சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

தேசிய விருதை பெற்றுக்கொள்ளாததற்கு காரணம் என்ன? இசைஞானி விளக்கம்
Updated on : 05 May 2016

இந்திய திரைத்துறைக்கான 63-வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம்(செவ்வாய் கிழமை) டெல்லியில் நடைபெற்றது. இதன்போது, தேசிய விருது வென்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி கௌரவித்தார்.



 



தாரை தப்பட்டை படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருது இசைஞானி இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் விருதை பெற்றுக்கொள்ள வரவில்லை.



 



சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது விசாரணை திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. விசாரணை திரைப்படத்தில் நடித்த சமுத்திரக்கனிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.



 



விசாரணை படத்தின் படத்தொகுப்பாளர் அமரர் கிஷோர் டி.இ அவர்களுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.



 



இந்நிலையில், தேசிய விருதை பெற்றுக்கொள்ளாதமைக்கு விளக்கம் அளித்துள்ள இளையராஜா, இசைக்கான தேசிய விருதை சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் இசையமைப்பு என பிரிப்பதில் உடன்பாடு இல்லை எனவேதான் தேசிய விருது விழாவில் கலந்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா