சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

சினிமா செய்திகள்

தமிழர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ஜல்லிக்கட்டு!
Updated on : 02 February 2017

ஜல்லிக்கட்டு அனுமதி தமிழர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள நடிகர் சிம்பு, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்ததற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.



 



"ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் ஒரு புரட்சியாக உருவெடுத்து வெற்றியை ஈட்டியது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு தமிழன் என்ற முறையில் இந்தப் புரட்சியில் மக்களில் ஒருவனாக பங்கெடுத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.



 



அதேநேரத்தில், அறவழிப் போராட்டத்தின் இறுதி கட்டத்தில் வன்முறை வெடித்தது துரதிர்ஷ்டவசமானது. அது குறித்து, தொடர்ந்து என் கவலையைப் பகிர்ந்து வந்ததுடன், முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பாக 3 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்தேன்.



 



‘மீனவர்கள், மாணவர்கள் என பலரை கைது செய்துள்ளீர்கள். அத்தனை பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்; வன்முறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைத்தே ஆகவேண்டும்; அரசாங்கமே ஒரு நாளைத் தேர்வு செய்து ஜல்லிக்கட்டு நடத்தலாம் என சொல்ல வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கைகள்.



 



இந்த நிலையில், சென்னை நடுக்குப்பத்தில் ரூ.70 லட்சத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும். கைது செய்யப்பட்ட 36 மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அவர்களோடு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வோம் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதை வரவேற்பதுடன், தமிழக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்ததற்காக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



 



இதேபோல், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதியையும் முதல்வருடன் ஆலோசித்த பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டதும் தமிழர் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா