சற்று முன்

32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |   

சினிமா செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Updated on : 21 March 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது.



 



கோலாகலமாக நடக்க வேண்டிய இந்த இசை வெளியீட்டு விழா இன்று பெரும் அமளியில் நடந்தது. திரையரங்கின் உள்ளே விழா விமர்சையாக நடந்தாலும் திரையரங்கின் வெளியே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அடிதடியுடன் கூடிய பரபரப்பு சம்பவங்கள் பல நடந்தன. 



 



படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்னவோ மிகவும் பாதுகாப்பாக அரங்கின் உள்ளே சென்றாலும், படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள், மீனா மற்றும் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர், சோபா சந்திரசேகர் உட்பட பலர் கூட்ட நெரிசலில் மாட்டி அவதிப்பட்டு உள்ளே வந்தனர்.



 





 



மேலும் பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல மிகவும் கெடுபிடியாக இருந்தது. தெருக்கு தெரு பேனர் மூலமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் விழாவில் மக்கள் அலைமோதி பெரும் கலவரமே நடைபெற்றது. 



 



இதில் பாடிகாட்டுகளால் (பவுன்சர்கள்) கட்டுபடுத்த முடியாத பட்சத்தில் காவல்துறையினர் வந்து கூட்டத்தை விலக்க முயற்சி செய்தனர். இதனால் மக்கள் சிலர் அடி உதைபட்டு அவதிப்பட்டு சென்றனர். 



 



பாடிகாட்களாலும் சமாளிக்க முடியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவே களத்தில் இறங்கி கூட்டத்தை விளக்கி கொண்டிருந்தார். கோடிகணக்கான பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஏன் இந்த கஷ்டம். அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்ய பொறுப்பை ஒப்படைத்த நபர் இதை ஒழுங்காக செய்திருந்தால் ஏன் இந்த அவலம்.



 



விழாவை சரியாக ஒருங்கிணைப்பு செய்யாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் சரியாக செய்யாததே இதற்க்கு காரணம். 



 



இந்த விழாவை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலால் வெளியில் உள்ள மற்ற மக்களும் அவதிக்குள்ளாயினர். இதே இந்த விழாவை ஊருக்கு வெளியில் உள்ள ஏதேனும் இடத்தில ஏற்பாடு செய்திருந்தால் இந்த பிரச்சினைகள் நேர்ந்திருக்காது.



 



இனி வரும் காலங்களில் இது போன்ற விழாக்கள் நடத்துபவர்கள் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க கவனம் செலுத்துவார்களா...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா