சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

கலைஞர் புகழ் வணக்கம் - கவிஞர் வைரமுத்து
Updated on : 16 August 2018

தி.மு.க தலைவரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் கவிஞர் வைரமுத்து நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த நிகழ்வுக்குக் ‘கலைஞர் புகழ் வணக்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.



கலைஞரைத் தன் தமிழாசான் என்று எப்போதும் சொல்லிவரும் கவிஞர் வைரமுத்து 35 ஆண்டுகளாய்க் கலைஞரோடு அரசியல் சாராமல் நெருக்கமாய் இருந்தவர்.  இருவரும் ஒவ்வோர் அதிகாலையிலும் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வந்தவர்கள். கலைஞர் நூல்களை வைரமுத்துவும், வைரமுத்துவின் நூல்களைக் கலைஞரும் வெளியிட்டிருக்கிறார்கள்.



‘ஒரு நூற்றாண்டைப் புதைத்துவிட்டோம்’ என்று கலைஞர் நினைவிடத்தில் அழுது புலம்பிய கவிஞர் வைரமுத்து அறிவுலகத்தின் சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்துகிறார். ஆகஸ்ட் 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘தி மியூசிக் அகாடமி’ அரங்கில் கலைஞர் புகழ் வணக்கம் நிகழ்கிறது.



தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா, இயக்குநர் பாரதிராஜா, நக்கீரன் கோபால், பேராசிரியர் தமிழச்சி தங்கப்பாண்டியன், நடிகர் விவேக் ஆகியோர் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் மலர் வணக்கம் செலுத்திய பிறகு அவையில் அமர்ந்திருக்கும் முக்கியப் பிரமுகர்கள் மேடைக்கு வந்து கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்துகிறார்கள்.



கவிஞர் கபிலன் வைரமுத்து நிகழ்வை நெறிப்படுத்துகிறார். வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார், ஒருங்கிணைப்பாளர் நா.வெங்கடேஷ், சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், செல்லத்துரை, காதர் மைதீன், சண்முகம் ஆகியோர் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா