சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

தெற்கு ஆசியாவின் ஒரே ஐஸ் க்ரீம் கண்காட்சி! - சென்னையில் நடைபெறுகிறது
Updated on : 09 October 2018

தெற்கு ஆசியாவின் ஒரே ஐஸ் க்ரீம் நிகழ்ச்சியாக நடைபெறும் ‘இந்தியன் ஐஸ் க்ரீம் காங்கிரஸ் மற்றும் 





கண்காட்சி’ (IICE) 8 வது முறையாக சென்னையில் அக்டோபர் 8,9 ஆகிய இரண்டு தினங்கள், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் செண்டரில் நடைபெறுகிறது.



 



இன்று (அக்டோபர் 8) நடைபெற்ற துவக்க விழாவில் மாண்புமிகு தமிழக கவர்னர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்துக்கொண்டு ஐஸ் க்ரீம் காங்கிரஸ் மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.



 



இந்நிகழ்வில் வரவேற்பு நிகழ்த்திய ஐ.ஐ.சி.எம்.ஏ-வின் தலைவர் ராஜேஷ் காந்தி, “இந்தியன் ஐஸ் க்ரீம்  காங்கிரஸ் மற்றும் கண்காட்சி அனைத்து ஐஸ் க்ரீம் நிறுவனங்களுக்கும் சிறந்த வழிக்காட்டியாகவும், சிறந்த தொழில்நுட்பத்தை வளர்த்துக் கொள்வதற்கான சிறந்த தளமாக விளங்குவதோடு, புதிய யுக்திகள் 

மற்றும் டிரெண்டான விஷயங்களை அறிந்துக்கொள்வதற்கு வழிவகுக்கிறது. இந்திய ஐஸ் கிரீம் தொழிலுக்கான வருடாந்திர மிகப்பெரிய விழாவாகவும் கடந்த 8 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு ஐஸ் க்ரீம் நிறுவனங்கள் தங்களது விநியோகஸ்தர்களை மட்டும் சந்திப்பதில்லை, பலவிதமான சேவைகளுடன், இந்தியாவின் அனைத்துப் பகுதிகள், கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் 

சேர்ந்த பல வகைகளையும் இங்கு சந்திக்கிறார்கள்.



 



வாடிக்கையாளர்களிடன் தேவைக்கு ஏற்பவும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்பவும் புதிய வகைகளில் ஐஸ் க்ரீம்களை தயாரிக்கவும், புதிய யுக்திகளை பயன்படுத்த அறிந்துக்கொள்வதற்கும் இந்த நிகழ்வு முக்கியமான ஒன்றாகும்.” என்று தெரிவித்தார்.



 



 



ஐ.ஐ.சி.எம்.ஏ-வின் செயலாளர் சுதிர் ஷா பேசுகையில், “இந்திய ஐஸ் க்ரீம் தொழில், பால் அல்லது உணவு பதப்படுத்தும் தொழில்துரையின் வேகமாக வளர்ந்து வரும் பிரிவுகளில் ஒன்றாகும். கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.9000 கோடியாக இருந்த இந்திய ஐஸ் க்ரீம் பொருளாதாரம், 2018 ஆம் ஆண்டு ரூ.12,000 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், ஐஸ் க்ரீம் தொழில் ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சி பெற்று வருகிறது.” என்றார்.



 



150 ஸ்டால்கள் போடப்பட்டிருக்கும் இந்த இரண்டு நாட்கள் கண்காட்சியில் சுமார் 5500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், கண்காட்சியுடன் ஐஸ் க்ரீம் துறையில் வர இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த கருத்தரங்கும் நடைபெறுகிறது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா