சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

விஜய்யை போல் நன்றி மறக்காத அட்லீ!
Updated on : 09 March 2016



"ராஜா ராணி"  என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குனர் அட்லீ, இப்போது விஜய்யின் "தெறி" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரண்டே படங்களில் முதன்மையான இயக்குனராக மாறியுள்ள அவரின் இந்த வளர்ச்சிக்கு, அட்லீயின் நற்குணமும் காரணமாக இருக்கலாம் என்பது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.



 



சமீபத்தில் நடைபெற்ற "தோழா" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தான் அத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த இயக்குனர் அட்லீயை, பத்திரிக்கையாளர் ஒருவர் உடனிருந்து  அழைத்து சென்று உதவியுள்ளார். ஏற்கனவே பரிச்சியமான அந்த பத்திரிக்கையாளரிடம் அப்போது சரியாக பேசாமல் கைபேசி அழைப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அட்லீ.



இதனை எண்ணி அந்த பத்திரிக்கையாளரும் மனம் வருந்தியிருக்கிறார். ஆனால், அவரே எதிர்பார்க்காத நிலையில் அந்த பத்திரிக்கையாளரை நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்த அட்லீ, விழாவின்போது தங்களை கவனிக்க முடியாமல் கைபேசி அழைப்பில் இருந்துவிட்டேன் எனக்  கூறி வருந்தியதுடன், மேற்கொண்டு அவரை நலம் விசாரித்துள்ளார்.



 



அட்லீயின் இந்த பண்பு அந்த பத்திரிக்கையாளரை மட்டுமின்றி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யும் இவ்வாறான நற்பண்பு உடையவர் என்பதால், அவருடன் இணைந்த அட்லீயும் நன்றி மறவாத தனது குணத்தை நிரூபணம் செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா