சற்று முன்

வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |   

சினிமா செய்திகள்

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை அறிக்கை
Updated on : 09 September 2018

வணக்கத்துக்குரிய பெருமக்களே!



27 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் தமது வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கும் நம் பிள்ளைகள் பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உங்களால் விடுதலை பெற்று சுதந்திரக்காற்றை சுவாசித்து தத்தமது தாய்தந்தையரோடும் சகோதர சகோதரிகளோடும் மகன்களோடும் மகள்களோடும் தமக்கென எஞ்சியிருக்கும் வாழ்வை மேற்கொள்ளும் வரம் பெறக் காத்திருக்கிறார்கள்.



நெடிய மதில்களுக்கிடையில் நீண்டகாலமாக சுழன்றுக் கொண்டிருக்கும் அவர்களது வெப்பம் மிகுந்த பெருமுச்சுகள் உங்களால் சுவாசம் பெறட்டும்.



அனைத்து துன்பப் பூட்டுகளுக்குமான திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே எனும் அண்ணல் அம்பேத்காரின் கூற்று உங்களால் உயிர் பெறட்டும்.



நம் பிள்ளைகளின் கைகளைத் தரித்திருக்கும் துன்பப்பூட்டுகளை உங்களது கைகளில் திகழும் ஆட்சி அதிகாரம் எனும் திறவுகோல் கொண்டு திறந்துவிடுங்கள்.



உலகமெங்கும் பரவி வாழும் 12 கோடி தமிழர்கள் நீங்கள் இருக்கும் தசைநோக்கி வணங்கி நிற்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய தீர்மானம் அவர்களின் வழியில் ஆட்சி செய்யும் உங்களது அமைச்சரவையால் சாத்தியமாகும் வரலாற்று  தருணம் வாய்த்திருக்கிறது. நம் பிள்ளைகள் சுதந்திரமாக சிறகடித்து வெளிவரும் வரம் ஒரு பச்சைத் தமிழரால் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே காலம் இதுவரை காத்திருந்ததாக உணர்கிறோம்.



உங்களது தலைமையிலான அமைச்சரவை இன்று இயற்றும் தீர்மானம் கோடானகோடி தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தரமான இடத்தை ஏற்படுத்தும்.



சாதாரண ஒரு குடிமகன், தானே ஆட்சியில் இருப்பதாக உணரச்செய்யும் உங்களது எளிமையும் கனிவும் ஏழு தமிழ்ப்பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நெடுங்காலக் கண்ணீரை துடைக்கப்போகும் கருணையும் என்றென்றும் எல்லோராலும் நினைவு கூறப்படும்.



நினைத்து பார்ப்பவன் மனிதன், நினைவில் நிற்பவனே மாமனிதன். வாழும் மண்ணும் உள்ளளவும் நீங்கள் தமிழ்த் தலைமுறையால் மாமனிதராக நினைவு கூறப்படுவீர்கள்.



 



ஏழு தமிழர்களும் மட்டுமல்லாது ஏனைய தமிழர்கள் அனைவரும் உங்களை குலசாமியாக கொண்டாடுவார்கள். 27 ஆண்டுகள் சிறையில் வாடிய ஏழு பேரும் தமது வாழ்நாள் முடிவதற்குள் எல்லோரையும் போல நாமும் வாழ்ந்து விடமாட்டோமா என்று ஏங்கித்தவித்த தவிப்பு உங்களால் முடிவுக்கும் வரப்போகிறது என்று முழுமையாக நம்பிக் காத்திருக்கிறோம்.



அரசியலைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மாநில அரசுக்கான இறையாண்மை அதிகாரம் எனும் நல்லதிகாரத்தை பயன்படுத்தி உங்களை நம்பிக்காத்திருக்கும் அவர்கள் ஏழு பேரின் வாழ்வில் ஒளியேற்றுங்கள் என்று உங்களை வணங்கி வேண்டுகிறோம்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா