சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

ஆக்சன் ஹீரோவாக வேண்டும் - நடிகர் வின்ஸ்குமார்
Updated on : 19 September 2018

தமிழ் திரையுலகில் எத்தனையோ புதுமுக நடிகர்கள் தினந்தோறும் அறிமுகமாகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே வெற்றிப்பெறுகிறார்கள். அந்த சிலரின் பட்டியலில் இடம்பிடித்துவிட போராடும் பலரில் வின்ஸ்குமாரும் ஒருவர். கப்பல் படையில் விமானத்துறையில் பணியாற்றியவர் . தற்போது திரைதுறையில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ‘போலீஸ் வலை’ என்ற படத்தின் படபிடிப்பின் போது அவரைச் சந்தித்தோம். 



    நடிகரானதன் பின்னணி குறித்து..? 



மார்த்தாண்டம் (கன்னியாகுமரி மாவட்டம்)அருகே உள்ள S.T மாங்காடு கிராமத்தில் பிறந்தேன்  . நடிப்பின் மீதான ஆர்வத்தின் காரணமாக மும்பையில் கப்பற்படையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது விடுமுறை தினங்களில் மாடலிங்கில் ஈடுபட்டேன். பதினைந்து ஆண்டு காலம் கப்பற்படையில் பணியாற்றிவிட்டு, ஒய்வுபெற்ற பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வம் குறையாமல் இருந்ததால் நடிகரானேன்.



நடிகராகுவதற்கு எப்படி தயார்படுத்திக் கொண்டீர்கள்?



கப்பல் படையில் பணியாற்றியதால் விளையாட்டு துறையில் ஆர்வம் அதிகம். நீச்சல் போன்ற சாகச பயிற்சிகளையும் எடுத்திருக்கிறேன். தமிழ், ஹிந்தி, மலையாளம்,ஆங்கிலம்  உள்ளிட்ட பல மொழிகளில் பேசவும் தெரியும். ஜேம்ஸ்பாண்ட், ஜாக்கிசான் படங்களை விரும்பி பார்ப்பேன். பாடுவதற்கும், நடனமாடுவதற்கும் பயிற்சி எடுத்திருக்கிறேன். 



முதல் வாய்ப்பு எப்படி கிடைத்தது?



இயக்குநர் நிஸார் இயக்கிய ‘லாஃபிங் அபார்ட்மெண்ட் ’என்ற மலையாளப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகராக அறிமுகமானேன். பிறகு காத்தவராயன் , காந்தர்வன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சலங்கை துரை இயக்கத்தில் நடிகை கஸ்தூரி நடிப்பில் உருவாகி வரும் ‘போலீஸ் வலை ’ என்ற தமிழ் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறேன்.



அடுத்து...?



எனக்கு ஆக்சன் காட்சிகளில் நடித்து காமெடி வித் ஆக்சன் ஹீரோவாக மிளிரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. தமிழ் ரசிகர்களும், இயக்குநர்களும் எனக்கு வாய்ப்பளித்தால் கலைசேவை செய்ய தயாராகவேயிருக்கிறேன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா