சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Updated on : 19 March 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.



 



தமிழில் மறுமலர்ச்சி படத்தில் அறிமுகமாகி ஜெமினி திரைப்படம் மூலம்  கவனம் பெற்ற கலாபவன் மணி, சமீபத்தில் வெளியான பாபநாசம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



தனது திரையுலக வாழ்கையை மலையாள சினிமாவில் தொடங்கிய கலாபவன் மணி, அக்‌ஷரம் என்ற மலையாள  படம் மூலம் அறிமுகமானார். 



 



இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராக இருந்து, கலாபவன் எனும் கலை பயிற்சி மையத்தின் மூலம் பலகுரல் பேசும் கலைஞரானார். பின்னர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், தனது திறமையினால் வளர்ச்சி பெற்றார்.



 



இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.



 



ஆனால் அவரது இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.



 



எனவே, கலாபவன் மணியின் இறப்பு கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா