சற்று முன்

நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |    32வது படத்தின் மூலம் மீண்டும் ஒரு ப்ளாக் பஸ்டருக்கு தயாராகும் நேச்சுரல் ஸ்டார் நானி!   |    'சுப்ரமண்யா', படத்தின் அசத்தலான ப்ரீ-லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!   |    வெளிநாடுகளில் வெளியீட்டிற்கு முன்பே சாதனைகள் படைக்கும் தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படம்   |   

சினிமா செய்திகள்

இயல் – இசை - நாடகத் - திருவிழா
Updated on : 15 May 2015

வரும் ஜுலை மாத இறுதியில் சென்னையில், தமிழக அளவிலான நாடகப்போட்டி,
இசைப்போட்டி, நடனப் போட்டிகளை டாப்சி (தமிழ்நாடு திரைப்பட 
படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டமைப்பு) நடுத்துகிறது. இதில் 
தமிழகம் முழுக்க இருக்கும் சிறந்த நாடக குழுக்கள், ஓரங்க நாடகம், அமைச்சூர் 
நாடகம், சரித்திர சமூக நாடகங்கள். நாடகங்களின் கதாசிரியர்கள் முன்பதிவு செய்து 
கொள்ள வரவேற்கப் படுகிறார்கள்.
அது போன்றே! சிறந்த பாடல் இசைக் குழுக்களும் வரவேற்கப்படுகிறது. அது 
போன்றே தமிழகம் முழுக்க இருக்கும் நடன, நாட்டியத்தில் சிறந்து விளங்கும் 
அமைப்புகள், டாப்சியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன் 
பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மொத்தம் 6 நாட்கள் நடைபெறும் இயல், இசை நாடகத் திருவிழாவில், காலை 9.00 
மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.00 மணி வரை நடைபெறும். இதில் பிரபல முன்னணி 
தயாரிப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், முன்னணி 
இயக்குநர்கள், நீதிபதிகளாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கு 
பெறுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாடகங்களுக்கு முதல் பரிசு ரூ.75,000/- ரொக்கமும், 
இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் 
வழங்கப்படும். அது போன்றே! தேர்ந்தெடுக்கப்படும் பாட்டிசைக் குழுவினர்க்கு 
முதல் பரிசு 75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், 
மூன்றாம் பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
அதுபோன்றே! தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நடன நாட்டிய குழுவினர்க்கு முதல் 
பரிசு ரூ.75,000/- ரொக்கமும், இரண்டாம் பரிசு ரூ.50,000/- ரொக்கமும், மூன்றாம் 
பரிசு ரூ.25,000/- ரொக்கமும் வழங்கப்படும்.
மேலும் டாப்சியின் வெற்றி கேடயங்களும், கலந்து கொள்ளும் அனைத்து 
போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசுகளும், மேடையில் வழங்கப்படும். வளர்ந்து 
வரும் திரைப்படத் துறையில் சிறந்த கதைகளின் தேடலுக்காகவும், தமிழ்நாட்டின் 
சமூக, சமுதாய மேம்பாட்டிற்காகவும், கலைத் துறையில் நூற்றுக்கணக்கான 
புதியவர்கள், அறிமுகமாகி சாதனைப் படைக்க வேண்டும் என்ற நோக்கில் 
ஒவ்வொரு வருடமும் டாப்சி, இயல் இசை நாடகத் திருவிழாவை கோலாகலமாக நடத்தும்.



அணுக வேண்டிய முகவரி


கைப்பேசி : 9445720888, 9444241039

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா