சற்று முன்

'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    'மக்கள் தலைவா' (For Sale) படத்தின் டைட்டில் லுக் வெளியீடு   |    நடிகர் பிரஷாந்த் பிறந்தநாளில் ‘ரஞ்ஜன்’ பட டைட்டில் வெளியீடு!   |    விஷ்ணு விஷால் – ராம்குமார் மீண்டும் இணைப்பு: “இரண்டு வானம்” கோடை ரிலீஸுக்கு தயாராகிறது!   |    “விக்னேஷ் சிவன் படம்… அனிருத் இசை… அதுவே என் ட்ரீம்!” – பிரதீப் ரங்கநாதன்   |    அல்லு அர்ஜூன் – அட்லீ கூட்டணி, தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது   |    “சாதாரண வாழ்க்கையின் அழகை சொல்லும் ஸ்பெஷல் சீரிஸ்” – விஜய் சேதுபதி மனம்திறந்த பேச்சு   |    “வைஃப்” படத்தின் முதல் சிங்கிள் “நீ சாரல்” வெளியீடு   |    “அரசியலை நகைச்சுவையுடன் சொல்லும் கமர்ஷியல் படம்” – நட்டி நட்ராஜ்   |    “வடம்” சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் – மஞ்சு விரட்டின் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் சக்திவாய்ந்த சினிமா!   |    ஜெய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான “சட்டென்று மாறுது வானிலை” மூன்றாவது சிங்கிள்   |    ₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |   

சினிமா செய்திகள்

கவியரசருக்கே கவிதை எழுதிய பாடலாசிரியர்!
Updated on : 18 October 2016

மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் பாடலாசிரியர் வேல் முருகன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.



 



அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தில் வந்த 'காதல் என்னுள்' பாடல் மூலம் கவனம் பெற்ற வேல் முருகன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.



 



அடுத்ததாக கிடாயின் கருணை மனு , பட்டினம்பாக்கம் , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.



 



கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்காக வேல் முருகன் எழுதிய கவிதை:



 



நாலுபேருக்கு நன்றி



அந்த நாலுபேருக்கு நன்றி



என்று பாடினாய்



அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது



அந்த ரெண்டுபேருக்கு நன்றி



உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்



 



என் தாத்தா காலத்தில்



என் அப்பா அம்மா காதலிக்க



பாட்டையையும் கொடுத்தாய்



என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு



உன் பாடலால்



அமைதியையும் கொடுத்தாய்.



 



உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்



உன்பாட்டு ஓர் அண்ணை



அண்ணன் தங்கை



பாசம் என்றாலே



திசை காட்டும் உன்னை.



 



அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என



ஓடிஓடி உழைத்தவர்களை



அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது



'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்



கோபத்தை மறந்து



சிரித்தவர்கள் எத்தனையோ..



கவிஞரைப் பாட எடம் பத்தலையே..



 



நீ நிரந்தரமானவன்



எப்ப செத்த ?



எந்த நிலையிலும்



மக்கள் மனங்களில் நிப்ப..!  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா