சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

நாகேஷ் திரையரங்கம் வெளியாக கூடாது என ஆனந்த் பாபு வழக்கு
Updated on : 30 June 2017

நாகேஷ் திரையரங்கம் வெளியாக கூடாது என ஆனந்த் பாபு வழக்கு



 



‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தை வெளியிட தடைவிதிக்கக் கோரி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.



 



அந்த மனுவில், ‘‘ ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற பெயரில் டிரான்ஸ் இந்தியா மீடியா என்ற நிறுவனம் திகில் படத்தை தயாரித்துள்ளது. வரும் ஜூலை 15-ம் தேதி வெளியாக உள்ள இத்திரைப்படத்தை தயாரிப்பதற்கு முன்பாக எங்களிடம் முன்அனுமதி பெற வில்லை. இந்தப் படம் வெளியானால் எங்களது குடும்பத்துக்கு என உள்ள நற்பெயர் கெடும் சூழல் உள்ளது.



 



மேலும் எங்கள் குடும்பத்தினரின் அனுமதி யின்றி, விளம்பரத்துக்காக எனது தந்தையின் பெயரில் எடுக்கப்பட்ட படத்திற்கு தடை விதிக்க வேண்டும். மேலும் படத் தயாரிப்பாளர் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா