சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

பம்பரகண்ணாலே ஆர்த்தி அகர்வால் மரணம்
Updated on : 07 June 2015

2001-ல் பாகல்பன் என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமான ஆர்த்தி அகர்வால் வெங்கடேஷ் ஜோடியாக நுவ்வு நாக்கு நச்சவ் என்ற படத்தில் நடித்தபின்பு பிரபலமானார். அதன்பிறகு தமிழில்  பம்பரகண்ணாலே படத்தின் மூலம் 2005-ல் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்து வந்தார். 


ஆர்த்தி அகர்வாலும் தெலுங்கு நடிகர் தருணும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆர்த்தியை தருண் கைவிட்டதால் ஆர்த்தி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் .


அதன் பிறகு இவருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் தொழிலதிபர் உஜ்வால் குமாருக்கும் கடந்த 2007ல் திருமணம் நடந்தது. பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார்.  


6 மாதங்களுக்கு முன் கணவருடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து ஹைதராபாத் வந்துவிட்டார்.  இந்நிலையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 


ஹைதராபாத் வந்த பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தவர், மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில்தான் ரணம் 2 என்ற தெலுங்குப் படத்தில் மீண்டும் நடித்தார். அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளன.  


இந்த சூழ்நிலையில் ஆஸ்துமா கோளாரினால் அவதிப்பட்டுவந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என்று தகவல் ஒரு பக்கம் இருக்க,  இன்னொரு பக்கம், லைப்போசக்ஷன் எனும் கொழுப்பு நீக்க அறுவைசிகிச்சை செய்ததன் காரணமாகவே, மோசமான பின் விளைவுகள் ஏற்பட்டு அவர் இறந்ததாகவும் கூறுகிறார்கள். இவரின் மரணம் தெலுங்கு திரையுலகை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.


 


 


 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா