சற்று முன்
சினிமா செய்திகள்
Fox Star Studios to release Rajathandhiram
Updated on : 15 February 2015
Having tasted resounding success with remarkable films like Raja Rani,
Cuckoo and Mundasupatti among a host of others in the Tamil industry, Fox
Star Studios will now be distributing the upcoming Tamil language feature
film, RAJATHANDHIRAM; a thrilling heist film.
The con-heist film, Rajathandhiram grabbed the attention of viewers
everywhere when it unveiled its first-look teasers and trailer. The 6 character-teasers, unravelling the story of each of its actors, was a cleverly conceived and
executed campaign. The first-of-its kind to be done for Tamil films, it garnered
huge responses from Twitter, YouTube users and on other social media.
The film Rajathandhiram has some interesting firsts, starting with its makers.
Producers White Bucket Productions and Sunland Cinemas make their
respective production debuts with this con-heist film.
Renowned director, Gautham Vasudev Menon is also associated with the film
as its Creative Producer and has ensured that the film is a quality offering that
strikes a chord with audiences everywhere.
Rajathandhiram is a city-based ‘con’ caper, laced with generous amounts of
revenge, wit, humour and romance. Narrated through a new-age screenplay,
the film presents a series of mind games transcending and testing friendships,
society and love. Directed by A G Amid, the film stars Veera, Regina Cassandra,
Ajai Prasath and debutante Darbuka Siva.
G V Prakash Kumar, the music director of the film has composed a beautiful
love song for the film while Sandeep Chowta has scored the film’s background
music and S R Kathir is the cinematographer of the film.
“We are proud to be associated with Fox Star Studios for our debut production,
Rajathandhiram. Thanks to our association with the legendary studio, this film
will have an extended reach, more viewers from a lot more places; giving us
greater exposure and in all, making the film ‘bigger’ in every way.” –Senthil
Veeraasamy, Producer, White Bucket Productions
Rajathandhiram is slated for an early March 2015 release.
சமீபத்திய செய்திகள்
அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!
தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீயூனியன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அருள்தாஸ் முன்னணி வேடத்தில் நடித்துள்ளதுடன், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன், சுப்பிரமணியன், ஜெமினி மணி, சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன், கராத்தே ராஜா, சிலுமிசம் சிவா, குட்டி கோபி, ஹரிஷ், அருண் உதயன், சரத், க்ரிஷ் & அய்ஷூ, காக்காமுட்டை ரமேஷ், பூவையார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விக்கி மேக் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்துள்ளார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார் மேற்கொண்டுள்ளார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக உருவாகி வரும் இப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குறிப்பாக அருள்தாஸின் வித்தியாசமான லுக் மற்றும் மற்ற கதாபாத்திரங்களின் தோற்றங்கள் படத்தின் கதை மீது ஆவலை தூண்டியுள்ளது.
‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்
லெஜெண்ட் சரவணன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் இசை மற்றும் ஆக்ஷன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு, படம் குறித்து தங்களது எதிர்பார்ப்புகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தனர். பாடலாசிரியர் விவேகா, படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் குறித்து பாராட்டுக்களை தெரிவித்ததுடன், லெஜெண்ட் சரவணனின் உழைப்பையும் வெற்றியின் ரகசியத்தையும் எடுத்துரைத்தார்.
பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது.
லெஜெண்ட் சரவணன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் பேசுவது வைரல் ஆகிறதா, இல்லையென்றால் வைரல் ஆவதை தான் அவர் பேசுகிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் வியாபாரத்தின் உச்சத்தில் இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டபோது "எங்க அப்பா ஒன்னு சொல்லி இருக்கிறார், எல்லோருக்கும் முன்னாடி கடைக்கு செல்ல வேண்டும், எல்லோருக்கும் பின்னாடி கடையை விட்டு வெளியில் வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார், அதை நான் பின்பற்றுகிறேன், அதுதான் என்னுடைய வெற்றிக்கு காரணம்," என்றார். இதுதான் வியாபார உலகின் பைபிள். அந்த கருத்தை அவர் சொன்னதும் மிகப் பெரிய அளவில் வைரலானது. அது தான் அவர் வெற்றியின் ரகசியம், இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற என் வாழ்த்துகள்," என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன் என்றால் அதற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் தான் முதன்மையான காரணம். இந்த திரைப்படத்தில் அப்பா-பொண்ணு சம்பந்தப்பட்ட ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். நான்கு பேர் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிற, நினைக்கும் ஒவ்வொருவரும் லீடர் தான். ஏற்கனவே லெஜெண்ட் சரவணன் நிஜமான லீடர் தான். நீங்கள் ரியலாக ஒரு லீடராக இருந்து கொண்டு. திரையிலும் லீடராக நீங்கள் தோன்றுவதை நாங்கள் வரவேற்கிறோம், எங்களுக்கு பெருமிதமாக இருக்கிறது.
நடிகை அறந்தாங்கி நிஷா பேசுகையில், "லீடர் என்கிற வார்த்தை யாருக்கு பொருந்தும் என்றால் எப்போதும் தன்னை மட்டுமே பெருமிதமாக பெருமைப்படுத்தி கொள்ளாமல் உடன் இருக்கும் அனைவரையும் பெருமைப்படுத்தும் மனிதர்கள் தான் லீடர். நான் எப்போது லெஜெண்ட் சரவணனின் கடைக்கு சென்றாலும் எங்களை அமர வைத்து "நிறைய படங்களில் நடிக்க வேண்டும், நன்றாக நடிக்க வேண்டும், நிறைய மேடைகளில் உங்களை பார்க்க வேண்டும்" என்று ஒவ்வொரு முறையும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். நிறைய கலைஞர்களை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பவர் லெஜெண்ட் சரவணன் ஐயா அவர்கள்.
இந்தப் படம் வெளியான பிறகு ஆறு மாதம் வரை சரவணா ஸ்டோர்ஸ் கடைக்கு செல்ல முடியாது. ஏனெனில் இந்தப் படத்தில் அவரை திட்டுவது போன்ற காட்சியில் நடித்திருக்கிறேன். அதை நானாக சொல்லவில்லை இயக்குநர் எழுதிக் கொடுத்ததை தான் பேசி நடித்தேன். இந்தப் படத்தில் என்னுடைய கணவரும் நடித்திருக்கிறார். வீட்டில் எப்படி அமைதியாக இருப்பாரோ அதேபோல் படத்திலும் அமைதியாக இருக்கிறார்.
பேபி இயல் பேசுகையில், "இப்படத்தில் நான் சிரித்தேன், அழுதேன், கோபமாக இருந்தேன், சென்டிமென்ட் காட்சிகள் எல்லாம் இருந்தது. இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ். வெங்கடேஷ் எங்கள் அப்பா நடித்த 'டிக் டிக் டிக்' படத்தில் பணியாற்றியவர். அவரைப் பற்றி என் அப்பா லக்கி கேமராமேன் என சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடைய ஒளிப்பதிவில் நடித்ததால் நான் என்னை லக்கியாக ஃபீல் செய்கிறேன்.
நடிகர் ஷாம் பேசுகையில், "கருடன் படத்தை பார்த்த பிறகு என் நண்பர்களிடம் இந்தப் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையை பகிர்ந்து கொண்டேன். அந்தப் படத்தில் எல்லா கேரக்டர்களையும் அவர் சரியாக கையாண்டிருக்கிறார் இதை சொன்ன சில நாட்களில் இயக்குநர் துரை செந்தில் குமாரிடமிருந்து அழைப்பு வந்தது, பிறகு சந்திப்பு நடந்தது. அவரிடம் நான் கதையைக் கேட்கவில்லை, ஏனென்றால் தமிழ் சினிமாவில் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க இயக்குநர் அவர். அவர் இயக்கியிருக்கும் அனைத்து படங்களிலும் ஒரு கமர்ஷியல் வேல்யூவும் இருக்கும், அழகான மெசேஜும் இருக்கும் சினிமா பிளாட்பார்மை மிக தரமாக பயன்படுத்திக் கொள்பவர்களில் துரை செந்தில்குமார் முக்கியமானவர்.
இந்தப் படத்திற்காக டப்பிங் பேசும்போது எல்லா கேரக்டருக்கும் அவரே டப்பிங் பேசி வைத்திருந்தார். இதுதான் எனக்கு வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவாக இருந்தார். இதை இங்கு யாரும் செய்ய மாட்டார்கள்.
எல்லோரும் லெஜெண்ட் சரவணனின் மற்றொரு முகத்தை பார்த்திருக்க மாட்டார்கள், படப்பிடிப்பு தளத்தில் நான் அவருடன் பணியாற்றிய காட்சிகளில் அவரின் சிறந்த நகைச்சுவை உணர்வு கலந்த பேச்சை கேட்டு ரசித்திருக்கிறேன். வாழ்க்கையைப் பற்றிய பெரிய கண்ணோட்டத்தை அவர் எப்போதும் வைத்திருக்கிறார். அதை அவர் தொடர்ந்து பின்பற்றுகிறார். அவருக்கு இது இரண்டாவது படம், நிச்சயமாக அவர் சினிமாவில் தொடர்ந்து இருப்பார், நிறைய படங்களில் நடிப்பார். அவருடைய தயாரிப்பு மூலம் நிறைய இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவரைப் போன்றதொரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஒருவர் தமிழ் சினிமாவுக்கு அவசியம் தேவை," என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், "முதலில் இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கும், என்னுடன் உழைத்த அனைத்து குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். குறிப்பாக, இந்தப் படத்திற்காக இரவு பகலாக உழைத்து, பல நாட்கள் தூக்கமே இல்லாமல் பாடுபட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் படத்தில் பாடல்கள் உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில், ஒரு பெரிய திருப்தியையும் கொடுத்தது. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் மிகுந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, இயக்குநர் துரை செந்தில்குமார் சார் எப்போதும் சிறிய சிறிய விஷயங்களையும் கவனித்து, தேவையான மாற்றங்களைச் சொல்லி, அந்தப் பாடல்களை இன்னும் சிறப்பாக மாற்றினார். ஒரு சிறிய BGM மாற்றம் கூட எவ்வளவு பெரிய பலன் தரும் என்று இந்தப்படத்தில் நான் தெரிந்து கொண்டேன். துரை சார் பற்றி சொல்லவேண்டுமெனில், அவர் மிகவும் அமைதியானவர், ஆனால் மிகவும் தீவிரமாக வேலை பார்க்கும் ஒரு இயக்குநர். அவர் குழுவை முன்னேற்றும் விதமும், ஒவ்வொரு விஷயத்தையும் சீராக செய்து முடிப்பதும் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் வேலை செய்வது எங்களுக்கு ஒரு பெரிய அனுபவம்.
லெஜண்ட் சரவணன் சார் பற்றி எல்லோரும் பல விஷயங்கள் சொன்னார்கள். இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு புதிய முகத்தை காட்டியிருக்கிறார். ஒரு தயாரிப்பாளர் அல்லது வணிகராக மட்டும் அல்லாமல், முழுமையான அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஒரு நடிகராக அவர் இந்தப் படத்தில் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்தப்படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஹீரோவை அறிமுகப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். 'லீடர்' எனக்கு மிகவும் முக்கியமான படம். இந்தப் படத்தில் நான் செய்த வேலை எனக்கு ஒரு தனி திருப்தியை கொடுத்துள்ளது. இந்தப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படக்குழுவில் இருந்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்பகலைஞர்களுக்கும் என் நன்றிகள். 'லீடர்' படம் கண்டிப்பாக ஒரு பெரிய வெற்றி பெறும். அனைவரும் திரையரங்கில்சென்று பார்த்து ஆதரிக்க வேண்டும், நன்றி," என்றார்.
இயக்குநர் துரை செந்தில் குமார் பேசுகையில், “லீடர் எனது ஆறாவது படம். என்னுடன் பணியாற்றிய என் குழுவினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. வசனங்களில் உதவிய அருண், நடிப்பு பயிற்சியாளர் ராஜேஷ் – உங்களுக்கும் என் நன்றி. இந்தக் குழுவின் ஆதரவு இல்லாமல் இந்தப் படத்தை நான் உருவாக்கியிருக்க முடியாது.
முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னை தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மீக இணைப்பு போல இருந்தது.
ஒரு ஆக்ஷன் காட்சிக்கு சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பை காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.
என்னுடைய நண்பர்களான ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் மற்றும் கலை இயக்குநர் துரைராஜ் இந்தப் படத்திற்கு 200 சதவீதம் உழைத்துள்ளனர். நல்ல நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். கருத்து கேட்கும் போது நேர்மையான பதிலை வழங்குவார்கள் – அது மிகவும் முக்கியம். எடிட்டர் பிரவீன் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் மகேஷ் மாத்யூ – உங்களுக்கும் என் நன்றி. இயக்குநரின் பார்வையை முழுமையாக புரிந்து கொண்டு அதை திரையில் கொண்டு வரும் கலைஞர்கள் மிகவும் அரிது. அந்த வகையில் நீங்கள் இருவரும் எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தீர்கள். பிரவீன் என் எண்ணங்களை திரையில் அழகாக வெளிப்படுத்தினார்.
இறுதியாக… லெஜெண்ட் சார். இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களை சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் 'கருடன்' வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காக காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் – அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.
“நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது” என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார். அனைவருக்கும் இப்படம் கண்டிப்பாக பிடிக்கும், நன்றி," என்றார்.
லெஜெண்ட் சரவணன் பேசுகையில், "இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் ஆகியோருக்கு நன்றி. இன்றைய சூழலில் போர் மேகங்கள் சூழ்ந்து மக்களுக்கு ஒரு பாதுகாப்பாற்ற தன்மை நிலவிக் கொண்டிருக்கிறது இந்தப் போர் விரைவில் நிறுத்தப்பட்டு மக்கள் அனைவரும் மீண்டும் மகிழ்ச்சியாக சந்தோஷமான, பாதுகாப்பான, ஒரு அன்பான வாழ்க்கையை வாழ உங்களுடன் சேர்ந்து இறைவனிடம் நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.
'லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு என்னுடைய இரண்டாவது படம் 'லீடர்'. இப்படம் வரும் ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் பிள்ளையும், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது, அதற்கு பிறகு நடக்கும் விஷயங்களை இயக்குநர் துரை செந்தில்குமார் இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும், அழகாகவும் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அவர் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டார். எவர் ஒருவர் வேலையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு வேலை செய்கிறார்களோ அந்த வேலை அற்புதமாக அமையும், இந்த படமும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது.
இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கின்றன, அதற்கான வரிகளும் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, ஜெய்ப்பூர், ஊட்டி, தூத்துக்குடி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை ஒரு டிரெயினில் படமாக்கிக் கொண்டிருந்தோம். குறுகலான இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடனும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுடனும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது என்னுடைய தயாரிப்பு நிர்வாகியை அழைத்து இங்கு எத்தனை ஆம்புலன்ஸ் இருக்கிறது என்று கேட்டேன், ஒன்றுதான் என்றார். உடனடியாக மேலும் இரண்டு அல்லது மூன்று ஆம்புலன்ஸ்களை வரவையுங்கள், ஏனென்றால் இங்கு யாருக்கு எப்படி எங்கு அடிப்படும் என்று தெரியவில்லை. எனக்கு கூட அடிபடலாம் அதனால் தயாராக இருக்க வேண்டும் என்று சொன்னேன், ஆனால் கடவுள் அருளால் அந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாருக்கும் பெரிதாக அடிபடவில்லை. பத்தாவது நாளில் எனக்கு காலில் லேசாக அடிபட்டது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாமா, வேண்டாமா, என்ற நிலை ஏற்பட்டது. என்னுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மனதில் வைத்து அவர்களை காத்திருக்க வைக்க வேண்டாம், கூடாது என்பதற்காக உடனடியாக முதலுதவி நிவாரண சிகிச்சையை எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். இதற்கான ஆற்றல் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர் கொடுத்த உற்சாகத்தாலும் வந்தது. இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!
வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்களின் தயாரிப்பில், டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பு வெளியீட்டை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர் இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம், சக்ரா பிக்சர்ஸ் வெற்றி, தயாரிப்பாளர்கள் சைதன்யா மற்றும் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு படத்தின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
1957–58 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ளது. கேரளாவின் அந்நேர சமூக-அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கதாபாத்திரங்களுடன் உருவாக்கப்பட்ட திரைக்கதை, ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி. ரவி, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை டிஜோ டோமி மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை நௌஃபல், பிரிஜீஷ், சானுக்யா, சைதன்யா மற்றும் சரண் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த படத்தை சக்ரா பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
இணை தயாரிப்பாளர் மேகா ஷ்யாம் பேசுகையில்,
''திரையுலகில் 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இப்போதுதான் முதல் முறையாக இணை தயாரிப்பாளர் என்ற முறையில் மேடை ஏறி இருக்கிறேன். இது எனக்கு மறக்க முடியாத தருணம். என்னுடைய சகோதரர்கள் சானுக்யா - சைதன்யா - சரண் ஆகியோரை பாராட்டுகிறேன். படக்குழுவினரை பாராட்டுகிறேன். படத்தைப் பற்றி நான் அதிகம் பேசப் போவதில்லை. இந்தப் படம் எமோஷனல் ஆக்சன் என்டர்டெய்னர். இந்தப் படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறோம். டொவினோ தாமஸ், கயாடு லோஹர் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். இயக்குநரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
சக்ரா பிக்சர்ஸ் வெற்றி பேசுகையில்,
''இது எங்களுக்கு முதல் திரைப்படம். இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கன்டென்ட் உள்ள படம். ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள்,'' என்றார்.
தயாரிப்பாளர் சரண் பேசுகையில்,
''இந்தப் படம் எங்கள் நிறுவனத்திற்கு முதல் திரைப்படம். நாங்கள் மூன்று சகோதரர்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை தொடங்கினோம். தற்போது வெளியிடுகிறோம். இந்தத் திரைப்படத்தின் மூலம் நாங்கள் 1950 களில் கேரளாவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மறு உருவாக்கம் செய்து சொல்லி இருக்கிறோம். இதுபோன்றதொரு படத்தை நாங்கள் முதலில் தயாரித்ததற்காக பெருமிதம் கொள்கிறோம்,'' என்றார்.
நடிகை கயாடு லோஹர் பேசுகையில்,
''இது என்னுடைய மூன்றாவது மலையாள திரைப்படம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதாபாத்திரம் வித்தியாசமானது. என் இதயத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமும் கூட. இதுபோன்ற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநருக்கும் , தயாரிப்பாளருக்கும் நன்றி. நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அனைவரும் கூட்டணியாக இணைந்து கடுமையாக உழைத்து ஃபேமிலி என்டர்டெய்னராகவும் உருவாக்கி இருக்கிறோம். டொவினோ தாமஸ் சிறந்த திறமையுள்ள சக நடிகர் அவருக்கும் நன்றி,'' என்றார்.
நடிகர் டொவினோ தாமஸ் பேசுகையில்,
''இப்படத்தின் கதையை நாங்கள் 2018 ஆம் ஆண்டில் விவாதித்தோம். நீண்ட விவாதத்திற்குப் பிறகு திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்து 2025 ஆம் ஆண்டில் தான் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினோம். இயக்குநரும், நானும் வேறு படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால், அவை அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு இப்படத்தில் இணைந்தோம். அதன் காரணமாகவும் இப்படத்தின் பணிகள் சற்று தாமதமானது. இப்படத்தின் கதாசிரியர் சுரேஷ்பாபு திரைக்கதையை செழுமைப்படுத்தினார். நான் முதன்முதலாக கேட்ட கதை வடிவத்தை விட.. இந்தக் கதை அமைப்பு சிறந்ததாக இருந்தது.
நூறு நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நடிகர்களுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இது எளிதான காரியம் அல்ல. இதற்கு கடின உழைப்பும் தேவை. திட்டமிடலும் தேவை. இது ஒரு பீரியட் மூவி. 1957- 58 கால கட்டத்தை சார்ந்த படம். அந்த காலகட்டத்தில் கேரளாவில் இருந்த சமூக அரசியல் கட்டமைப்பு, பின்னணியில் இடம்பெறும்.
இது உண்மைச் சம்பவம் அல்ல. ஆனால் சில சம்பவங்களை தழுவி நிறைய கற்பனையான கதாபாத்திரங்களுடன் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பார்த்து விட்டனர். அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நான் இந்த படத்தை ரசிகர்களுடன் திரையரங்குகளில் காண்பதற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்கள் இப்படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை அவர்களுடன் இருந்து பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன்.
எனக்கு முழுமை அடையாத திரைப்படங்களை பார்த்து கணிக்கத் தெரியாது. ரசிகர்களுடன் திரைப்படத்தின் முழு வடிவத்தை திரையரங்குகளில் பார்ப்பது தான் எனக்கு பிடிக்கும். அதனால் இந்த படத்திற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதே போல் படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை ஏமாற்றாது. '' என்றார்.
‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. S. S. லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் கட்டத்தில் தீவிரமாக முன்னேறி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தில் பஸில் ஜோசப் மற்றும் L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணி இந்த படத்திற்கு தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்தின் காட்சியமைப்புக்கு புதுமையான வண்ணத்தை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் P.A., ஷாரீக் ஹாஸன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப அணியிலும் பல திறமைகள் இணைந்துள்ளன. ஒளிப்பதிவை லியோன் பிரிட்டோ மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ஜென் மார்ட்டின் அமைத்துள்ளார். படத்தொகுப்பை பரத் விக்ரமன் கவனிக்க, கலை இயக்கத்தை P. S. ஹரிஹரன் மேற்கொண்டுள்ளார்.
முழுக்க முழுக்க காமெடி என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ராவடி’ திரைப்படம், ரசிகர்களுக்கு லைட்டான, ரசிக்கத்தக்க பொழுதுபோக்கை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது. மேலும், L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது எடிட்டிங், பின்னணி இசை மற்றும் VFX உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் முடிவடைந்ததும், வரும் கோடை காலத்தில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியாகியுள்ள அப்டேட்கள் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘ராவடி’, கோடை ரிலீஸில் ஒரு முழுமையான காமெடி என்டர்டெய்ன்மெண்ட் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!
தமிழ் மற்றும் மலையாள OTT பார்வையாளர்களுக்காக ZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
தயாரிப்பு கட்டத்தில் ‘Once Upon a Time in Kayamkulam’ என்ற பெயரில் உருவான இந்த தொடர், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய தலைப்பில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த தலைப்பு, சீரிஸின் விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய உலகத்தை அழகாக பிரதிபலிக்கிறது.
இந்த சீரிஸை அமீன் பாரிஃப் எழுதி இயக்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நடிகர்கள் வரிசையில் முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், சவித்திரி, அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ் உஷார், விக்னேஷ்வர், அருண்குமார் பவும்பா மற்றும் சித்திரசேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதை, அமைதியான ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறும் விசித்திரமான குற்றச்சம்பவத்துடன் தொடங்குகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சப்-ஜெயிலை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்துகிறது. வழக்கத்திற்கு மாறாக, யாரோ ஒருவர் சிறையிலிருந்து தப்பிச் செல்லாமல், அதற்குள் நுழைவதே இந்த மர்மத்தின் மையமாகிறது.
புத்தகங்களில் மூழ்கியிருக்கும் ஒரு ஜெயிலரும், அளவுக்கு மீறிய ஆர்வமுள்ள ஒரு கான்ஸ்டபிளும் இந்த புதிரை புரிந்துகொள்ள போராடுகின்றனர். ஆனால், மர்மமான திருடன் அவர்களை விட பல அடிகள் முன்னிலையில் இருந்து, தானே உருவாக்கிய குழப்பங்களை ரசித்தபடி இருக்கிறான். இதற்கிடையில், சாதாரண ஊர்மக்கள், தங்களை டிடெக்டிவ்களாக நினைக்கும் சிலர், மற்றும் தெரியாமலே இந்த வழக்கில் சிக்கிக்கொள்ளும் கைதிகள் — அனைவரும் சேர்ந்து இந்த கதையை இன்னும் வினோதமாக மாற்றுகின்றனர்.
இதனால், ஒரு சாதாரண விசாரணை வழக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான வேட்டையாக மாறுகிறது. ஒவ்வொரு சம்பவமும் புதிய மர்மத்தை வெளிப்படுத்தும் இந்த உலகத்தில், எதுவும் எளிதாக இல்லை என்பதே ‘காக்கி சர்கஸ்’ சீரிஸின் முக்கிய சுவாரஸ்யம்.
இயக்குநர் அமீன் பாரிஃப் கூறுகையில்…,
“இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இது நமக்குத் புதுமையான கதைக்களத்தில் விளையாடும் ஒரு அரிய வாய்ப்பை இது தந்தது — ஒரு பக்கம் நகைச்சுவை, ஒரு பக்கம் திரில்லர், இன்னொரு பக்கம் வித்தியாசமான கற்பனை, ஆனால் அதே சமயம் ஒரு சிறிய நகரத்தின் இயல்பான உண்மைத்தன்மையையும் இழக்காமல் கதை சொல்ல முடிந்தது. தயாரிப்பின் ஆரம்ப நிலையில் இருந்தபோதே, இந்த சீரிஸின் மையம் அதன் கதாபாத்திரங்கள்தான் என்பதை நாங்கள் உணர்ந்தோம். குழப்பத்தின் மத்தியில் அவர்கள் வெளிப்படுத்தும் விசித்திரமான, நகைச்சுவையான, மனித மனதின் இயல்பான குறைகளுடன் கூடிய உணர்வுகளே இக்கதையின் இதயம். இந்த கதையை அதன் அனைத்து தனிச்சிறப்புகளுடனும் சொல்ல ZEE5 எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தது. நாங்கள் உருவாக்கிய இந்த ‘சர்க்கஸ்’ உலகத்தை பார்வையாளர்கள் ரசிப்பதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.
நடிகர் முனிஷ்காந்த் கூறுகையில்,
“நான் இதுவரை நடித்தவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது ‘காக்கி சர்கஸ்’. இது கணிக்க முடியாத, வேகமாக நகரும், அதே நேரத்தில் நகைச்சுவையுடனும், நிஜத்தன்மையுடனும் நிறைந்த கதாபாத்திரங்களை கொண்ட ஒரு சீரிஸ். இதில் எனக்கு மிகவும் பிடித்தது — நகைச்சுவைக்கும் பதற்றத்துக்கும் இடையிலான அசாதாரண சமநிலை. ஒவ்வொரு காட்சியும் எந்த விதமாகவும் மாறிவிடும் என்ற உணர்வு இருக்கும். இது புதுமையானது, நம் மண்ணின் வாசனையுடன் கூடிய கதை, மிகவும் வேடிக்கையானதும் கூட. இப்படிப்பட்ட கதைகளுக்கு ZEE5 போன்ற தளம் கிடைப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.
பார்வையாளர்களுக்கு எதிர்பாராத சுவாரஸ்யங்கள், பரபரப்பு மற்றும் வித்தியாசமான நகைச்சுவை கலந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமைய உள்ள ‘காக்கி சர்கஸ்’, வரும் ஏப்ரல் 10 முதல் ZEE5 தளத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.
அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!
KRG Kannan Ravi Group நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “TN 2026” திரைப்படம், அரசியல் பின்னணியுடன் கூடிய பரபரப்பான கமர்ஷியல் காமெடி படமாக ரசிகர்களை கவர தயாராகியுள்ளது. கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படம், அரசியல் பகடியையும் சமூக அக்கறையையும் ஒருங்கே கலந்த கதையம்சத்துடன் உருவாகியுள்ளது. சிரிப்பூட்டும் காட்சிகளுக்கு இடையே சிந்திக்க வைக்கும் கருத்துக்களையும் பதிவு செய்யும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான அதிகாரப்பூர்வ போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. மேடையின் மீது கையை உயர்த்தி நிற்கும் நட்டி நட்ராஜ், அவரைச் சுற்றி கோஷமிடும் கூட்டம், கொடிகள் மற்றும் பகடி வசன பதாகைகள் ஆகியவை அரசியல் சூழலை நகைச்சுவையாக பிரதிபலிக்கின்றன. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி, படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்திற்கு கதை எழுதியுள்ள தம்பி ராமையா, தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் சமூக பார்வையை இந்த கதையில் வெளிப்படுத்தியுள்ளார். திரைக்கதை மற்றும் இயக்கத்தையும் உமாபதி ராமையா திறமையாக கையாள்ந்துள்ளார்.
நாயகியாக சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா ஆகிய மூவரும் முதல் முறையாக இணைந்து நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, வடிவுக்கரசி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சாண்டி சிறப்பு தோற்றத்தில் (கேமியோ) வருகிறார்.
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், “TN 2026” திரைப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அரசியல் நையாண்டி, நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் அம்சங்களின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'
ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் ‘ஹபீபி’. வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் முக்கிய பலமாக அனுபவமிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது நீண்டகால அனுபவம், வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இப்படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியதோடு, படக்குழுவினருக்கும் உறுதியான துணையாக அமைந்துள்ளது.
படத்தில் தனது பங்களிப்பு குறித்து கஸ்தூரி ராஜா பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ திரைப்படத்தில் எனது பங்கு படக்குழுவினரை ஆதரித்து அவர்களை மேலும் வலுப்படுத்தியதுதான். ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களை கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத்தன்மை உள்ளது” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் பகிர்ந்து கொண்டதாவது, “’ஹபீபி’ படத்தில் கஸ்தூரி ராஜா சார் இணைந்தது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. அவரது அனுபவமும் கதை பற்றிய புரிதலும் எங்கள் பயணத்திற்கு தெளிவும் நம்பிக்கையும் அளித்தது. மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும். ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும். திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.
இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம், திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.
கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும். இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும். நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும். ‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம்.
'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி
பாத்வே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு தயாரிப்பில், இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார் மேனி செல்வம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். ‘கார் மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை யுவராஜ் தக்ஷன் மேற்கொண்டுள்ளதுடன், மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்துள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் ஃபீல் குட் எண்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது.
நிகழ்வில் நடிகர் கோதண்டம், கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன், ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன், இசையமைப்பாளர் ராமானுஜம், கலை இயக்குநர் சங்கர், பாடலாசிரியர் மணி அமுதவன், எடிட்டர் ஜெகன், நடிகர்கள் படவா கோபி, சங்கரநாராயணன், நடிகைகள் அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமௌலி, தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு, இயக்குநர் ராம் சக்ரி, நடிகர் சமுத்திரக்கனி, நடன இயக்குநர் ஹரிஷ், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா லட்சுமி, ஒலி வடிவமைப்பாளர் ராகவ் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து படக்குழுவினர் அனைவரும் மிகுந்த நம்பிக்கையுடன் பேசினர். குடும்பம் முழுவதும் திரையரங்கிற்கு வந்து ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ‘கார் மேனி செல்வம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் அருண் ரங்கராஜுலு பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது திரைப்படம். இதற்கு முன்னதாக பத்து ஆண்டுகளுக்கு முன் 'குறையொன்றுமில்லை' என்ற திரைப்படத்தை தயாரித்தேன். இந்த திரைப்படம் ஒரு ஃபேமிலி டிராமா. அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் எளிதாக தொடர்பு கொள்ளும். இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.
இசையமைப்பாளர் ராமானுஜம் பேசுகையில், "இந்த படத்திற்காக குழுவாக இணைந்து பணியாற்றி இருக்கிறோம். பாடல்கள், இசை, பின்னணி இசை என அனைத்தும் நன்றாக அமைந்திருக்கிறது. பாடலில் ஏ ஐ (AI) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. அனைத்து இசைகளும் நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கிறது. பாடல்களை கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பிரபலமான இசை கலைஞர்களுடன் இணைந்து பதிவு செய்தோம். படமும் நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்
கிரியேட்டிவ் புரொடியூசர் ஸ்ரீ சரவணன் பேசுகையில், "இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செந்தமிழனுக்கு நன்றி. நிகழ்விற்கு வருகை தந்த படக் குழுவினருக்கும் நன்றி. தயாரிப்பாளரும் , இயக்குநரும் எனக்கு 15 ஆண்டு காலமாக நெருங்கிய நண்பர்கள். அதனால் இந்தப் படத்தில் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களுக்கும் நன்றி. 'கார் மேனி செல்வம்' ஏப்ரல் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்," என்றார்.
நடிகர் கோதண்டம் பேசுகையில், "இந்தப் படத்தை 'ஒரு ஆம்பளயின் மனசு ஒரு ஆம்பளைக்குத் தான் தெரியும்' என்பது போல் இயக்குநர் எடுத்திருக்கிறார். பிரசவ வலி என்பது ஒரு தாயால் மட்டும் தான் உணர முடியும். உலகத்தில் அதைப் போன்ற ஒரு வலியை வேறு யாராலும் உணர முடியாது என்று சொல்வார்கள். அந்த வலி - யாராலும் தாங்க முடியாத வலி. மறுஜென்மம் எடுப்பது போன்றதொரு வலி.
ஒரு பையன் தன் அப்பாவிடம் ஒரு பொருளைக் காட்டி வாங்கித்தா என சொல்கிறான். அதை அப்போது அந்த அப்பாவால் வாங்கித் தர முடியவில்லை என்றால் அப்போது அவன் அனுபவிக்கும் வலி இருக்கிறதே, அதை எதனோடும் ஒப்பிட முடியாது. இந்த வலியை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பாக்களும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
குழந்தை மட்டுமல்ல மனைவி கேட்ட பொருளைக் கூட ஒரு கணவனால் வாங்கித் தர முடியவில்லையே என்ற வலியை சொல்வது தான் இந்தப் படம். பெண்களால் ஆண்கள் எத்தகைய சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் தகப்பனாகவும், கணவனாகவும் சமுத்திரக்கனி அற்புதமாக நடித்திருக்கிறார். 'கார் மேனி செல்வம்' படத்தில் யாரும் நடிக்கவில்லை. அனைவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள், இதனால் இந்த படம் பார்க்கும்போது ரசிகர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகும்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழக அரசு திரையரங்கத்தை கட்டி அதில் குறைந்த கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் இல்லாமலும், திரையரங்கத்திற்குள் விற்கப்படும் தின்பண்டங்கள் நியாயமான விலையிலும் வைத்து படங்களை திரையிட வேண்டும். அப்படி திரையிட்டால் பல இயக்குநர்களின் வாழ்க்கை காப்பாற்றப்படும். திரைத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை கடந்து பலருக்கு வாழ்க்கை, லட்சியம்," என்றார்.
நடிகை அபிநயா சைகை மொழி மூலம் பேசுகையில், "இந்தப் படத்தில் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள் மூலமாக இல்லாமல் இயக்குநரே எனக்கான திரைக்கதையை முழுவதுமாக விவரித்து நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம்," என்றார்.
நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி பேசுகையில், "அற்புதமான கதாபாத்திரத்தை எனக்கு வழங்கி வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நான் நிறைய நல்ல மனிதர்களை சந்தித்தேன். மிகவும் அன்பான அரங்கத்தில் இருந்தேன். மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அன்பும், எளிமையும் அதிகமாக இருந்தது. அதுதான் படத்திலும் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. அன்பு நிறைந்த படம். இதுபோன்ற படங்களுக்கு ஆதரவு தாருங்கள்," என்றார்.
எழுத்தாளர் செந்தமிழன் பேசுகையில், "எனது நண்பர்கள் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர் ராம் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன். நேற்று இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் கருவில் இருந்து சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்தத் திரைப்படம் இன்று உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சூழலை சில மாதங்களுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் பணியாற்றுபவர்களுடைய மன நெருக்கடி இன்று ஒரு போரினால் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் அதே மன நெருக்கடியை பதிவு செய்கிறது. அது ஆயுதப் போரினால் விளைவது அல்ல, சமூக உளவியல் போரினால் எழுவது.
இந்தத் திரைப்படம் ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கோ அல்லது அது போன்ற வேறு நாடுகளுக்கோ வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வதற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வியை இந்த திரைப்படம், மிகவும் அழகாக, உணர்ச்சி அளவில் நேர்மையாக கேள்வி எழுப்புகிறது.
தமிழர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்பே கடலோடிகள் தான். நாம் எல்லா நாடுகளுக்கும் சென்று இருக்கிறோம். சில நாட்கள் அங்கு தங்கி இருக்கிறோம். தமிழர்களுக்கு பல நாடுகளுக்கு சென்று பரவி வாழ்வது புதிதல்ல. குற்றமும் அல்ல. கேள்வி என்னவென்றால், நீங்கள் எங்கு இருந்தாலும், உடல் நலமும், மன நலமும் குன்றாமல் இருக்கிறீர்களா என்பதுதான். ஆம் என்றால் அது உன் ஊர். இல்லை என்றால் அது உன் ஊர் அல்ல. சென்னை மாநகரில் இருப்பவர்களுக்கும் இந்த கேள்வி உரியது. இதற்கு அவர்களுடைய மனதில் பதில் இருக்கிறது, மனதிற்கு அவர்கள் பதில் அளித்துக் கொள்ளலாம். வெளியே என்ன பேசினாலும் உள்ளே ஒருவன் இருக்கிறான். அவன் உண்மையை உணர்த்துகிறான் அல்லது அவன் நம்மிடம் உண்மையை எதிர்பார்க்கிறான். நான் எங்கு இருந்தாலும் உடல் நலத்துடனும் மன நலத்துடனும் இருக்கிறேன் என்று உள்ளுக்குள் உரைக்க முடிந்தால் நீங்கள் உங்கள் ஊரில் இருக்கிறீர்கள்.
