சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

வைகோ தலைமையில் தமிழாற்றுப்படை கால்டுவெல் பற்றி கட்டுரை அரங்கேற்றுகிறார் கவிஞர் வைரமுத்து
Updated on : 25 August 2018

தமிழாற்றுப்படை என்ற வரிசையில் தமிழின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளைப் புதிய தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தோடு கவிஞர் வைரமுத்து கட்டுரைகள் எழுதி அரங்கேற்றம் செய்து வருகிறார்.



இதுவரை தொல்காப்பியர் - திருவள்ளுவர் - இளங்கோவடிகள் - செயங்கொண்டார் - கம்பர் - அப்பர் – ஆண்டாள் - திருமூலர் –– வள்ளலார் - உ.வே.சாமிநாதையர் - பாரதியார் – பாரதிதாசன் - கலைஞர் – மறைமலையடிகள் - புதுமைப்பித்தன் –- கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் என்று 18 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 19ஆம் படைப்பாகக் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ கண்ட கால்டுவெல் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதி அரங்கேற்றுகிறார்.



ஆகஸ்ட் 25 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தையர் வேதநாயகம் மற்றும் ஜான் கென்னடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் மதுரா வாழ்த்துரை வழங்குகிறார். விழாவைத் திருநெல்வேலி பைந்தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருக்கிறது.



நெல்லை பைந்தமிழ் மன்றச் செயலாளர் செ.திவான், ம.தி.மு.க நெல்லை மாநகரச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், ம.தி.மு.க புறநகர் மாவட்டச் செயலாளர் தி.மு.இராஜேந்திரன், வெற்றித்தமிழர் பேரவை நிர்வாகிகள் கோவில்பட்டி நாகஜோதி, ஒளிப்பதிவாளர் செல்லத்துரை, சிவகாசி ரவி, மதுரை சுரேஷ் யு.எஸ்.டி.சீனிவாசன், நெல்லை ஹரிஹரன், மருக்காலங்குளம் வைரமுத்துதாசன், செங்கோட்டை முரளி, கொட்டாகுளம் முருகன், கடையம் சொக்கலிங்கம், அச்சம்பட்டி செல்லத்துரை உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா