சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

மூன்று பிரிவுகளில் வழக்கு - தலைமறைவில் சந்தானம்?
Updated on : 10 October 2017

பண பிரச்சனையில் நடிகர் சந்தானம், பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் கைகலப்பில் ஈடுபட்டது தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 



கல்யாண மண்டபம் கட்டுவதற்காக நடிகர் சந்தானம் கடந்த 2014-ஆம் ஆண்டு பில்டிங் கான்ட்ராக்டர் சண்முகசுந்தரம் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், கட்டுமான பணியையும் தொடங்காமல் பணத்தையும் திரும்ப அளிக்காமல் சண்முகசுந்தரம் இழுத்தடித்ததால் அவரின் அலுவலகத்துக்கு சந்தானம் நேற்று சென்றுள்ளார்.



 



அங்கு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கப்பட்ட சண்முகசுந்தரம் மற்றும் அவரது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



 



காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதால் சந்தானம் உட்பட இரண்டு தரப்பினர் மீதும் 506(1) கொலை மிரட்டல் விடுத்தல், 294(பி) அவதூறான வார்த்தைகளில் பேசுதல், காயம் விலைவித்தல் தாக்குதல் 324 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சந்தானம் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், ஜாமீனுக்கு முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா