சற்று முன்

47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!   |    இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்   |    “It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு   |    ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு   |    சசிகுமார் மக்கள்மீது வைத்த நம்பிக்கை தான் ‘மை லார்ட்’ வெற்றியின் காரணம்!   |    வெற்றி நடிக்கும் ஆக்சன் திரில்லர் ‘பிளாக் கோல்டு’ படப்பிடிப்பு நிறைவு!   |    வெற்றிமாறன் வெளியிட்ட ‘அண்டர் 18’ டைட்டில் லுக் – சமூக யதார்த்தத்தை பேசும் புதிய முயற்சி!   |    ‘ஹாட்ஸ்பாட் 2’ வெற்றி கொண்டாட்டம், இயக்குநருக்கு சொகுசு கார்!   |    “நேர்மையான செய்திகளில்தான் நம்பிக்கை” – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு   |    ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு துவக்கம், சிவராத்திரி நாளில் பிரம்மாண்ட பூஜை!   |    ‘ஜாக்கி’ நான்கு வார வெற்றி!, மதுரையின் மண் மணத்தை கொண்டாடும் டாக்டர் பிரகபல் படைப்பு   |    ‘வித் லவ்’ வெற்றி கொண்டாட்டம், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற படக்குழு!   |    விஜய் சேதுபதியுடன் தியாகராஜன் குமாரராஜா மீண்டும் இணைவு! ‘பாக்கெட் நாவல்’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்   |    சென்னை கிளாம்பாக்கத்தில் ‘கலர் பென்சில்’ அனுபவ கல்வி மையம் தொடக்கம்   |    'அரிசி என்பது உணவு மட்டுமல்ல, உரிமையும் கூட' – உதயநிதி ஸ்டாலின் உணர்வுபூர்வப் பேச்சு   |    டீசர் வெளியீட்டில் கவனம் ஈர்த்த ‘காதல் ரீசெட் ரிபீட்’ – மார்ச் 6 உலகம் முழுவதும் ரிலீஸ்!   |    ‘நாக பந்தம்’ டீசர் வெளியீடு: மகா சிவராத்திரியில் தொடங்கிய காவியப் பயணம்   |    இன்றைய தலைமுறைக்கான பாடல் எழுதுவது எனக்கு பெருமை - இயக்குநர் சரண்   |    10 ஆண்டுகளாக சமூகத்தின் குரலாக ஒலிக்கும் ‘விசாரணை’   |    ராஜூமுருகன் – சசிகுமார் கூட்டணியின் ‘மை லார்ட்’க்கு 2டி என்டர்டெயின்மென்ட் ஆதரவு!   |   

சினிமா செய்திகள்

கவியரசருக்கே கவிதை எழுதிய பாடலாசிரியர்!
Updated on : 18 October 2016

மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் பாடலாசிரியர் வேல் முருகன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.



 



அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'நேரம்' படத்தில் வந்த 'காதல் என்னுள்' பாடல் மூலம் கவனம் பெற்ற வேல் முருகன், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரிடம் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.



 



அடுத்ததாக கிடாயின் கருணை மனு , பட்டினம்பாக்கம் , நாகேஷ் திரையரங்கம் போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார்.



 



கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்காக வேல் முருகன் எழுதிய கவிதை:



 



நாலுபேருக்கு நன்றி



அந்த நாலுபேருக்கு நன்றி



என்று பாடினாய்



அதனைக்கேட்ட ஒரு நாலுகோடி பேராவது



அந்த ரெண்டுபேருக்கு நன்றி



உன்னைப் பெற்ற ரெண்டு பேருக்கு நன்றி சொல்வார்கள்



 



என் தாத்தா காலத்தில்



என் அப்பா அம்மா காதலிக்க



பாட்டையையும் கொடுத்தாய்



என் பாட்டியை இழந்து வாடிய எம்பாட்டனுக்கு



உன் பாடலால்



அமைதியையும் கொடுத்தாய்.



 



உலகத்து தங்கச்சிக்களுக்கெல்லாம்



உன்பாட்டு ஓர் அண்ணை



அண்ணன் தங்கை



பாசம் என்றாலே



திசை காட்டும் உன்னை.



 



அண்ணன் தம்பி அக்கா தங்கைக்கு என



ஓடிஓடி உழைத்தவர்களை



அக்குடும்பம் நடுத்தெருவில் நிறுத்தும்போது



'போனால் போகட்டும் போடா' என்று தேற்றியதில்



கோபத்தை மறந்து



சிரித்தவர்கள் எத்தனையோ..



கவிஞரைப் பாட எடம் பத்தலையே..



 



நீ நிரந்தரமானவன்



எப்ப செத்த ?



எந்த நிலையிலும்



மக்கள் மனங்களில் நிப்ப..!  

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா