சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

வழக்கம்போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவோம் - விஷால் அறிவிப்பு
Updated on : 31 July 2017

ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், படத்தயாரிப்பு பணிகள் வழக்கம்போல் நடத்தப்படுமென தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "தற்போது நிலவி வரும் பிரச்னைகள் குறித்த பெப்சி அமைப்பினரின் விளக்கம் கிடைத்தது. அதில் அந்த அமைப்பின் நிலைகள், நியாயங்கள் விளக்கப்பட்டிருந்தன.



 



தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்ததும் மகிழ்ச்சி அளித்தது. எனினும் ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது வருத்தத்திற்குரியது.



 



இந்த நிலையில் வழக்கம் போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடவும் உள்ளோம். எனவே எங்கள் படப்பிடிப்புக்கு எந்த விதத் தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என பெப்சி அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



 



பெப்சி அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம்தான். அதற்கான சூழல்களை பெப்சி அமைப்புதான் உருவாக்கித் தரவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா