சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தமிழில் இன்னும் நிறைய தேசிய விருதுகள் பெற வேண்டும்: இயக்குனர் வசந்த்
Updated on : 03 April 2016

63-வது தேசிய விருதுகளில் வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நேற்று(02.04.2016) பாராட்டு விழா நடைபெற்றது.



 



இதில், யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி அவர்கள் குறித்த ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற அம்ஷன் குமார் அவர்களும், எ ஃபேர் ஆப்டர் நூன்: எ பெயிண்டட் சகா(A Far Afternoon: A Painted Saga) ஆவணப்படத்திற்காக தேசிய விருது பெற்ற சுருதி ஹரிஹர சுப்ரமணியன் அவர்களும், இதே படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த்-ஷங்கர் மற்றும் தாயரிப்பாளர் அஷ்வின் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.



 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய விருதுகள் தேர்வு குழுவில் இடம்பெற்ற இயக்குனர் வசந்த், படத்தொகுப்பாளர் பி.லெனின், சென்னை திரைப்பட விழாவின் தலைவர் தங்கராஜ், தேசிய திரைப்பட விழாக்களின் இயக்குனராக இருந்த சந்தானம், ஊடாவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.



 



விழாவில் பேசிய இயக்குனர் வசந்த், "வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் மொத்தம் 24 தேசிய விருது வழங்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு தமிழ் படைப்பாளிகள் 3 விருதுகளை மட்டுமே பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை உயர வேண்டும். வெகுஜன சினிமா அல்லாத பிரிவில் வழங்கப்படும் தேசிய விருதுகள் குறித்த புரிதல் நமது படைப்பாளிகளுக்கு இன்னும் அதிகமாக ஏற்பட வேண்டுமென்று" கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா