சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

தமிழில் இன்னும் நிறைய தேசிய விருதுகள் பெற வேண்டும்: இயக்குனர் வசந்த்
Updated on : 03 April 2016

63-வது தேசிய விருதுகளில் வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நேற்று(02.04.2016) பாராட்டு விழா நடைபெற்றது.



 



இதில், யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் அவர்களும், எ ஃபேர் ஆப்டர் நூன்: எ பெயிண்டட் சகா(A Far Afternoon: A Painted Saga) ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சுருதி ஹரிஹர சுப்ரமணியன் அவர்களும், இதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த்-ஷங்கர் மற்றும் தாயரிப்பாளர் அஷ்வின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம்பெற்ற இயக்குனர் வசந்த், படத்தொகுப்பாளர் பி.லெனின், சென்னை திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ், தேசிய திரைப்பட விழாக்களின் இயக்குனராக இருந்த சந்தானம், ஊடாவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய இயக்குனர் வசந்த், "வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் மொத்தம் 24 தேசிய விருது வழங்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு தமிழ் படைப்பாளிகள் 3 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர வேண்டும். வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் வழங்கப்படும் தேசிய விருதுகள் குறித்த புரிதல் நமது படைப்பாளிகளுக்கு இன்னும் அதிகமாக ஏற்பட வேண்டுமென்று" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா