சற்று முன்

ஜிப்ரானின் வசீகரிக்கும் பின்னணி இசையில் அதர்வா முரளி - நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ'   |    சண்முகபாண்டியன் விஜயகாந்த் நடித்துள்ள 'படை தலைவன்' விரைவில் வெளிவர உள்ளது   |    சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |   

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் உடன் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான அனுபவம் - அனல் அரசு
Updated on : 12 September 2018

இந்திய அளவில் பேசப்படும், கொண்டாடப்படும், முன்னணி சூப்பர் ஸ்டார் ஹீரோக்களின் தேர்வாக இருக்கும் ஒரு சண்டைப்பயிற்சியாளர் அனல் அரசு. கடவுளின் தேசமான கேரளாவில் இருந்து மும்பையின் பாலிவுட் வரை தனது அதிரடியான சண்டைக்காட்சிகளால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறார். அவரே 'சீமராஜா'வில் சிவகார்த்திகேயன் உடன் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான அனுபவம் என கூறுகிறார். 



அவர் கூறும்போது, "ஆம், சிவகார்த்திகேயனுடன் பணிபுரிவதில் உள்ள விசேஷமான ஒரு விஷயம், அவர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கும் போது குழந்தைகளை மனதில் நினைக்கும் இயல்புடைய ஒரு நடிகர். அவருடன் நான் ஏற்கனவே பணிபுரிந்த ரெமோ மற்றும் சீமராஜா இரண்டுமே என்னுடைய மற்ற திரைப்படங்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அனுபவமாக இருந்தது. பல ஹீரோக்கள் வன்முறை மற்றும் இரத்தக்களரி சண்டைக்காட்சிகளை விரும்புகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை பார்க்கும் சண்டைக் காட்சிகளை விரும்புபவர். இது அவர் எளிமையான, சாதாரண சண்டையை விரும்புகிறார் என்று அர்த்தமல்ல. அவர் டூப் இல்லாமல் அபாயகரமான சண்டைக் காட்சிகளிலும் முழுமுயற்சியோடு நடிக்கிறார். இது நான் பெயருக்காக சொல்லும் வார்த்தைகள் இல்லை, திரையரங்குகளில் பார்க்கும்போது நீங்களே உணர்வீர்கள். சிவகார்த்திகேயன் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், சண்டைக் கலைஞர்கள் அவரால் தவறுதலாக காயப்படுத்தப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார். சில நேரங்களில், எங்கள் குழுவினர் எந்தவித தயக்கமும் இன்றி எங்களை அடிங்க என கேட்கும்போதும், அவர் எதுவும் தவறாக நடக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார்" என்றார்.



சீமராஜா படத்தை பற்றி அவர் கூறும்போது, "இந்த திரைப்படம் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டது, ஆனால் சண்டைக காட்சிகள் தான் சவாலாக இருந்தது. சிவகார்த்திகேயனின் உயர்ந்து வரும் நட்சத்திர மதிப்புக்கு ஏற்றவாறும், அதே சமயத்தில் வன்முறை இல்லாமல், ரசிக்கும் விதத்திலும் உருவாக்க முயற்சித்திருக்கிறேன்" என்றார். 



24AM ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா மிகபிரமாண்டமாக் தயாரிக்க, பொன்ராம் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி, லால் மற்றும் இன்னும் பல நட்சத்திரங்கள்  நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா