சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Updated on : 21 March 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது.



 



கோலாகலமாக நடக்க வேண்டிய இந்த இசை வெளியீட்டு விழா இன்று பெரும் அமளியில் நடந்தது. திரையரங்கின் உள்ளே விழா விமர்சையாக நடந்தாலும் திரையரங்கின் வெளியே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அடிதடியுடன் கூடிய பரபரப்பு சம்பவங்கள் பல நடந்தன. 



 



படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்னவோ மிகவும் பாதுகாப்பாக அரங்கின் உள்ளே சென்றாலும், படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள், மீனா மற்றும் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர், சோபா சந்திரசேகர் உட்பட பலர் கூட்ட நெரிசலில் மாட்டி அவதிப்பட்டு உள்ளே வந்தனர்.



 





 



மேலும் பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல மிகவும் கெடுபிடியாக இருந்தது. தெருக்கு தெரு பேனர் மூலமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் விழாவில் மக்கள் அலைமோதி பெரும் கலவரமே நடைபெற்றது. 



 



இதில் பாடிகாட்டுகளால் (பவுன்சர்கள்) கட்டுபடுத்த முடியாத பட்சத்தில் காவல்துறையினர் வந்து கூட்டத்தை விலக்க முயற்சி செய்தனர். இதனால் மக்கள் சிலர் அடி உதைபட்டு அவதிப்பட்டு சென்றனர். 



 



பாடிகாட்களாலும் சமாளிக்க முடியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவே களத்தில் இறங்கி கூட்டத்தை விளக்கி கொண்டிருந்தார். கோடிகணக்கான பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஏன் இந்த கஷ்டம். அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்ய பொறுப்பை ஒப்படைத்த நபர் இதை ஒழுங்காக செய்திருந்தால் ஏன் இந்த அவலம்.



 



விழாவை சரியாக ஒருங்கிணைப்பு செய்யாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் சரியாக செய்யாததே இதற்க்கு காரணம். 



 



இந்த விழாவை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலால் வெளியில் உள்ள மற்ற மக்களும் அவதிக்குள்ளாயினர். இதே இந்த விழாவை ஊருக்கு வெளியில் உள்ள ஏதேனும் இடத்தில ஏற்பாடு செய்திருந்தால் இந்த பிரச்சினைகள் நேர்ந்திருக்காது.



 



இனி வரும் காலங்களில் இது போன்ற விழாக்கள் நடத்துபவர்கள் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க கவனம் செலுத்துவார்களா...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா