தம்பி – இனி



கோடிவாசல் திறக்கும்உன்



கொள்கைகளை நம்பி



 



தலைவர்களே இல்லாத



கட்சியொன்று காட்டி – ஒரு



தலைமுறைக்கே வழிசொன்னீர்



தமிழினத்தைக் கூட்டி



 



அடையாளம் தொன்மங்கள்



அழிக்குமொரு கூட்டம் – உங்கள்



படையாழம் பார்த்தவுடன்



பயந்தெடுத்த தோட்டம்



 



பீசாவும் பெப்சியுமே



இளைஞர்கள் என்று – வாய்



கூசாமல் சொன்னவரைக்



கொன்றுவிட்டீர் கொன்று



 



சொல்வாங்கி எல்லாரும்



சூளுரைத்த பாட்டு - கடல்



உள்வாங்கிப் போனதடா



உங்கள்குரல் கேட்டு



 



ஒருகொம்பு ஆணென்றால்



மறுகொம்பு பெண்தான் – அந்த



இருகொம்பின் மத்தியிலே



இடுங்கியது மண்தான்



 



தண்பனியால் சுடுகதிரால்



தமிழினமா சாகும்? – அட



தண்ணீரில் வீழ்வதனால்



வெயில்நனைந்தா போகும்?



 



தெருவிருந்து போராடத்



திறம்தந்தார் தமக்கும் – உம்மைக்



கருவிருந்து பெற்றாரின்



கால்களுக்கும் வணக்கம்



 



சதுராடிக் களம்கண்ட



சகோதரிகாள் வணக்கம் – உங்கள்



எதிர்காலக் கருப்பைகள்



நெருப்பைத்தான் சுமக்கும்



 



காளைகளை மீட்டெடுக்கக்



களம்கண்ட கூட்டம் – இனி



நாளைகளை மீட்டெடுக்க



நாணில்அம்பு பூட்டும்



 



வரம்புகளை யார்விதித்தார்



வரட்டுமொரு யுத்தம் – எங்கள்



நரம்புகளில் ஓடுதடா



ராஜ ராஜ ரத்தம்



 



போராடிச் சாதித்துப்



புகழ்கொண்டீர் யாண்டும் – இனிச்



சாராயம் குறித்தும்நீர்



ஆராய வேண்டும்…

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா