சற்று முன்

10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |    என்கவுண்டர் போலீஸின் உள்ளக போராட்டம் – இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’!   |    985ஆம் ஆண்டு பின்னணியில் பிரம்மாண்டமாக உருவான ‘சுயம்பு’!   |    16 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றியின் அர்த்தம் புரிந்தது! – மனம் திறந்த சௌந்தர்யா ரஜினிகாந்த்   |    டீசர் வரும்முன்னே ₹225 கோடி ஒப்பந்தம் – உலக வெளியீட்டுக்கு தயாராகும் யாஷின் ‘டாக்ஸிக்’!   |    உலகையே ஆட்டம் போட வைத்த ‘Yethu’ – பிரபுதேவா & ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி!   |    மாதவ் ரமா தாசனின் அர்ப்பணிப்பு தான்   |    உலகத்தின் பெரிய காதல் கணவன்,மனைவி காதல்தான் – ‘மை லார்ட்’ இயக்குநர் ராஜுமுருகன்   |    இரட்டை வாழ்க்கை, இருண்ட நகரம்: அனுராக் காஷ்யப்பின் ‘கென்னடி’ ZEE5-க்கு வருகிறது!   |    காதலர் தினத்தை முன்னிட்டு ‘மின்னலே’ மீண்டும் திரையரங்குகளில்   |    வேம்பயர் த்ரில்லர் ‘HALF’ – இரண்டாவது போஸ்டர் வெளியீடு   |    நல்ல படங்கள் தருவதில் ராஜுமுருகன் ‘சைக்கோ’” – சசிகுமார் பாராட்டு   |    “உழைப்பும் நம்பிக்கையும் தான் இந்த படத்தின் பலம்” – ‘பூக்கி’ பற்றி விஜய் ஆண்டனி   |    மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |   

விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை வீராங்கனை தீபிகாவுக்கு இரட்டை தங்கம்
Updated on : 10 February 2015

தேசிய விளையாட்டு போட்டியில் ஜார்கண்ட் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இரட்டை தங்கப்பதக்கம் வென்றார். 

35-வது தேசிய விளையாட்டு போட்டிகள் கேரளாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. 9-வது நாளான நேற்று வில்வித்தை மங்கை ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி அசத்தினார். 

வில்வித்தை ரீகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, பம்பையலா தேவி உள்ளிட்டோர் அடங்கிய ஜார்கண்ட் அணி 6-2 என்ற கணக்கில் மணிப்பூரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இதே போல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜெயந்த் தலுக்தருடன் இணைந்தும் தீபிகா குமாரி தங்கத்தை வசப்படுத்தினார். 

ஆனால் தனிநபர் பிரிவு தான் தீபிகாவுக்கு ஏமாற்றம் அளித்தது. முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான தீபிகா குமாரி இதில் இறுதிப்போட்டிக்கு கூட முன்னேறவில்லை. வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்திலும் 2-6 என்ற கணக்கில் உத்தரபிரதேச வீராங்கனை சீமா வர்மாவிடம் அவர் தோற்றுபோனார். 

இதற்கிடையே, எதிர்பார்ப்புக்கு மத்தியில் தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. நட்சத்திர நீளம் தாண்டுதல் வீரர் கேரளாவின் ரஞ்சித் மகேஷ்வரி தகுதி சுற்றில் தவறான தொடக்கம் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

அதே சமயம் கேரள வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா எதிர்பார்த்தது போலவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முதலிடத்தை பிடித்தார். அவர் 15 நிமிடம் 31.37 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டித் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை ருசித்தார். மராட்டியத்தின் லலிதா பாபர் 2-வது இடத்தை (15 நிமிடம் 46.73 வினாடி) பெற்றார். 

நேற்றைய போட்டிகள் முடிவில் பதக்கப்பட்டியலில் நடப்பு சாம்பியன் சர்வீசஸ் அணி 51 தங்கம் 16 வெள்ளி, 17 வெண்கலத்துடன் தொடர்ந்து முதலிடத்திலும், மராட்டிய அணி 27 தங்கம், 40 வெள்ளி, 29 வெண்கலத்துடன் 2-வது இடத்திலும், அரியானா 27 தங்கம், 18 வெள்ளி, 7 வெண்கலத்துடன் 3-வது இடத்திலும் நீடிக்கிறது. 

தமிழக அணி 10 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது. 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா