சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அரசியலுக்கு கோ-2 நடிப்புக்கு உன்னோடு கா; சிலிர்க்கிறார் பால சரவணன்
Updated on : 02 May 2016

குட்டி புலி  மற்றும்  திருடன் போலீஸ்  படங்களில் தனது கலகல பேச்சுகளாலும், துறுதுறு செயல்களாலும் மக்களின் மனதில் ஆழமாக பதிந்த பால சரவணன், பல சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. மே 13-ஆம் தேதி வெளியாகும்  கோ 2  மற்றும்  உன்னோடு கா  திரைப்படங்கள் தனக்கு இரட்டை விருந்தாக அமையும் என்கிறார் இவர்.



 



"முதல் முறையாக பல திறமைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜ் சாருடன் நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இந்த இளம் வயதிலேயே தனது நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவுடன் கை கோர்த்ததை நான் பெருமையாக கருதுகிறேன்.



 



இந்த படத்தில் நடிப்பதற்கு முன், எனக்கு அரசியலை பற்றி அவ்வளவு விவரம் தெரியாது. ஆனால் இப்பொழுது எனக்கு கொஞ்சம் நஞ்சம் புரிகிறது" என்று கோ-2 அனுபவம் குறித்து  பால சரவணன் கூறியுள்ளார்.



 



இதேபோல், உன்னோடு கா படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய அவர், ஆரி மற்றும்  டார்லிங் 2  புகழ் மாயா  கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் நான் மிஷா கோஷலுடன் ஜோடி சேர்ந்துள்ளேன்.



 



தமிழ் சினிமாவின் மூத்த  முன்னோடி அபிராமி ராமநாதன் சார் அவர்களின் கதையில் உருவாகி இருக்கும்  இந்த படத்தில் நான் நடிப்பது எனக்கு கிடைத்த ஒரு வரம். சினிமாவில் அ முதல் ஃ வரை அனைத்தையும் அறிந்த ராமநாதன் சாரின் படத்தில் நடித்தது மூலம், நடிப்பின் ஆழத்தையும், அதன் நுணுக்கங்களையும் நன்றாக கற்று கொண்டேன். நடிப்பு என்னும் துறையில் ஜாம்பாவான்களாக திகழும் பிரபு சார் மற்றும் ஊர்வசி மேடமுடன் இணைந்து நடித்ததை என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாது.



 



மே 13 ஆம் தேதி   ஒரே நாளில் இரண்டுப் படங்கள்  வெளியாவது  நிச்சயம் எனக்கு திருப்புமுனையாக தான்  இருக்கும்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா