சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

மூன்று பிரிவுகளில் வழக்கு - தலைமறைவில் சந்தானம்?
Updated on : 10 October 2017

பண பிரச்சனையில் நடிகர் சந்தானம், பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 



கல்யாண மண்டபம் கட்டுவதற்காக நடிகர் சந்தானம் கடந்த 2014-ஆம் ஆண்டு பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், கட்டுமான பணியையும் தொடங்காமல் பணத்தையும் திரும்ப அளிக்காமல் சண்முகசுந்தரம் இழுத்தடித்ததால் அவரின் அலுவலகத்துக்கு சந்தானம் நேற்று சென்றுள்ளார்.



 



அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மற்றும் அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 



காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால் சந்தானம் உட்பட இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தானம் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், ஜாமீனுக்கு முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா