சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

வழக்கம்போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடுவோம் - விஷால் அறிவிப்பு
Updated on : 31 July 2017

ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும், படத்தயாரிப்பு பணிகள் வழக்கம்போல் நடத்தப்படுமென தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.



 



இதுதொடர்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "தற்போது நிலவி வரும் பிரச்னைகள் குறித்த பெப்சி அமைப்பினரின் விளக்கம் கிடைத்தது. அதில் அந்த அமைப்பின் நிலைகள், நியாயங்கள் விளக்கப்பட்டிருந்தன.



 



தயாரிப்பாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்ததும் மகிழ்ச்சி அளித்தது. எனினும் ஆகஸ்ட 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது வருத்தத்திற்குரியது.



 



இந்த நிலையில் வழக்கம் போல் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபடவும் உள்ளோம். எனவே எங்கள் படப்பிடிப்புக்கு எந்த விதத் தடங்கலும் ஏற்படுத்த வேண்டாம் என பெப்சி அமைப்பின் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நிகழும் பட்சத்தில் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.



 



பெப்சி அமைப்பினருடன் சேர்ந்து பணியாற்ற எங்களுக்கு விருப்பம்தான். அதற்கான சூழல்களை பெப்சி அமைப்புதான் உருவாக்கித் தரவேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா