சற்று முன்

54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |    மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக இணைந்துள்ள 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி!   |    படு மிரட்டலான “கட்டாளன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!   |    நட்சத்திர கூட்டணியில் உருவாகும் 'தி பாரடைஸ் ' படத்தின் பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு   |    பத்து நிமிடம் பழகியவுடன் யுவன் ஒரு ஸ்வீட்ஹார்ட் என தெரிந்து கொண்டேன் - இயக்குநர் பொன் ராம்   |    ஜெய் நடிக்கும் புதிய படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது!   |    மார்ச் 1, 2025 அன்று காமெடி டிராமா 'சங்கராந்திகி வஸ்துனம்' ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது   |    ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி நைந்த்து நடிக்கும் 'கிங்ஸ்டன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு   |    மோகன்லால் நடிக்கும் 'L2 : எம்புரான்' படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர்!   |    SUN NXT தளத்தில், தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் “பைரதி ரணகல்”   |   

சினிமா செய்திகள்

தமிழில் இன்னும் நிறைய தேசிய விருதுகள் பெற வேண்டும்: இயக்குனர் வசந்த்
Updated on : 03 April 2016

63-வது தேசிய விருதுகளில் வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நேற்று(02.04.2016) பாராட்டு விழா நடைபெற்றது.



 



இதில், யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் அவர்களும், எ ஃபேர் ஆப்டர் நூன்: எ பெயிண்டட் சகா(A Far Afternoon: A Painted Saga) ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சுருதி ஹரிஹர சுப்ரமணியன் அவர்களும், இதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த்-ஷங்கர் மற்றும் தாயரிப்பாளர் அஷ்வின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம்பெற்ற இயக்குனர் வசந்த், படத்தொகுப்பாளர் பி.லெனின், சென்னை திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ், தேசிய திரைப்பட விழாக்களின் இயக்குனராக இருந்த சந்தானம், ஊடாவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய இயக்குனர் வசந்த், "வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் மொத்தம் 24 தேசிய விருது வழங்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு தமிழ் படைப்பாளிகள் 3 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர வேண்டும். வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் வழங்கப்படும் தேசிய விருதுகள் குறித்த புரிதல் நமது படைப்பாளிகளுக்கு இன்னும் அதிகமாக ஏற்பட வேண்டுமென்று" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா