சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Updated on : 21 March 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது.



 



கோலாகலமாக நடக்க வேண்டிய இந்த இசை வெளியீட்டு விழா இன்று பெரும் அமளியில் நடந்தது. திரையரங்கின் உள்ளே விழா விமர்சையாக நடந்தாலும் திரையரங்கின் வெளியே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அடிதடியுடன் கூடிய பரபரப்பு சம்பவங்கள் பல நடந்தன. 



 



படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்னவோ மிகவும் பாதுகாப்பாக அரங்கின் உள்ளே சென்றாலும், படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள், மீனா மற்றும் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர், சோபா சந்திரசேகர் உட்பட பலர் கூட்ட நெரிசலில் மாட்டி அவதிப்பட்டு உள்ளே வந்தனர்.



 





 



மேலும் பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல மிகவும் கெடுபிடியாக இருந்தது. தெருக்கு தெரு பேனர் மூலமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் விழாவில் மக்கள் அலைமோதி பெரும் கலவரமே நடைபெற்றது. 



 



இதில் பாடிகாட்டுகளால் (பவுன்சர்கள்) கட்டுபடுத்த முடியாத பட்சத்தில் காவல்துறையினர் வந்து கூட்டத்தை விலக்க முயற்சி செய்தனர். இதனால் மக்கள் சிலர் அடி உதைபட்டு அவதிப்பட்டு சென்றனர். 



 



பாடிகாட்களாலும் சமாளிக்க முடியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவே களத்தில் இறங்கி கூட்டத்தை விளக்கி கொண்டிருந்தார். கோடிகணக்கான பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஏன் இந்த கஷ்டம். அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்ய பொறுப்பை ஒப்படைத்த நபர் இதை ஒழுங்காக செய்திருந்தால் ஏன் இந்த அவலம்.



 



விழாவை சரியாக ஒருங்கிணைப்பு செய்யாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் சரியாக செய்யாததே இதற்க்கு காரணம். 



 



இந்த விழாவை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலால் வெளியில் உள்ள மற்ற மக்களும் அவதிக்குள்ளாயினர். இதே இந்த விழாவை ஊருக்கு வெளியில் உள்ள ஏதேனும் இடத்தில ஏற்பாடு செய்திருந்தால் இந்த பிரச்சினைகள் நேர்ந்திருக்காது.



 



இனி வரும் காலங்களில் இது போன்ற விழாக்கள் நடத்துபவர்கள் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க கவனம் செலுத்துவார்களா...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா