சற்று முன்

அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!   |    சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் தடகள போட்டி இன்று துவங்கியது!   |    56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் தேர்வு செய்யப்பட்ட 'லால் சலாம்'   |    நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |   

விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை வீராங்கனை தீபிகாவுக்கு இரட்டை தங்கம்
Updated on : 10 February 2015

தேசிய விளையாட்டு போட்டியில் ஜார்கண்ட் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இரட்டை தங்கப்பதக்கம் வென்றார். 

35-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 9-வது நாளான நேற்று வில்வித்தை மங்கை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி அசத்தினார். 

வில்வித்தை ரீகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, பம்பையலா தேவி உள்ளிட்டோர் அடங்கிய ஜார்கண்ட் அணி 6-2 என்ற கணக்கில் மணிப்பூரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெயந்த் தலுக்தருடன் இணைந்தும் தீபிகா குமாரி தங்கத்தை வசப்படுத்தினார். 

ஆனால் தனிநபர் பிரிவு தான் தீபிகாவுக்கு ஏமாற்றம் அளித்தது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி இதில் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை. வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்திலும் 2-6 என்ற கணக்கில் உத்தரபிரதேச வீராங்கனை சீமா வர்மாவிடம் அவர் தோற்றுபோனார். 

இதற்கிடையே, எதிர்பார்ப்புக்கு மத்தியில் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. நட்சத்திர நீளம் தாண்டுதல் வீரர் கேரளாவின் ரஞ்சித் மகேஷ்வரி தகுதி சுற்றில் தவறான தொடக்கம் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

அதே சமயம் கேரள வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா எதிர்பார்த்தது போலவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தை பிடித்தார். அவர் 15 நிமிடம் 31.37 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டித் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை ருசித்தார். மராட்டியத்தின் லலிதா பாபர் 2-வது இடத்தை (15 நிமிடம் 46.73 வினாடி) பெற்றார். 

நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் நடப்பு சாம்பியன் சர்வீசஸ் அணி 51 தங்கம் 16 வெள்ளி, 17 வெண்கலத்துடன் தொடர்ந்து முதலிடத்திலும், மராட்டிய அணி 27 தங்கம், 40 வெள்ளி, 29 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 27 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் நீடிக்கிறது. 

தமிழக அணி 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது. 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா