சற்று முன்

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு!   |    அஜித்துடன் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறியதாக கூறும் நடிகை   |    நடிகர் சூர்யா பத்து கோடி ரூபாய் நிதியுதவி!   |    இரண்டு நிமிசம் ட்ரெய்லரை பார்த்து கண் கலங்குவது என்பது இதுதான் முதல் முறை! - சிறுத்தை சிவா   |    இயக்குநர் மிஷ்கின், துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் 'ஐ அம் கேம்' பூஜையுடன் துவங்கியது!   |    தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் துருவ் விக்ரம் நடிக்கும் படம் 'பைசன் காளமடான்' வெளியாகிறது!   |    துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான 'ஐ அம் கேம்' படத்தில் இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்   |    ஓடிடி- யில் உலகில் சாதனை படைத்து வருகிறது ZEE5-இன் 'அய்யனா மானே' சீரிஸ்!   |    'நாக் நாக்' கில், நான் கதாநாயகனாக இருக்கலாம். ஆனால் நான் ஹீரோ கிடையாது - இயக்குநர் ராகவ் ரங்கநாதன   |    பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் #STR49 பூஜையுடன் துவங்கியது!   |    முன்னணி திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'மனிதர்கள்' அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடிக்கும் 'அடங்காதே'   |    உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட 'லெவன்' பட டிரெய்லர்!   |    நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சென்னையில் ஆரம்பித்து வைத்த 'துகில்' நிறுவனத்தின் புதிய கிளை!   |    நடிகர் சூரி நடிப்புத் திறமையின் மற்றொரு முகத்தை, பதிவு செய்யும் படமாக 'மாமன்' இருக்கும்   |    ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள மக்கள் மனம் கவர்ந்த 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் புரோமோ!   |    வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வைடாக பார்ப்பவன் நான் - ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்!   |    என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள் - பேரரசு!   |    தமிழ் சினிமாவின் அடையாளமாக டூரிஸ்ட் ஃபேமிலி இருக்கும் - இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்   |    விஜய் சேதுபதி படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்!   |   

சினிமா செய்திகள்

தமிழில் இன்னும் நிறைய தேசிய விருதுகள் பெற வேண்டும்: இயக்குனர் வசந்த்
Updated on : 03 April 2016

63-வது தேசிய விருதுகளில் வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நேற்று(02.04.2016) பாராட்டு விழா நடைபெற்றது.



 



இதில், யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் அவர்களும், எ ஃபேர் ஆப்டர் நூன்: எ பெயிண்டட் சகா(A Far Afternoon: A Painted Saga) ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சுருதி ஹரிஹர சுப்ரமணியன் அவர்களும், இதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த்-ஷங்கர் மற்றும் தாயரிப்பாளர் அஷ்வின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம்பெற்ற இயக்குனர் வசந்த், படத்தொகுப்பாளர் பி.லெனின், சென்னை திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ், தேசிய திரைப்பட விழாக்களின் இயக்குனராக இருந்த சந்தானம், ஊடாவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய இயக்குனர் வசந்த், "வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் மொத்தம் 24 தேசிய விருது வழங்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு தமிழ் படைப்பாளிகள் 3 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர வேண்டும். வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் வழங்கப்படும் தேசிய விருதுகள் குறித்த புரிதல் நமது படைப்பாளிகளுக்கு இன்னும் அதிகமாக ஏற்பட வேண்டுமென்று" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா