சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

அரசியலுக்கு கோ-2 நடிப்புக்கு உன்னோடு கா; சிலிர்க்கிறார் பால சரவணன்
Updated on : 02 May 2016

குட்டி புலி  மற்றும்  திருடன் போலீஸ்  படங்களில் தனது கலகல பேச்சுகளாலும், துறுதுறு செயல்களாலும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த பால சரவணன், பல சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மே 13-ஆம் தேதி வெளியாகும்  கோ 2  மற்றும்  உன்னோடு கா  திரைப்படங்கள் தனக்கு இரட்டை விருந்தாக அமையும் என்கிறார் இவர்.



 



"முதல் முறையாக பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் சாருடன் நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த இளம் வயதிலேயே தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுடன் கை கோர்த்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.



 



இந்த படத்தில் நடிப்பதற்கு முன், எனக்கு அரசியலை பற்றி அவ்வளவு விவரம் தெரியாது. ஆனால் இப்பொழுது எனக்கு கொஞ்சம் நஞ்சம் புரிகிறது" என்று கோ-2 அனுபவம் குறித்து  பால சரவணன் கூறியுள்ளார்.



 



இதேபோல், உன்னோடு கா படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய அவர், ஆரி மற்றும்  டார்லிங் 2  புகழ் மாயா  கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் நான் மிஷா கோஷலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.



 



தமிழ் சினிமாவின் மூத்த  முன்னோடி அபிராமி ராமநாதன் சார் அவர்களின் கதையில் உருவாகி இருக்கும்  இந்த படத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த ஒரு வரம். சினிமாவில் அ முதல் ஃ வரை அனைத்தையும் அறிந்த ராமநாதன் சாரின் படத்தில் நடித்தது மூலம், நடிப்பின் ஆழத்தையும், அதன் நுணுக்கங்களையும் நன்றாக கற்று கொண்டேன். நடிப்பு என்னும் துறையில் ஜாம்பாவான்களாக திகழும் பிரபு சார் மற்றும் ஊர்வசி மேடமுடன் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது.



 



மே 13 ஆம் தேதி   ஒரே நாளில் இரண்டுப் படங்கள்  வெளியாவது  நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக தான்  இருக்கும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா