சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Updated on : 19 March 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.



 



தமிழில் மறுமலர்ச்சி படத்தில் அறிமுகமாகி ஜெமினி திரைப்படம் மூலம்  கவனம் பெற்ற கலாபவன் மணி, சமீபத்தில் வெளியான பாபநாசம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



தனது திரையுலக வாழ்கையை மலையாள சினிமாவில் தொடங்கிய கலாபவன் மணி, அக்‌ஷரம் என்ற மலையாள  படம் மூலம் அறிமுகமானார். 



 



இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராக இருந்து, கலாபவன் எனும் கலை பயிற்சி மையத்தின் மூலம் பலகுரல் பேசும் கலைஞரானார். பின்னர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், தனது திறமையினால் வளர்ச்சி பெற்றார்.



 



இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.



 



ஆனால் அவரது இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.



 



எனவே, கலாபவன் மணியின் இறப்பு கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா