சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Updated on : 19 March 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.



 



தமிழில் மறுமலர்ச்சி படத்தில் அறிமுகமாகி ஜெமினி திரைப்படம் மூலம்  கவனம் பெற்ற கலாபவன் மணி, சமீபத்தில் வெளியான பாபநாசம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



தனது திரையுலக வாழ்கையை மலையாள சினிமாவில் தொடங்கிய கலாபவன் மணி, அக்‌ஷரம் என்ற மலையாள  படம் மூலம் அறிமுகமானார். 



 



இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராக இருந்து, கலாபவன் எனும் கலை பயிற்சி மையத்தின் மூலம் பலகுரல் பேசும் கலைஞரானார். பின்னர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், தனது திறமையினால் வளர்ச்சி பெற்றார்.



 



இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.



 



ஆனால் அவரது இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.



 



எனவே, கலாபவன் மணியின் இறப்பு கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா