சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Updated on : 19 March 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது.



 



தமிழில் மறுமலர்ச்சி படத்தில் அறிமுகமாகி ஜெமினி திரைப்படம் மூலம்  கவனம் பெற்ற கலாபவன் மணி, சமீபத்தில் வெளியான பாபநாசம் வரை ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



தனது திரையுலக வாழ்கையை மலையாள சினிமாவில் தொடங்கிய கலாபவன் மணி, அக்‌ஷரம் என்ற மலையாள  படம் மூலம் அறிமுகமானார். 



 



இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆட்டோ டிரைவராக இருந்து, கலாபவன் எனும் கலை பயிற்சி மையத்தின் மூலம் பலகுரல் பேசும் கலைஞரானார். பின்னர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் நுழைந்த அவர், தனது திறமையினால் வளர்ச்சி பெற்றார்.



 



இந்நிலையில், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலாபவன் மணி, கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்தார்.



 



ஆனால் அவரது இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது. கலாபவன் மணியின் உடலில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம்.



 



எனவே, கலாபவன் மணியின் இறப்பு கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா