சற்று முன்

ஜப்பானை கலக்க வரும் ‘புஷ்பா2: தி ரூல்’, டோக்கியோவில் புரமோட் செய்து வரும் அல்லு அர்ஜுன்!   |    ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கனவு கூட்டணி பிரம்மாண்ட மெகா திரைப்படம்!   |    Letterboxd வரலாற்றில் சாதனை – இந்திய அறிமுக இயக்குநராக உலக டாப் டென்னில் அபிஷன் ஜீவிந்த்!   |    ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட விழா சென்னையில் நடைபெற்றது   |    ‘திரௌபதி 2’ – 14 ஆம் நூற்றாண்டை திரையில் பிரம்மாண்டமாக காட்டும் வரலாற்று ஆக்ஷன்!   |    சீனு ராமசாமியின் ‘நிலத்தவள்’ கவிதை நூல் வெளியீடு   |    கார்த்தி, நலன் குமாரசாமி கூட்டணியில் பிரம்மாண்ட பொங்கல் வெளியீடு “வா வாத்தியார்”   |    இரா. சரவணனின் ‘சங்காரம்’ நூல் வெளியீடு சென்னையில் நடைபெற்றது   |    வைரலாகும் ‘லக்கா லக்கா லடுக்கி’ ‘தீராப்பகை’ பட குத்து பாடல்!   |    திகில், திரில்லர், அதிரடி என 2026-ஐ அதிரடியாக தொடங்கிய ZEE5 தமிழ்   |    சர்வதேச திரைப்பட விமர்சன தள தரவரிசையில் ‘பைசன் காலமாடன்’ சாதனை!   |    சென்னையில் இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்ப கருத்தரங்கம்!   |    100 நாட்கள் வெற்றி… உலகத் திரையரங்குகளை நோக்கி 'காந்தாரா சேப்டர் 1'   |    ’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிடியாணை
Updated on : 20 August 2016

இயக்குநர் சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணையை தருமபுரி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.



 



திரைப்படத்தை டிவிடி மூலம் மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்லும் "சிடூஎச்' திட்டத்தை இயக்குநர் சேரன் தொடங்கினார். ஆனால் இந்த முறையானது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.



 



இந்நிலையில், தருமபுரி மாவட்ட சிடூஎச் விநியோகஸ்தராக இருந்த பிரசன்னா வாசுதேவன், தான் செலுத்திய வைப்பு நிதியை திரும்ப கேட்க, அவருக்கு 4.53 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.



 



காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததால், தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் பிரசன்னா வாசுதேவன்  வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான விசாரணைக்காக இரண்டுமுறை அழைக்கப்பட்ட சிடூஎச் நிறுவனத்தின் நிர்வாகியான சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.



 



இதனால் தற்போது நிவேதா பிரியதர்ஷிணிக்கு பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா