சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Updated on : 21 March 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது.



 



கோலாகலமாக நடக்க வேண்டிய இந்த இசை வெளியீட்டு விழா இன்று பெரும் அமளியில் நடந்தது. திரையரங்கின் உள்ளே விழா விமர்சையாக நடந்தாலும் திரையரங்கின் வெளியே பெரும் கூட்ட நெரிசல் காரணமாக அடிதடியுடன் கூடிய பரபரப்பு சம்பவங்கள் பல நடந்தன. 



 



படத்தில் நடித்த பெரிய நடிகர்கள் என்னவோ மிகவும் பாதுகாப்பாக அரங்கின் உள்ளே சென்றாலும், படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நடிகை மீனாவின் மகள், மீனா மற்றும் விஜய்யின் பெற்றோரான சந்திரசேகர், சோபா சந்திரசேகர் உட்பட பலர் கூட்ட நெரிசலில் மாட்டி அவதிப்பட்டு உள்ளே வந்தனர்.



 





 



மேலும் பத்திரிகையாளர்கள் கூட உள்ளே செல்ல மிகவும் கெடுபிடியாக இருந்தது. தெருக்கு தெரு பேனர் மூலமாக மக்களுக்கு அழைப்பு விடுத்ததால் விழாவில் மக்கள் அலைமோதி பெரும் கலவரமே நடைபெற்றது. 



 



இதில் பாடிகாட்டுகளால் (பவுன்சர்கள்) கட்டுபடுத்த முடியாத பட்சத்தில் காவல்துறையினர் வந்து கூட்டத்தை விலக்க முயற்சி செய்தனர். இதனால் மக்கள் சிலர் அடி உதைபட்டு அவதிப்பட்டு சென்றனர். 



 



பாடிகாட்களாலும் சமாளிக்க முடியாத நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணுவே களத்தில் இறங்கி கூட்டத்தை விளக்கி கொண்டிருந்தார். கோடிகணக்கான பணம் போட்டு படம் எடுத்த தயாரிப்பாளருக்கு ஏன் இந்த கஷ்டம். அவர் இந்த விழாவை ஏற்பாடு செய்ய பொறுப்பை ஒப்படைத்த நபர் இதை ஒழுங்காக செய்திருந்தால் ஏன் இந்த அவலம்.



 



விழாவை சரியாக ஒருங்கிணைப்பு செய்யாததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் சரியாக செய்யாததே இதற்க்கு காரணம். 



 



இந்த விழாவை சத்யம் திரையரங்கில் ஏற்பாடு செய்ததால் ரசிகர்கள் மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலால் வெளியில் உள்ள மற்ற மக்களும் அவதிக்குள்ளாயினர். இதே இந்த விழாவை ஊருக்கு வெளியில் உள்ள ஏதேனும் இடத்தில ஏற்பாடு செய்திருந்தால் இந்த பிரச்சினைகள் நேர்ந்திருக்காது.



 



இனி வரும் காலங்களில் இது போன்ற விழாக்கள் நடத்துபவர்கள் இது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க கவனம் செலுத்துவார்களா...

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா