சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

மே 16-ல் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு: கமல்ஹாசன் தேர்தலில் வாக்களிப்பாரா?
Updated on : 30 April 2016

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் "சபாஷ் நாயுடு" படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.



 



இதனை தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், இந்த படம் குறித்தும் தனது பிற செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பகிர்ந்துக்கொண்டார் கமல்ஹாசன்.



 



இதன்போது இரண்டு மகள்களுடன் பணியாற்றும் அனுபவம் குறித்து வினவியதற்கு பதிலளித்த கமல், "இருவரும் வெவ்வேறு துறைக்கு செல்ல வேண்டியவர்கள். ஆனால் ஸ்ருதி நடிக்க வந்திருக்கிறார், அக்‌ஷரா உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.



 



நான் கூட உதவி இயக்குநர், இயக்கம் என்று தான் இருந்தேன். ஆனால் கே. பாலச்சந்தர் சார் என் வாழ்கையை மாற்றிவிட்டார்" என்றார்.



 



சபாஷ் நாயுடுவின் படப்பிடிப்பு மே 16-ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் தொடங்குவதாக கமல் அறிவித்துள்ளார்.



 



இந்நிலையில், அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதே நீங்கள் வாக்களிக்க மாட்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், அதை வேறு யாரும் செய்துகொள்வார்கள். சென்ற முறையே என்னால் வாக்களிக்க முடியவில்லை. வேறு யாரோ வாக்களித்துவிட்டனர். ஒருவேளை முடிந்தால் வாக்களிப்பேன் என்றார்.



 



இது சமூக வலைதளங்களில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக அக்கறை கொண்ட ஒரு மூத்த கலைஞர் தனது வாக்களிக்கும் கடமையை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என பலர் கூறியுள்ளனர்.



 



இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, இம்முறை கமல்ஹாசனின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. எனவே அவர் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். பொதுமக்களுக்கு ரோல் மாடலாக உள்ள ஒரு கலைஞர், தனது கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று கூறியுள்ளார்.  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா