சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிலை அவரது பிறந்தநாளில் திறப்பு!
Updated on : 22 June 2017

கவிப்பேரரசு வைரமுத்துவின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டுள்ள இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சிலை, அவரது பிறந்தநாளான ஜூலை 9 அன்று கே.பாலசந்தர் பிறந்த ஊரில் திறக்கப்படுகிறது.



 



சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன், மணிரத்னம் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொள்கின்றனர்.



 



சிலை திறப்புப் பற்றி கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "திரையுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு பேராளுமை இயக்குநர் கே.பாலசந்தர். ஒரு மகனைப்போல என்னை அவர் நேசித்தார். ஒரு தந்தையைப்போல் அவரை நான் நேசித்தேன். அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தியவர் அவர்; சமூகத்தின் இருட்டின்மீது வெளிச்சம் பாய்ச்சி ஒரு கலாசார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்; தமிழ்  சினிமாவிற்கு இந்திய முகம் கொடுத்தவர். அவர் படங்களைப் போலவே அவரும் மறக்கப்படக்கூடாதவர். அவர் படங்களில் வெற்றிப் படங்கள் தோல்விப் படங்கள் என்று தரம் பிரிக்க முடியாது. புரிந்துகொள்ளப்பட்டவை புரிந்துகொள்ளப்படாதவை என்று மட்டுமே இனம் பிரிக்கலாம்.



 



அவருக்குச் சிலை எடுப்பது என்பது அவருக்கு நான் செலுத்தும் நன்றிமட்டுமல்ல; முன்னோடிகளை மதிக்கும் ஒரு கலாசாரமாகும். இந்தப் பணியை என் வாழ்வின் கடமைகளுள் ஒன்று என்று கருதுகிறேன்” இவ்வாறு கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.



 



வெற்றித்தமிழர் பேரவையைச் சார்ந்த தஞ்சை இரா.செழியன், ஆசிப் அலி, சுப்பிரமணிய சர்மா, தருமசரவணன், பன்னீர்செல்வம், மற்றும் நல்லமாங்குடி கமலக்கண்ணன், ரெங்கநாதன், கும்பகோணம் தி.வெ.ஷத்தீஷ், சிலைச்சிற்பு செந்தில் உள்ளிட்டோர் விழாக் குழுவாகச் செயல்படுகிறார்கள்.



 



ஜூலை 9 மாலை 5  மணிக்கு நல்லமாங்குடி குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் விழா நடக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா