சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

திரைப்பட துறையில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் - சித்தார்த் பகிர்
Updated on : 01 July 2017

தமிழக திரைப்பட துறையில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.



 



இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சித்தார்த், "திரைப்படங்களுக்கு யு சான்றிதழ் வழங்குவதிலும், வரிச் சலுகை வழங்குவதிலும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பெரும் ஊழல் நடந்து வருகிறது. இவை ஜிஎஸ்டியால் ஒழிக்கப்படும் என்பதே ஒரே ஆதாயம். அதுதவிர்த்து 30% சேவை வரியும் இருக்கும் என்றால் ஜிஎஸ்டி ஒரு தவறே.



 



டிக்கெட் விலையைப் பொருத்தவரையில் மக்கள் ஜிஎஸ்டியும் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். 18% ஜிஎஸ்டி இருக்கும் இல்லையேல் மொத்தமாக 28% வசூலிக்கப்படும் என நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் வேலைநிறுத்தம்தான் செய்ய வேண்டும்.



 



தமிழ் சினிமா துறையை ஆண்டாண்டு காலமாக தமிழக அரசு தண்டித்து இருக்கிறது. யு சான்றிதழ் வழங்குவதற்கும், வரி விலக்கு வழங்குவதற்கும் பல்வேறு ஊழல்கள் நடந்திருக்கின்றன. இவைபோதாது என்று தற்போது 30% உடன் ஜிஎஸ்டி வேறா? வெட்கக்கேடு.



 



இப்போது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான இத்தகைய குழப்பங்களில் நம்மை வைத்து விளையாடுகிறார்கள். ஜிஎஸ்டி என்பது ஒரே தேசம் ஒரே வரி. இதில் விதிவிலக்கு ஏதும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா