சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சினிமா செய்திகள்

கவியரசருக்கே கவிதை எழுதிய பாடலாசிரியர்!
Updated on : 18 October 2016

மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் பாடலாசிரியர் வேல் முருகன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.



 



அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தில் வந்த 'காதல் என்னுள்' பாடல் மூலம் கவனம் பெற்ற வேல் முருகன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.



 



அடுத்ததாக கிடாயின் கருணை மனு , பட்டினம்பாக்கம் , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.



 



கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்காக வேல் முருகன் எழுதிய கவிதை:



 



நாலுபேருக்கு நன்றி



அந்த நாலுபேருக்கு நன்றி



என்று பாடினாய்



அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது



அந்த ரெண்டுபேருக்கு நன்றி



உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்



 



என் தாத்தா காலத்தில்



என் அப்பா அம்மா காதலிக்க



பாட்டையையும் கொடுத்தாய்



என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு



உன் பாடலால்



அமைதியையும் கொடுத்தாய்.



 



உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்



உன்பாட்டு ஓர் அண்ணை



அண்ணன் தங்கை



பாசம் என்றாலே



திசை காட்டும் உன்னை.



 



அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என



ஓடிஓடி உழைத்தவர்களை



அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது



'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்



கோபத்தை மறந்து



சிரித்தவர்கள் எத்தனையோ..



கவிஞரைப் பாட எடம் பத்தலையே..



 



நீ நிரந்தரமானவன்



எப்ப செத்த ?



எந்த நிலையிலும்



மக்கள் மனங்களில் நிப்ப..!  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா