சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

திறக்கப்பட்ட திரையரங்குகள் - தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவிப்பு!
Updated on : 07 July 2017

வரி சிக்கல் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் இன்று திறக்கப்பட்டன. இதற்கு உதவியவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அறிக்கையில்,



 



"தமிழக அரசுடன் இன்று (06.07.2017) நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் திரையுலகின் கோரிக்கைகள் அனைத்தையும் பரிசீலிக்க திரைத்துறையை சார்ந்த 6 நபர்களை உள்ளடக்கிய இடைக்கால குழு ஒன்றினை அமைத்து விரைவில் தீர்வு எட்டப்படும்.



 



மேலும், பல்வேறு வேலைப்பளுக்களுக்கிடையே தங்களது நேரத்தினை ஒதுக்கி எங்களது திரைத்துறையின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து மேற்கண்ட தீர்வு காண உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும், நிதித்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் அவர்களுக்கும், வணிகத்துறை அமைச்சர் திரு.வீரமணி அவர்களுக்கும், மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு.எஸ்.பி வேலுமணி அவர்களுக்கும் எங்களது தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.



 



கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற திடீர் திரையரங்க வேலைநிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களின் திரைப்படங்களும் மீண்டும் நாளை முதல் தொடரும் என்று நம்புகிறோம். இதற்கு ஒத்துழைப்பு தந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கும் எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.



 



இந்த இக்கட்டான காலகட்டத்தில் திரைத்துறையின் நலன் கருதி திரைத்துறைக்கு ஆதரவாக ஒன்றாக செயல்பட தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், மற்றும் தென்னிந்திய திரைப்பட மற்றும் டெலிவிஷன் கில்ட் செளத் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு எங்களது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.



 



மேலும், இந்த திரையரங்க வேலைநிறுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் பாதிப்படைந்திருந்தபோதும் இந்த திரைத்துறையின் நலன் கருதி பொறுமைகாத்த அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் திரைத்துறையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா