சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

கே.வி.மகாதேவன் நூற்றாண்டு விழா
Updated on : 10 May 2018

திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா 

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!



 





திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா சமீபத்தில்   சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில் நடை  பெற்றது.பிரபல இயக்குநர் முக்தா சீனிவாசன் அவர்களின் ஆலோசனையின்படி இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள்.



 



 



விழாவில் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா , வாணி ஜெயராம், டி.எல்.மகாராஜன் , கவிஞர்கள் பூவை. செங்குட்டுவன் , பிறை சூடன் , நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் , மலேசியா டத்தோ வசீர் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். .விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பேசும் போது 



 





இவ்விழாவை நடத்தும் எம்.எஸ்.வி. யின் இசை ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மாமா கே.வி.மகாதேவன் அவர்கள் பெரிய இசைமேதை மட்டுமல்ல மிகச் சிறந்த மனித நேயம் மிக்கவராக இருந்தார். அவர் கலைஞர்களின் மனம் கோணாமல் வேலை வாங்கினார் .அவருடன் ஈருடல் ஓர் இதயம் போலிருந்தவர் புகழேந்தி அவர்கள் .எனக்கு ஸ்வர ஞானம் கிடையாது. கேள்வி ஞானம் மட்டும் தான் .நான் எல்லாம் சங்கராபரணம் படத்தில் பாடினேன் என்றால் அந்த ஞானம் ,அது அவர் போட்ட பிச்சை என்பேன். எனக்கு எது வருமோ அதைப் பாடக் கொடுப்பார்.அவர் கவிஞர்களை மதிப்பவர். வார்த்தைகள் எழுத வைத்து மெட்டு போட்டவர்.பாட்டுக்குத்தான் மெட்டு என்பார்.



 



 





நான் சொல்கிறேன் அவர் சொன்னது சரிதான். ஒரு பாட்டுக்கு பெயரே அதன் வார்த்தைகள் தான், வார்த்தை இல்லாமல் பாட்டு ஏதய்யா? வார்த்தை இல்லாமல் வெறும் இசை பாடலாகாது. வெறும் ததா தா…. என்று  வரிகள் இல்லாமல்  வெறும் ராகம் பாட முடியுமா?



 



 





சிலரைப்  பெரிய இசை மேதைகள் என்பார்கள். யாரையும் மதிக்க மாட்டார்கள். அருகில் யாரையும் சேர்க்க மாட்டார்கள் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் மாமா கே.வி.எம். சிறந்த மனிதாபிமானி. பல பேருக்கு வாழ்வு கொடுத்தவர். நான் எடுப்பார் கைப்பிள்ளை .என்னைப் பலரும் அன்பு காட்டி வளர்த்து இருக்கிறார்கள். அவர்களில் கே.வி.எம். முக்கியமானவர். உரிமையோடு என்னை அன்புடன் நடத்தி வளர்த்தவர். ” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.விழாவில் கே.வி.மகாதேவன் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னதாக சத்யாவின் கீதாஞ்சலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



 





மேடையில் இசைக்குழுவினர்களோடு பி.சுசிலா,எஸ்.பி.பி.,வாணி ஜெயராம் மூவரும் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் பாடிய....அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்ற ""ஆயிரம்..நிலவே ..வா...,""சங்கராபரணம் படத்திலிருந்து ""சங்கரா ....,"மானஸ சன்சரே...." இதயக்கமலம் படத்திலிருந்து :உன்னைக்காணாத ..கண்ணும்..கண்ணல்ல..", பல்லாண்டு வாழ்க படத்திலிருந்து "இன்று  சொர்க்கத்தில் திறப்பு விழா, போன்ற பாடல்களைப்பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். 



 





விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் முக்தா ரவியும், எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர் மன்றத் தலைவர் விஜய கிருஷ்ணனும் வர வேற்றார்கள் .



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா