சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பம்பரகண்ணாலே ஆர்த்தி அகர்வால் மரணம்
Updated on : 07 June 2015

2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தபின்பு பிரபலமானார். அதன்பிறகு தமிழில்  பம்பரகண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 


ஆர்த்தி அகர்வாலும் தெலுங்கு நடிகர் தருணும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆர்த்தியை தருண் கைவிட்டதால் ஆர்த்தி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் .


அதன் பிறகு இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது. பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார்.  


6 மாதங்களுக்கு முன் கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து ஹைதராபாத் வந்துவிட்டார்.  இந்நிலையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 


ஹைதராபாத் வந்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.  


இந்த சூழ்நிலையில் ஆஸ்துமா கோளாரினால் அவதிப்பட்டுவந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று தகவல் ஒரு பக்கம் இருக்க,  இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள். இவரின் மரணம் தெலுங்கு திரையுலகை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


 


 


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா