சற்று முன்
சினிமா செய்திகள்
Fox Star Studios to release Rajathandhiram
Updated on : 15 February 2015
Having tasted resounding success with remarkable films like Raja Rani,
Cuckoo and Mundasupatti among a host of others in the Tamil industry, Fox
Star Studios will now be distributing the upcoming Tamil language feature
film, RAJATHANDHIRAM; a thrilling heist film.
The con-heist film, Rajathandhiram grabbed the attention of viewers
everywhere when it unveiled its first-look teasers and trailer. The 6 character-teasers, unravelling the story of each of its actors, was a cleverly conceived and
executed campaign. The first-of-its kind to be done for Tamil films, it garnered
huge responses from Twitter, YouTube users and on other social media.
The film Rajathandhiram has some interesting firsts, starting with its makers.
Producers White Bucket Productions and Sunland Cinemas make their
respective production debuts with this con-heist film.
Renowned director, Gautham Vasudev Menon is also associated with the film
as its Creative Producer and has ensured that the film is a quality offering that
strikes a chord with audiences everywhere.
Rajathandhiram is a city-based ‘con’ caper, laced with generous amounts of
revenge, wit, humour and romance. Narrated through a new-age screenplay,
the film presents a series of mind games transcending and testing friendships,
society and love. Directed by A G Amid, the film stars Veera, Regina Cassandra,
Ajai Prasath and debutante Darbuka Siva.
G V Prakash Kumar, the music director of the film has composed a beautiful
love song for the film while Sandeep Chowta has scored the film’s background
music and S R Kathir is the cinematographer of the film.
“We are proud to be associated with Fox Star Studios for our debut production,
Rajathandhiram. Thanks to our association with the legendary studio, this film
will have an extended reach, more viewers from a lot more places; giving us
greater exposure and in all, making the film ‘bigger’ in every way.” –Senthil
Veeraasamy, Producer, White Bucket Productions
Rajathandhiram is slated for an early March 2015 release.
சமீபத்திய செய்திகள்
‘ஹபீபி’ தமிழ் முஸ்லிம் வாழ்க்கையை உண்மையாகச் சொல்வது மீரா கதிரவனின் புதிய படம்!
நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வணிக ரீதியாகவும் வெற்றி படங்களாக மாற்றி வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனர் ராகுல், அடுத்ததாக ஒரு நம்பிக்கைக்குரிய படைப்புடன் வருகிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்–விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.
‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம் சமூகத்தின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்கிறது. ‘என் அன்பே’ என்ற அர்த்தம் கொண்ட இந்தத் தலைப்பு, படத்தின் மையக் கருத்தான அன்பும் மனிதத்தன்மையும் பிரதிபலிக்கிறது. உண்மையான உறவுகள், வாழ்வியலின் சிக்கல்கள் மற்றும் மனித நேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இதற்கு முன்பு அவள் பெயர் தமிழரசி மற்றும் விழித்திரு போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கிய மீரா கதிரவன், ‘ஹபீபி’ படத்தில் மேலும் ஆழமான கதைக்களத்துடன் திரும்பியுள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்தக் கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ வெறும் திரைப்படமாக மட்டுமல்லாது, நான் வாழ்ந்த நெருக்கமாக பார்த்த உலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். நன்றி, உண்மை மற்றும் அன்பின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. தவறான புரிதல்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில் மனிதத்தன்மை மற்றும் பாசம் நிறைந்த வாழ்க்கையை அதன் இயல்பிலேயே பதிவு செய்ய விரும்பினேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்த படத்தில் ஆர்வம் காட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் உள்ளே வந்ததும் நாங்கள் கற்பனை செய்ததைவிட படம் பெரிய அளவில் வளர்ந்தது” என்றார்.
ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கூறுகையில், “மக்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டும் சக்தி சினிமாவுக்கு உண்டு. அர்த்தமுள்ள கதையை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் சின்சியராக எடுக்கப்பட்ட படம்தான் ‘ஹபீபி’. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் இந்த முக்கியமான படைப்பை கொண்டு செல்லும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும். ‘ஹபீபி’ அப்படியான ஒரு திரைப்படம். நிச்சயம் பார்வையாளர்களும் அதை உணர்வார்கள். படத்திற்கான வலுவான மார்க்கெட்டிங் திட்டங்கள் வைத்துள்ளோம். படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்..
இப்படம் வெளியீட்டுக்கு முன்பே கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ‘வல்லோனே’ பாடல், மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் ஈ.எம். ஹனிபா அவர்களின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உயிர்ப்பித்து பாடவைத்திருப்பது பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.
உணர்வும் உண்மையும் இணைந்த ‘ஹபீபி’ திரைப்படம் உலகத் திரையரங்குகளில் விரைவில் பார்வையாளர்களை சந்திக்கத் தயாராகிறது.
தமிழ்–கொரிய கலாச்சாரங்களை இணைக்கும் புதிய தொடர் மார்ச் 12 முதல் Netflix-ல்!
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் ரா. கார்த்திக் எழுதி இயக்கியுள்ள ‘மேட் இன் கொரியா’ என்ற புதிய தொடர், இரண்டு வெவ்வேறு கலாச்சாரங்களின் உணர்வுபூர்வமான சங்கமமாக உருவாகியுள்ளது. இந்த தொடரில் நடிகை பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் வாழும் செண்பா என்ற இளம் பெண்ணின் கனவுகள் தான் இந்தக் கதையின் மையம். சிறுவயது முதலே கொரிய கலாச்சாரம் மீது ஈர்ப்பு கொண்ட செண்பா, ஒருநாள் தென் கொரியாவுக்கு சென்று அந்த வாழ்க்கையை நேரில் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கிறாள்.
அந்த கனவு அவளை சியோலுக்கு அழைத்துச் செல்லும் போது, அவள் எதிர்பார்த்த உலகம் கற்பனையை விட முற்றிலும் மாறுபட்ட சவால்களை முன்வைக்கிறது. புதிய மொழி, புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை முறை—இவற்றை எதிர்கொண்டு செண்பா தனது அடையாளத்தையும், உள்ளார்ந்த வலிமையையும் கண்டுபிடிக்கும் உணர்ச்சிகரமான பயணமே ‘மேட் இன் கொரியா’.
படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது. மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியா கண்டெண்ட்டின் வைஸ் பிரசிடெண்ட் மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “தென்னிந்தியாவில் நெட்ஃபிலிக்ஸை மேலும் வலுப்படும் இந்த சூழலில், உள்ளூர் கலாச்சாரத்தில் வேரூன்றிய கதைகளை உலகளவில் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். கொரிய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்ட ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவு உலகத்தை ‘மேட் இன் கொரியா’ காட்டும். ரா. கார்த்திக் எழுதி, இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’ புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தக் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் நெட்ஃபிலிக்ஸ் பெருமை கொள்கிறது” என்றார்.
தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களின் நுணுக்கங்களை இணைக்கும் இந்த தொடர், உலகளாவிய பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ‘மேட் இன் கொரியா’ தொடர் Netflix தளத்தில் வரும் மார்ச் 12 முதல் ப்ரீமியராகிறது.
'தாய் கிழவி' கதை கேட்டதும் சிவகுமாரின் அடுத்த படத்தில் நான் ஹீரோ! – சிவகார்த்திகேயன் அறிவிப்பு
Passion Studios மற்றும் Sivakarthikeyan Productions இணைந்து தயாரித்துள்ள ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு இன்று சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் Sivakumar Murugesan இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மூத்த நடிகை Radhika Sarathkumar மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நிகழ்வில் படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும், திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்துக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். பேசிய தயாரிப்பாளர்கள், “பெண் மையக் கதையை மையமாக கொண்டு, குடும்ப உறவுகளின் ஆழத்தை உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ள படம் இது. ராதிகா மேடம் நடித்த விதம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது” என்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் கலை, “நல்ல கதைகள் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இயங்கி வருகிறது. இது எங்கள் தயாரிப்பில் ஒன்பதாவது படம். இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் கதை மீது சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கையில் இருந்துதான் படம் தொடங்கியது. பேஷன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கிறோம். படத்தின் ரஃப் கட் பார்த்துவிட்டு எங்கள் அணியை சிவா பாராட்டினார். சிவகுமார் எவ்வளவு திறமையான இயக்குநர் என்பது இந்தப் படத்தின் மூலமும், அவருக்கு அடுத்து கிடைத்திருக்கும் வாய்ப்பை பார்க்கும்போதும் தெரியும். ராதிகா மேம் எங்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. 27 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை”.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சரத்குமார் பேசியதாவது, “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்து கட்டிக்காப்பவரைதான் அப்படி கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறார். ஒரு பெண் தனியாக வாழும்போது சந்திக்கின்ற சோதனையும் வேதனையும் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மிக நுட்பமாக இயக்குநர் சிவா இதில் பதிவு செய்திருக்கிறார். மிகப்பெரிய வெற்றிப் படத்தை தர காத்திருக்கும் சுதன், சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.
ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார், ”இது என்னுடைய முதல் மேடை. கனவு போல உள்ளது. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ‘தாய் கிழவி’ படம் உங்கள் அனைவரையும் மகிழ்விக்கும்”.
எடிட்டர் சான் லோகேஷ், “இதுபோன்ற படம் கிடைப்பது அபூர்வம். சிறப்பாக வந்துள்ளது”.
கலை இயக்குநர் ராமு தங்கராஜ், “பெண்களை பற்றி அதிகமாக பேசியிருக்கும் ‘தாய் கிழவி’ மிக முக்கியமான படம். எங்களிடம் கதை சொன்னதை விட இயக்குநர் சிறப்பாகவே எடுத்திருக்கிறார். படத்தை தயாரித்திருக்கும் சுதன் மற்றும் சிவகார்த்திகேயன், திறமையாக நடித்திருக்கும் ராதிகா என அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
ஒப்பனைக் கலைஞர் வினீஷ், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் சிறப்பாக வந்திருக்கிறது”.
பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன், “’தாய் கிழவி’ படத்தில் என் மனைவியை நினைத்து ஒரு பாடல் எழுதியிருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சிவா, இசையமைப்பாளர் நிவாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் ஜெகன், “ஒரு கிழவி மரணப்படுக்கையில் இருக்கும்போது அவள் சீக்கிரம் சாக வேண்டும் என்ற சூழலில் வரும் பாடல். இதுபோன்ற சூழ்நிலைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு யாருக்கும் வந்திருக்காது என நினைக்கிறேன். இதற்கு நேரெதிராக இன்னொரு பாடல் எழுதும் வாய்ப்பும் கிடைத்தது. இரண்டு பாடல்களும் அருமையாக வந்திருக்கிறது”.
நடிகர் பாலசரவணன், “மகிழ்ச்சியான, எனக்கு தேவையான படம் இது. இயக்குநரை ‘என்னா மனுஷன்யா!’ என பாராட்டலாம். அந்தளவுக்கு மிகவும் பணிவானவர். இப்படி ஒரு சிறப்பான படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அண்ணன் சிவகார்த்திகேயனுக்கு நன்றி. கதையை கேட்டு சிரித்தேன், அழுதேன். எனக்கு கிடைத்த செல்வம்தான் இந்த கதாபாத்திரம். ராதிகா மேம் நடிப்பை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தெளிவான அரசியல் பேசும் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி”.
நடிகர் அருள்தாஸ், “இயக்குநர் சிவாவிடம் இருந்து கதை கேட்டபோது அவரிடம் இருந்து நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் இதில் உண்டு. முழுக்க முழுக்க திருப்தியான, பெருமையான படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்திற்கு ஒத்துழைத்த ஊர்மக்கள், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நிச்சயம் இந்தப் படத்திற்காக ராதிகா மேம் தேசிய விருது பெறுவார். எல்லா வயதினருக்கும் பிடித்த படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.
நடிகர் சிங்கம்புலி, “பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடித்த ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய ஹிட். அதுபோலவே, பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படமும் மிகப்பெரிய ஹிட் என்பதில் சந்தேகம் இல்லை. தீவிர ரஜினிகாந்த் ரசிகனான நான் இந்தப் படத்தில் கமல்ஹாசன் ரசிகனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்துவிட்டு கமல்ஹாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி” என்றார்.
நடிகர் இளவரசு, “’தாய் கிழவி’ படம் புதிய டிரெண்டை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த தலைமுறையும் இதுபோன்ற படங்கள் எடுக்க முன்வரும். இதற்கு காலமும் சினிமாவும் துணை நிற்க வேண்டும். மிகச்சிறந்த நடிகை ராதிகா. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்”.
நடிகர் முத்துக்குமார், “’கடைசி விவசாயி’ மணிகண்டனின் உதவி இயக்குநர்தான் சிவகுமார். ரொம்பவும் வலிமையானவர். நான் பிறந்த மண் சார்ந்து ஒரு கதாபாத்திரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்தது. அப்படியான ஒரு கதாபாத்திரமாக ‘தாய் கிழவி’ படத்தில் கிடைத்திருக்கிறது. பேஷன் ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா சிறப்பாக நடித்திருக்கிறார். ‘கனா’, ‘கொட்டுக்காளி’ படங்களுக்கு பிறகு நிறைய விருதுகள் குவிக்கும் படமாக ‘தாய் கிழவி’ இருக்கும்”.
நடிகை ரேய்ச்சல், ”’கடைசி விவசாயி’ படத்தில் இருந்தே இயக்குநர் சிவாவை தெரியும். அவரின் வளர்ச்சி மகிழ்ச்சியாக இருக்கிறது. ’தாய் கிழவி’ படத்தில் ஒரு பெண்ணை ஹீரோவாக பார்ப்பது மகிழ்ச்சி. ராதிகா மேம் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பது சிறப்பு. அவரது மகள் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் இந்த கதாபாத்திரத்தை என்னுடன் பொருத்தி பார்த்துக் கொள்ள முடிந்தது. நன்றி”.
இயக்குநர் இரா. சரவணன், “எளிதில் கணிக்க முடியாதவர்கள்தான் இந்த மண்ணில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சினிமாவிலும் பத்திரிகையிலும் பல வருடங்கள் இருந்திருக்கிறேன். என்னால் கணிக்க முடியாத ஒரு நபராக தம்பி சிவகார்த்திகேயன் இருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திருஷ்டி சுற்றி போட்டாலும் பத்தாது. அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் நடிகை ராதிகா கொடுத்திருக்கிறார். ஹீரோக்கள் பின்னாடி ஓடும் தமிழ் சினிமா இனி நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ஏன் தயாரிக்க வேண்டும் என்ற விமர்சனங்களுக்கு பதிலடிதான் ‘தாய் கிழவி’ படம்” என்றார்.
தயாரிப்பாளர் ஏஜிஎஸ் ஐஸ்வர்யா கல்பாத்தி, “இந்த வருடத்தின் மிகச்சிறந்த படம் இது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும். இயக்குநர் சிவா இப்படியான நல்ல படத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சி. ராதிகா மேம் சிறப்பாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, “இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சிவா மற்றும் சுதன் இருவருக்கும் நன்றி. இயக்குநர் சிவா என் மனதுக்கு நெருக்கமானவர். நாங்கள் பேசுவதை விட படம் பார்த்துவிட்டு, வருகிற 27ஆம் தேதி நீங்கள் பேசுவீர்கள்” என்றார்.
இயக்குநர் அருண்ராஜா காமராஜ், “இந்தப் படத்தில் ராதிகா மேமை முதலில் பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. பல காட்சிகள் உங்களை கலங்கடிக்கும். உங்களின் பல கேள்விகளுக்கு இந்தப் படத்தில் விடை இருக்கும். பெண்களை மையப்படுத்தி சொன்ன ‘கனா’ படத்தை விட 100 மடங்காக ’தாய் கிழவி’ படம் இருக்கும். சிறந்த படத்தில் நானும் பங்களித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “சின்ன ஊர்களில் இருந்து பெரிய கனவுகளோடு வரும் பலருக்கும் சிவா சார்தான் இன்ஸ்பிரேஷன். ரூரல் எண்டர்டெயினர் திரைப்படம் வந்து ரொம்ப நாள் ஆகிருச்சு. அதை ஸ்பேசை இயக்குநர் சிவா சரியாக பயன்படுத்தி இருக்கிறார். படம் பார்த்தபோது ராதிகா மேம் இன்னொரு லேடி கமல்ஹாசனாகதான் தெரிந்தார். நிச்சயம் படக்குழுவினருக்கு தேசிய விருது கிடைக்கும். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக இது அமைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் சிவகுமார் முருகேசன், “என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் சுதன், சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி. ராதிகா மேம் முதலில் தயங்கினாலும் கதை மீது நம்பிக்கை வைத்து சின்சியராக நடித்துக் கொடுத்தார். என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பயணித்த என் குழுவினருக்கு நன்றி. பசியும் பட்டினியும் ஒன்று போல தெரிந்தாலும் அதற்கு நடுவில் ஒரு கோடு இருக்கிறது. ’தாய் கிழவி’ எனும் ராஜ விருந்து கொடுத்ததோடு ‘சேயோன்’ எனும் நெல் கட்டையும் அடுத்து எனக்கு கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். நிச்சயம் நல்ல விளைச்சல் காட்டுவேன். நன்றி”.
நடிகர் சூரி, “இந்தப் படத்தின் காட்சிகள் அனைத்தையும் நாமும் எதிர்கொண்டிருப்போம். படம் முழுக்க நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஒரு பெண் தனக்கான உரிமையை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என பன்ச் டயலாக் பேசாமல் காட்சிகள் மூலம் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இந்தப் படம் பார்க்கும்போது என் அம்மா நியாபகம் வந்தது. யாருமே தவற விடக்கூடாத படம் இது. பெரிய விஷயத்தை அசால்டாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சிவா. நாற்பது வருடங்களுக்கு மேலான தனது அனுபவத்தை இந்தப் படத்தில் சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார் ராதிகா மேம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘நான் நடிக்கிற படங்களில் எல்லாமும் திணிக்க முடியாது. ஆனால், நான் தயாரிக்கிற படங்கள் இந்த சமூகத்திற்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என தம்பி சிவகார்த்திகேயன் சொல்வார். அதைத்தான் எல்லா படங்களிலும் செய்து வருகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள்”.
நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதை பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவை பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவை பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்கு தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம் அந்த குறையை நீக்கும் என நம்புகிறேன்”.

நடிகை ராதிகா, “எல்லோருடைய அன்பு, நம்பிக்கை, ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் 48 வருடங்கள் கடந்தும் என்னை சினிமாவில் நிலைக்க வைத்திருக்கிறது. இத்தனை வருடங்களில் நல்ல நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதனாகவும் சிவகார்த்திகேயன் வளர்ந்திருக்கிறார். சினிமாவிற்குள் வர உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆனால், நீடித்து நிலைக்க உங்கள் உழைப்பு முக்கியம். என் சினிமா கரியரில் இன்னொரு திருப்புமுனை கொடுத்த சிவகார்த்திகேயன், சிவகுமார் இருவருக்கும் நன்றி. உண்மையில் இந்த கதை ரஜினிகாந்த் நடிக்க வேண்டியது. அவர் இந்த வேஷம் போட்டு நடிக்க மாட்டார். அதனால், இந்த கதாபாத்திரத்தை பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். அப்படிதான் நான் இதை பார்க்கிறேன். 4 மணி நேரம் ஹெவியான மேக்கப் போட்டு நடிக்க எனக்கு இன்ஸ்பிரேஷன் கமல்ஹாசன்தான். ’உன்னை தாண்டி அந்த கதாபாத்திரம்தான் திரையில் தெரிய வேண்டும்’ என்று கமல் என்றோ சொன்னது என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதைத்தான் இதில் செய்திருக்கிறேன். அதிகம் பேசாமல் அமைதியாக இருக்கும் சிவகுமார் முருகேசனிடம் ஒரு ஃபயர் இருக்கிறது. அதை சிவகார்த்திகேயன் சரியாக கண்டுபிடித்திருக்கிறார். வலியை உணர்ந்த பெண் சொல்கிற கதைதான் ‘தாய் கிழவி’. பெண்களாகிய நம்மை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள். எல்லா துறையில் இருக்கும் பெண்களும் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
என்னை அறிமுகப்படுத்திய குருநாதர் பாரதிராஜா சார் ‘தாய் கிழவி’யாக நான் நடித்திருப்பதை அவரால் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு நிறைய இருக்கிறது. சீக்கிரம் அவர் உடல்நலன் தேறி வந்து இந்தப் படம் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். என்னை நடிகையாக்கிய என் அம்மா இந்தப் படத்தை பார்க்கவில்லையே என்ற வருத்தம் உண்டு. பெண் எம்.ஆர். ராதாவாக தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்குள் வந்தபோது என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் இன்று பதில் சொல்கிறேன். நான் எம்.ஆர். ராதா மகள் என்று! வாய்ப்பிற்கு நன்றி”.
நடிகர் சிவகார்த்திகேயன், “’தாய் கிழவி’ படக்குழுவினர் அனைவருக்கும் வணக்கம். அடுத்து தலைவர் படம் இயக்க இருக்கும் சிபிக்கும் வணக்கம். நாம் இருவரும் சேர்ந்து சுதனுடன் படம் செய்யவதாக இருந்தது. நீ மட்டும் இப்போது எஸ்கேப். சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் ஆரம்பித்து மக்கள் என்னை
‘ஹைக்கூ’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு – செப்டம்பரில் உலகம் முழுவதும் வெளியீடு!
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான விஷன் சினிமா ஹவுஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், படத்தின் மீதான நம்பிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
இந்த கட்டத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி, அதிர்ச்சி அருண் மற்றும் கலைவாணி பாஸ்கர் ஆகியோர் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு ஆழம் சேர்த்துள்ளனர். ‘ஹைக்கூ’ திரைப்படத்தை யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ளார். கூடுதல் திரைக்கதையை ‘ஜோ’ திரைப்பட இயக்குநர் ஹரிஹரன் ராம் எழுதியுள்ளார்.
இரு படைப்பாளர்களின் இணைப்பு, நுணுக்கமான உணர்வுகளும் யதார்த்தமும் கலந்த செழுமையான திரைக்கதையை வழங்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
முதல்கட்ட படப்பிடிப்பில் உருவான காட்சிகள் குறித்து படக்குழு மிகுந்த திருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் காட்சியமைப்பு, படத்தின் ஆன்மாவையும் உணர்வுகளையும் அழகாக பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். படக்குழுவின் அர்ப்பணிப்பும் தொழில்நுட்ப தரமும் சிறப்பாக அமைந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னை நகரில் துவங்கவுள்ளது. முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன. ‘ஹைக்கூ’ திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், பங்குதாரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து, ‘ஹைக்கூ’ படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் பகிர உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹனுமான் பிறந்த இடமான ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜையுடன் தொடங்கியது ‘ஜெய் ஹனுமான்’!
தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், பான்-இந்தியா அளவில் வெற்றி பெற்ற ஹனுமேன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ஜெய் ஹனுமான் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது.
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த கட்டமாக உருவாகும் இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான Mythri Movie Makers மிகப்பெரிய அளவில் தயாரிக்கிறது. T-Series நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது.
தேசிய விருது பெற்ற நடிகர் ரிஷப் ஷெட்டி, கடவுள் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற திறமையாளர்கள் இணையும் இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.
சமகால நிகழ்வுகளை புராணக் கதைகளுடன் இணைத்து புதுமையாக கதை சொல்லும் தனிச்சிறப்புக்குப் பெயர் பெற்றவர் பிரசாந்த் வர்மா. அதேபோல், தொடர்ச்சியான வெற்றி படங்களை வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரிஷப் ஷெட்டி அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு பதிலாக ‘ஜெய் ஹனுமான்’ உருவாகி வருகிறது.
கடவுள் ஹனுமான் பிறந்த புனித தலமாக நம்பப்படும் Anjanadri Betta, ஹம்பி, Vijayanagara பகுதியில் இன்று பாரம்பரிய பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.
பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ‘ஹனுமேன்’ படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து திரைக்கதையை இயக்குநரிடம் வழங்கினர்.
ஏற்கனவே வெளியான ரிஷப் ஷெட்டி ஹனுமானாக இடம்பெற்ற முதல் பார்வை போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சக்திவாய்ந்த மற்றும் ஆன்மிக ஆழமுள்ள இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது. “ஹனுமானின் மௌனம் சரணாகதி அல்ல; அது எழுச்சி!” என்ற கருத்தை மையமாகக் கொண்டு, பக்தி, நம்பிக்கை மற்றும் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் படம் உருவாகிறது.
ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் வழக்கமான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெய் ஹனுமான்’, பான்-இந்தியா அளவில் மற்றொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் - வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஏ.எல். உதயா
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர்-தயாரிப்பாளர் ஏ.எல். உதயா, தனக்கு வாக்களித்த உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலான அணியினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "நடந்து முடிந்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் எந்த அணியையும் சாராமல் துணைத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக நான் போட்டியிட்டேன். என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்காமல் தயாரிப்பாளராகவும் அங்கீகரித்து 230 வாக்குகளுக்கு மேல் அளித்த சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நான் கடமைப் பட்டுள்ளேன்.
தயாரிப்பாளர்கள் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர்களின் நலனுக்காகவும் என்றும் நான் துணை நிற்பேன். தேர்தலில் வெற்றி பெற்ற ஜி.கே.எம். தமிழ்க்குமரன் அவர்கள் தலைமையிலான அணியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகள் தமிழ் திரையுலகின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நான் நம்புகிறேன்.
வெற்றி பெற்ற தமிழ்க்குமரன் அவர்கள், ராதாகிருஷ்ணன் அவர்கள், கதிரேசன் அவர்கள், சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆர். கே. சுரேஷ் அவர்கள், கமலக்கண்ணன் அவர்கள், சுஜாதா விஜயகுமார் அவர்கள் உள்ளிட்ட அனைத்து செயற்குழு உறுப்பினர்களுக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களின் காலத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிறைய நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்," என்றார்.
பெரம்பூரை பின்னணியாகக் கொண்ட புதிய குடும்பப் படம் – சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்!
Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
தனித்துவமான கதைக்களங்களால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற தொடர் வெற்றிகளுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.
Neo Castle Creations சார்பில் சத்யா கரிகாலன் மற்றும் Million Dollar Studios சார்பில் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள முக்கிய கதாபாத்திரத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருப்பது படத்தின் சிறப்பம்சமாகும். இவருடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் மூலம் புகழ்பெற்ற இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ‘அருவி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஜாலியான பேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், இப்படம் சம்மர் 2026-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படத்தின் தலைப்பு மற்றும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
47 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரஜினி–கமல், ‘KHxRK’ மூலம் வரலாறு படைக்கும் ரெட் ஜெயன்ட்!
இந்திய திரையுலகம் மறக்க முடியாத வரலாற்று தருணத்தை எதிர்நோக்குகிறது. இந்திய சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்கள் — ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் — 47 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே படத்தில் இணைகின்றனர். தற்காலிகமாக “KHxRK” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாபெரும் திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரே முறை கிடைக்கும் அபூர்வ திரை அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1970களின் இறுதியில் கடைசியாக இணைந்து நடித்த இந்த இரு திரை ஜாம்பவான்கள், தங்கள் தனித்துவமான கலைப் பயணங்களால் தலைமுறைகளை தாண்டி ரசிகர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். தற்போது மீண்டும் ஒரே திரையில் தோன்றுவது, இந்திய திரைப்பட வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சந்திப்பை Red Giant Movies தயாரிக்கிறது. படத்தை அளவிலும், கதை சொல்லுதலிலும், தொழில்நுட்பத் தரத்திலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு புரட்சிகர கலைஞர்களை 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படத்தில் இணைப்பது எங்களுக்கு பெருமையான தருணம். அவர்களின் பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வலுவான திரை அனுபவத்தை உருவாக்க முழு அர்ப்பணிப்புடன் இந்த முயற்சியை தொடங்குகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை ‘ஜெயிலர்’ வெற்றிப் படத்தை வழங்கிய இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். படத்தின் இசையை இன்றைய தலைமுறையின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் அமைக்கிறார். அவரது இசை, சமீப கால பிரம்மாண்ட படங்களுக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது.
படம் குறித்த கதைக்களம், நடிப்பு குழு மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. ‘KHxRK’ இந்திய திரையுலகில் புதிய வரலாற்றை படைக்கும் படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இசைஞானி இளையராஜா இசையில் ‘அந்தோனி’ – இலங்கை மண் மணக்கும் காதல் காவியம்
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள ‘அந்தோனி’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. மார்ச் மாதம் வெளியாக உள்ள இப்படம் இலங்கையின் வாழ்வியல் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இப்படத்தில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இணைந்து இயக்கியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரிஷி செல்வம், எடிட்டிங் சுரேஷ் ஏ. பிரசாத், கலை இயக்கம் கலா மோகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். கலைவளரி சகா, ரமணதாஸ், சுகந்தினி ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் பாலசிங்கம், ஸ்ரீஸ்கந்தராஜா, விக்கி இணைத் தயாரிப்பாளர்களாக செயல்பட்டுள்ளனர்.
விழாவில் திருமதி அகிலா பாலுமகேந்திரா, இயக்குநர்கள் சீனு ராமசாமி, லெனின் பாரதி மற்றும் ‘உலக சினிமா’ பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
இலங்கையின் மண், மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் முயற்சியாக உருவாகியுள்ள ‘அந்தோனி’, போருக்குப் பிந்தைய மனித உணர்வுகளையும் காதலையும் மையமாகக் கொண்டதாக ட்ரெய்லர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. இளையராஜாவின் இசை இப்படத்திற்கு முக்கிய பலமாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். மார்ச் மாத வெளியீட்டை முன்னிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விழாவில் இணைத்தயாரிப்பாளர் விக்கி பேசும்போது,
" இந்திய -இலங்கை கூட்டுத் தயாரிப்பில்1980 வரை பல படங்கள் வந்துள்ளன. போர் தொடங்குவதற்கு முன்பு கூட இதே சாலிகிராமத்தில் சிங்களப் படங்கள் கூட விழா நடத்தப்பட்டு வெளியாகி இருக்கின்றன.போர் தொடங்கிய பிறகு எந்த தமிழரின் நிறுவனமும் இந்தக் கூட்டுத் தயாரிப்பில் ஈடுபடவில்லை.டிஜிட்டல் காலத்திலாவது ஏதாவது செய்யலாமே என்கிற ஏக்கம் இருந்தது. ஜெனோசனும் சுகிர்தனும் இந்தப் பட முயற்சியில் வாய்ப்பைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். ரமணன் அவர்கள் தயாரிக்க வந்தார். பிறகு அவருடன் பலரும் சேர்ந்து தயாரிக்க முன்வந்தார்கள். போர் நினைவுக் கதைகளைப் படமாக எடுத்தது மாறி மறுவாழ்வுக் கதைகள் எடுக்கலாம் என்று,இயக்குநர்கள் விரும்பினார்கள். அப்படித்தான் இந்தப் படம் உருவாகி உள்ளது .பாலு மகேந்திரா சார் ஈழத்தில் எப்படியாவது ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதைக் கனவாக வைத்திருந்தார். அவரது அந்தக் கனவு நனவானதில் எனக்கு மகிழ்ச்சி. இது போரைத் தாண்டிய ஒரு கதை என்பது மகிழ்ச்சி." என்றார்.
தயாரிப்பாளர் ரமணதாஸ் பேசும்போது,
" இலங்கை என்கிற நாட்டிலிருந்து உலகத் தரத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது நீண்ட காலம் ஏக்கமாக இருந்தது.சின்னச் சின்ன படைப்புகளைச் செய்து கொண்டிருந்தோம்.அன்புத் தம்பி சுகிர்தனின் கதையைக் கேட்ட போது அந்தப் படத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தோம்.பல தமிழ் நாட்டு சினிமாவைப் பார்த்தே நாங்கள் வளர்ந்து வந்திருக்கிறோம். இப்படி ரத்தத்திலேயே கடத்தப்பட்ட சினிமா தான் தமிழ்நாட்டு சினிமா .உலக தரத்திற்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். தம்பி சுகிர்தன் 'மழைக்கால இரவுகள்' என்ற குறும்படத்தைக் காட்டினார். அதைப் பார்த்து இந்தப் படத்தைத் தயாரித்து இருக்கிறோம். ஈழத்திலிருந்து பெரும் பொருட் செலவிலே வருகிற படம் என்று இதைக் கூறலாம்.தமிழ்நாடு என்பது எங்கள் ரத்தத்தோடும் சதையோடும் கலந்து இருப்பதால் தமிழ்நாட்டு மக்கள் , எங்கள் கதைகளை எங்கள் ஜன்னல் வழியாகப் பார்க்காமல் வீட்டுக்குள் வந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாக இருக்கிறது. இப்படம் உங்களது சக உறவுகள் எப்படிப் புது இடத்தில் வாழ்கிறார்கள் என்பதைப் பார்ப்பதாகவே இருக்கும்.
இந்தப் படத்திற்கு முதலீட்டாளர்களாகப் லண்டன்,சுவிஸ், பிரான்ஸ், நார்வே , இலங்கை போன்று பல்வேறு நாடுகளில் இருந்து எங்களுக்கு உதவி இருக்கிறார்கள்.இவ்வளவு பேர் சேர்ந்தா இந்தப் படத்தை எடுத்தீர்கள் என்று உங்களுக்கு வியப்பாக இருக்கும். போன வருடம் மார்ச் மாதம் 5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம், இப்போது மூன்று மொழிகளில் தயாராகி இருக்கிறது.
இது பிரபஞ்சம் தந்திருக்கும் படம் .இதற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பதற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்திற்கு அவரால்தான் இதற்கான இசையைக் கொடுக்க முடியும். ஆமாம் இளையராஜா அவர்கள் இதற்குள் வந்த பிறகு இது உலக சினிமாவிற்கான பயணத்தில் ஒரு கல் எடுத்து வைத்த உணர்வைத் தருகிறது .
இதில் தமிழகம் மட்டுமல்ல இலங்கை மட்டுமல்ல ஐரோப்பிய நாட்டுக் கலைஞர்களும் பங்கேற்று நடித்து இருக்கிறார்கள் .
அந்த அளவில் இது ஒரு பிரபஞ்சத்துக்கான படம் போல் அமைந்திருக்கிறது "என்றார்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது,
" இந்த 'அந்தோனி' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து நான் கண்கலங்கினேன் .
இந்த பட விழாவிற்காக என்னை அழைப்பதற்காக இந்த இளைஞர்கள் வந்து என்னிடம் பேசிய போது, எந்த ஊர் என்று கேட்டேன் இலங்கை என்றார்கள். அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்த விழாவிற்கு நான் வந்தேன். எனக்கு மற்றபடி இளையராஜா இசை என்பது மட்டும் தெரியும். தயாரிப்பாளர் யார் படத்தில் மற்றவர்கள் யார் என்று தெரியாது.
அழிக்கப்பட்ட ஒரு நாட்டிலிருந்து இரண்டு இளைஞர்கள் இப்போது படம் எடுப்பதற்காக வந்துள்ள, அந்த ஒரே ஒரு காரணத்திற்காகத்தான் நான் இங்கு வந்தேன்.
ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தேன். இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்திருப்பது, அவர் இசை அமைத்தார் என்பதை விட அவர் ஆசிர்வதித்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.என் உள் ளுணர்வு அதைத்தான் கூறியது.இளையராஜா ஆசீர்வதித்த படம் என்றுதான் நான் இதைச் சொல்ல வேண்டும். இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு நாடு சிதிலமடைந்த பிறகு, போர் முடிந்த பிறகு, அல்லது போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு எப்படி இருக்கும் ?வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருக்கும்.அந்த நாடு அழிவில் இருக்கும். போர் முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு தனியனின் இருப்பு எப்படி இருக்கும்? எல்லாமே கேள்விக்குறிதான். எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் எதற்காக வேண்டுமானாலும் கேள்வி கேட்பார் இன்றிக் கைது செய்யப்படலாம். அப்படி ஓர் அச்சம் எப்போதும் இருக்கும். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து வந்த இளைஞர்களின் நினைவுகளில் குண்டு விழுந்த சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரும் மறுக்க முடியுமா?
உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையைச் சந்தித்து வருகிற மக்களின் கலை வடிவமாகத்தான் அந்தோனியை நான் பார்க்கிறேன். அப்படிப்பட்ட நாட்டில் இருந்து இங்கு வந்திருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீது ஏன் இன்னும் தடையை நீக்கவில்லை? விடுதலைப் புலிகள் தான் இல்லை என்று தெரிந்து விட்டதே. புலிகள் யாரும் உயிரோடு இல்லை என்ற பிறகும் ஏன் அந்தத் தடையை நீக்காமல் இருக்கிறார்கள்?நான் இதற்கு முன்பு சொன்னேன் அல்லவா? யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம் அதற்காகத்தான். அதனால்தான் நீக்காமல் இருக்கிறார்கள். நான் யாரோடும் உடன்பட்டோ முரண்பட்டோ இங்கே இதைப் பேசவில்லை.என்னுடைய கருத்தை நான் சொல்கிறேன்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளரை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.அந்தக் கடலையும் அந்த அலையையும் அந்த வாழ்க்கையையும் தத்ரூபமாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படுவார்.அந்த அளவிற்கு அவர் நடித்துள்ளார்.
நான் வின்சென்டிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்துவிடு. நான் சந்திக்க வேண்டும் என்று எனக்குத் தேவைப்படும் போது எங்காவது வெளிநாட்டில் இருப்பாய். நடிக்க வைக்க முடியாமல் போய்விட்டது .
வின்சென்ட் இதில் ஒரு முழுமையான நடிகனாக வெளிப்பட்டுள்ளார்.
நவயுக இலங்கை சினிமாவில் இருந்து ஒரு புது சக்தியாக வந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எல்லாம் நேர்த்தியாக இருக்கிறது.
இந்த அந்தோனியில் ஒரு தோணி இருக்கிறது. அதனால் கண்டிப்பாக கரை சேரும். எப்போது படம் பார்க்கப் போகிறோம் என்று ஆர்வமாக இருக்கிறது .
ஒரு திரைப்படம் என்பது மறப்பதற்கு அல்ல, நினைப்பதற்கு என்று உருவாகி உள்ளது .
எதையோ ஒன்றை மறைப்பதற்கு எதையோ ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பேசினாலும் காசு, பார்த்தாலும் காசு, தாகம் வந்து தண்ணீர் குடித்தாலும் காசு, கழிப்பறை சென்றாலும் காசு. மனித வாழ்க்கையில் எல்லாமே பணம் சம்பந்தப்பட்டதாக ஆகிவிட்டது.
நீங்கள் பார்க்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கேட்க வைக்கப்படுகிற உலகத்தில் இருக்கிறீர்கள்.ஒட்டுமொத்த மனித வர்க்கத்தையே அபிப்ராயங்களை உருவாக்குவதும்,அபிப்ராயங்களை அழிப்பதும் , அதை வேடிக்கை பார்ப்பதும் என்று தான் வைத்திருக்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம்.அப்படி இருக்கிற இன்றைய உலகத்தில் ஈழத்து மக்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக,போருக்குப் பின்னாலான வாழ்க்கையை அவர்களுக்குள் இருக்கும் பரிந்தவிப்பைக் காட்டுகிற இந்த 'அந்தோனி' திரைப்படம் மாபெரும் வெற்றி அடையும்.
எனக்கு 'நீர்ப்பறவை' கால கட்டம் நினைவுக்கு வந்தது.இந்தப் படத்தை ஊடகங்கள் சுமந்து கொண்டு போய் மக்களிடம் சேருங்கள். ஒவ்வொரு சிறிய படத்திற்கும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் தான் துணை.வேறு யாருமே கிடையாது.தரமான படத்தை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் ரமணனுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே அம்மா அகிலா பாலு மகேந்திரா வந்து இருப்பது மகிழ்ச்சி.
அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவர் இங்கே வந்திருப்பது பெருமை.
எனது ஒவ்வொரு படத்தையும் அவருக்குப் போட்டுக் காண்பிப்பேன். ஆனால் இடி முழக்கத்தை மட்டும் போட்டுக் காண்பிக்கவில்லை - அது கமர்சியலாக இருப்பதால் போட்டுக்காட்டவில்லை. விழாக்களுக்காக மட்டும் படம் எடுத்தால் நம் வாழ்க்கையில் விழா என்பதே இல்லாமல் போய்விடும். எனவே அதை கமர்சியலாக எடுத்துள்ளேன்"என்று கூறினார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசும்போது,
"இந்தக் கரையில் இருந்து கொண்டு அந்தக் கரையைப் பார்த்திருக்கிறோம். நாம் எடுக்கும் படங்களில் கடலின் இந்தக் கரையைத் தான் பார்த்து இருக்கிறோம். அந்தக் கரையைப் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தங்கள் மண் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவாக்காமல் அவர்கள் தன்னிச்சையாக உருவாக்க வேண்டும். அப்படி ஒரு தன்னிச்சையான திரை உலகமாக இலங்கைத் தமிழ்த் திரையுலகம் உருவாக வேண்டும் .வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்" என்றார்.
இயக்குநர்களில் ஒருவரான ஜெனோசன் ராஜேஷ்வர் பேசும்போது,
" நான் இங்கே இருப்பதை உணர்வு பூர்வமாக நினைக்கிறேன்.நான் பல ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதே அரங்கில் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த அனுபவம் கொண்டவன் நான். தயாரிப்பாளர் முதலீடு செய்து உதவி கொண்டிருக்கிறார் என்றால் இந்த பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவோ உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
சுகிர்தன் எடுத்த 'மழைக்கால இரவுகள்' குறும்படம் தயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.இந்தப் படத்திற்காக பல அண்ணன்கள் தங்களை அறியாமலேயே உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.கேமராவை சொந்தமாக வாங்கிக் கொண்டு போய்தான் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தினோம். நாங்கள் நினைத்தபடியே படத்தை எடுத்திருக்கிறோம்.
வழக்கமான படமாக இல்லாமல் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இதை எடுத்திருக்கிறோம். இது ஒரு கடலோரக் காதல் காவியம்.
இது இலங்கை மண் சார்ந்த ஒரு காதல் கதை.அனைத்து சமூகத்தினரும் பார்க்க வேண்டும், ஆதரிக்க வேண்டும். அனைவரும் ஊக்கமளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.
இன்னொரு இயக்குநர் சுகிர்தன் கிறிஸ்துராஜா பேசும்போது,
"நல்ல மழை பெய்து எந்தன் காடு இங்கு கனிந்தது.நான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக வளர்ந்தது.கொம்புத்தேனை பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது. கூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது,என்ற மாதிரியான நிகழ்வு எனக்கு.
ஒரு படத்தில் சொல்லி இருப்பார்கள் 'காதலும் கடலும் எப்போது பார்த்தாலும் சலிக்காது' என்று.எங்கள் ஊரில் உள்ள காதலையும் கடலையும் இந்தப் படத்தில் காட்டி இருக்கிறோம். இந்தப் படம் எப்படி ஒரு அனுபவமாக இருக்கும் என்றால், காசு செலவழித்து இலங்கை வரத் தேவையில்லை. இந்த படத்திற்கு ஒரு டிக்கெட் எடுங்கள் ,யாழ்ப்பாணம் நகரத்தில் இறங்கி அழகான கிராமத்தில் ஒரு பஸ்ஸில் போகும்போது இளையராஜா பாடல்களை கேட்டுக் கொண்டு காற்று வீசும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இருக்கும்போது ஏற்படும் உணர்வை இந்தப் படம் கொடுக்கும்' என்றார்.
'உலக சினிமா' பாஸ்கரன் பேசும்போது,
'' நான் உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு படங்களைப் பார்ப்பவன். அதே உலகத் தரத்தோடு இந்த 'அந்தோனி' திரைப்படம் இருப்பதைப் பார்த்தேன். இந்த இயக்குநர்கள் இருவரும் கிருஷ்ணன் -பஞ்சு, தேவராஜ் - மோகன் போல வெற்றிகரமாக விளங்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படத்தின் கதாநாயகன் வின்சென்ட் என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் போல இருந்தார். கதாநாயகி உதிரிப்பூக்கள் அஸ்வினி போல ஒரு மோனாலிசா தன்மையுடன் இருந்தார்.இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
கதையின் நாயகனாக நடித்துள்ள 'கயல்' வின்சென்ட் பேசும்போது,
"நான் முதல் படமாக நடித்திருக்க வேண்டிய படம் 'நீர்ப்பறவை'. அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு என் குரு நாதர் பிரபு சாலமன் 'கயல்' படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் கதாநாயகனாக இல்லாமல் கதை நாயகனாக நடித்திருக்கிறேன்.இது எனக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் படத்தின் நாயகி டிஜே பானு 50 லட்சம் ரூபாய் கொடுத்து தெலுங்குப் படத்தில் அழைத்தபோது அதை மறுத்துவிட்டு இங்கே வந்திரு
“It’s Gonna Get Crazyyyy!” – 2026-ஐ அதிரவைக்கும் ‘டாக்ஸிக்’ டீசர் வெளியீடு
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்களில் முன்னணியில் திகழ்கிறது ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’. கடந்த சில மாதங்களாக வெளியான ஒவ்வொரு அப்டேடும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை படிப்படியாக உயர்த்தி வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ டீசர் அந்த பரபரப்பை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
ராக்கிங் ஸ்டார் Yash பிறந்தநாளில் வெளியான “ராயா அறிமுகம்” வீடியோவே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து Nayanthara கங்காவாக, Kiara Advani நாடியாவாக, Huma Qureshi எலிசபெத்தாக, Rukmini Vasanth மெலிசாவாக, Tara Sutaria ரெபெக்காவாக வெளியான கேரக்டர் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இப்போது டீசர் வெளியாகி, அந்த உலகத்தை முழுமையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘டாக்ஸிக்’ டீசர் வண்ணமயமானதோடு ரத்தம் தெறிக்கும் ஒரு பிரம்மாண்ட சினிமா உலகத்தை வெளிப்படுத்துகிறது. சர்க்கஸ் பின்னணியிலிருந்து கிழக்கு ஆசியத் தாக்கம் கொண்ட காட்சிகளுக்கு நகரும் இந்தக் கதை, வெவ்வேறு காலகட்டங்களை இணைக்கும் இருண்ட மற்றும் பரபரப்பான பிரபஞ்சத்தை உருவாக்குகிறது. அதிரடி காட்சிகள் மட்டுமல்லாமல், கதாபாத்திரங்களின் உளவியல் அடுக்குகளும் ஆழமான நடிப்பும் இந்த உலகத்தின் உண்மையான இதயத் துடிப்பாக இருப்பதை டீசர் உணர்த்துகிறது.
இந்த புயலின் மையத்தில் பிரமாண்டமாக நிற்பவர் யாஷ். அவரது இந்த மாற்றம் ஒரு முழுமையான புதிய அவதாரம் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர். ஒல்லியான, தீவிரமான தோற்றத்திலிருந்து போர்க்களத்தில் உருவான வலிமையான உடலமைப்பு வரை, ஒவ்வொரு லுக்கும் அவரது அர்ப்பணிப்பையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. அதைவிட முக்கியமாக, உடல் மொழி, பார்வை, நடையின் நுணுக்கம் ஆகியவற்றின் மூலம் பல அடுக்குகள் கொண்ட கதாபாத்திரத்தை அவர் உயிர்ப்பித்துள்ளார்.
டீசர் குறித்து தயாரிப்பாளர்கள் ஒரு வரியில் கூறியிருப்பது: “It’s gonna get crazyyyy.” திரையில் காணப்படும் வேகமும் காட்சிகளின் அதிர்வும் பார்த்தால், அந்த வாக்குறுதி வெறும் விளம்பர வசனம் அல்ல என்பது தெளிவாகிறது.
இந்த திரைப்படத்தை Geetu Mohandas இயக்கியுள்ளார். யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் இணைந்து எழுதியுள்ள இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகளாவிய வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. டீசர் தற்போது தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’, ஈத், உகாதி, குடி பட்வா போன்ற பண்டிகைகளுடன் இணைந்து 2026 மார்ச் 19 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இருண்ட காட்சியமைப்பு, சர்வதேச தரம் வாய்ந்த தயாரிப்பு, மற்றும் ராக்கிங் ஸ்டார் யாஷின் தீவிரமான புதிய அவதாரம்—‘டாக்ஸிக்’ 2026-இன் மிகப்பெரிய சினிமா அனுபவமாக மாறத் தயாராக உள்ளது. மார்ச் 19, 2026 – அந்த “கிரேஸி” உலகம் திரையரங்குகளில் வெடிக்கத் தயாராகிறது!
- உலக செய்திகள்
- |
- சினிமா