இந்தக் கருத்தின் சில சாயல்களை இந்த படத்தில் நான் பார்த்தேன். உண்மையில் ராம் சக்ரி எனும் இளைஞர் என்னிடம் இந்த கருத்துகளை கேட்டுவிட்டு படத்தை இயக்கவில்லை. இப்படத்தின் பணிகள் நிறைவடையும் தருணத்தில் நண்பர் சமுத்திரக்கனி மூலமாக என்னை சந்தித்தார். இதுவே இறைவனுடைய அரவணைப்பு தான் என இந்த மேடையில் பதிவு செய்கிறேன்.
இயக்குநர் ராம் சக்ரி பேசுகையில், "இந்த விழாவில் எழுத்தாளர் செந்தமிழன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியது தான் இந்த படத்திற்கு கிடைத்த பாக்கியமாக நினைக்கிறேன்.
அவருடைய எழுத்துக்கள் மூலமாக நான் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம் என நான் நினைக்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த சிலர் சமுத்திரக்கனியின் 'ஸ்கூல் பஸ்' எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். நான் இதற்கு முன் 'குறையொன்றுமில்லை' படத்தை கார்த்திக் என்ற பெயரில் இயக்கினேன். அதன் பிறகு திரையுலகில் நிறைய கார்த்திக் இருக்கிறார்கள் என்பதற்காக எனது பெயரை ராம் சக்ரி என மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய முதல் படத்தை கிரௌட் ஃபண்டிங் மூலம் 60 நபர்களிடம் நிதி திரட்டி உருவாக்கினேன். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் ஸ்கிரிப்ட் நண்பர் ஸ்ரீராம் மூலமாக சமுத்திரக்கனியிடம் சென்றடைந்தது. அவர் திரைக்கதையை முழுவதுமாக படித்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மனிதன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா, இல்லை செல்வத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? இதில் நிம்மதியுடன் இருக்க வேண்டும் என்று தானே சொல்ல வருகிறாய் என்று சொல்லும் போது நான் சொல்ல நினைத்த விஷயத்தை அவர் குறிப்பிட்டது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன் நீ எப்போது தயாரோ அப்போது நானும் தயார் என்றார். அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் தயார் என்று அவரிடம் சொன்ன போது, உடனே ஓகே சொன்னார். என்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர் என்னுடன் இணைந்து பயணித்தது எனக்கு தற்போது வரை வியப்பாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பளித்த சமுத்திரக்கனிக்கு நன்றி.
புது முகங்களை வைத்து படமெடுப்பது ரிஸ்க். அது இன்றைய சூழ்நிலையில் மிகவும் கஷ்டமானது. படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து படத்தின் வெளியீடு வரை பணம் இருக்க வேண்டும். ஃபர்ஸ்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, செகண்ட் ஆஃப் நன்றாக இருக்கிறது, காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை, என்ற விமர்சனங்களை விட படம் முழுவதும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் பெட்டர்மென்ட் இருக்கிறது என்றால் தான் வணிக ரீதியாக திரையுலகில் சர்வைவல் ஆக முடியும்.
இந்த மூன்று விஷயங்களையும் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய முதல் படத்திலிருந்து எனக்கு கிடைத்த புரிதல். முதல் காட்சியிலிருந்து உச்சகட்ட காட்சி வரை எந்தவித சமரசமும் இல்லாமல் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதை தெரிந்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.
நடிகை அபிநயா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் ஒரு ஆன்மிக உணர்வு பரவும். படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் கேட்ட கேள்விகள் அந்த கதாபாத்திரத்தை மேலும் சிறப்பானதாக ஆக்கியது.
இந்த படத்திற்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் குறைவு என்றாலும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ராமானுஜம் பெரும் பங்காற்றியிருக்கிறார். அவர் இந்தியன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார், வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசையையும் கொடுப்பார். ஒரு படைப்பு என்பது கூட்டு முயற்சி தான். தனி ஒருவர் இதை நான் செய்தேன் என்று சொல்ல முடியாது. நடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை ஒவ்வொருவரின் பங்களிப்பும் இதில் இடம் பிடித்திருக்கிறது. இசையை பொருத்தவரை நமக்கு தெரிவதெல்லாம் இசையமைப்பாளர் -பாடலாசிரியர் - பாடகர்கள் - ஆகியோர்கள் மட்டுமே. ஆனால் இதற்கு பின்னால் பல இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இருக்கிறது.
இந்த படத்தின் இடம்பெற்ற பாடல்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறோம். இது ஒரு முதல் முயற்சி. இதனால்தான் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ராமானுஜம் அவர் தன்னுடைய பெயரை முன்னிறுத்தவில்லை. அவருடைய இசை நிறுவனத்தின் பெயரை வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தில் சிங்கிள் ஷாட்டில் நடிகர் சமுத்திரக்கனி நடனமாடியிருக்கிறார். இதனை சாத்தியப்படுத்திய நடன இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தை பார்ப்பவர்கள் ஏதேனும் கடன் நெருக்கடியில் சிக்கி இருந்தால் அவர்கள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்றார்.
நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது இறைவனின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். என்னுடைய நண்பர் ஸ்ரீராம் மூலமாக இப்படத்தின் திரைக்கதை எனக்கு வந்தது. கதையைப் படிக்கும் போதே அந்த இயக்குநரின் மனநிலை என்ன என்று தெரிந்துவிடும். அந்த மனசு தான் இயக்குநர் ராம் சக்ரியை என்னிடம் அழைத்து வந்தது. அவரை சந்தித்து இதைத்தானே சொல்ல வருகிறீர்கள் வாருங்கள் சேர்ந்து சொல்வோம் என்று இப்படத்தின் பணியை தொடங்கினோம். அவர் இப்போது என் வாழ்க்கையில் மிக முக்கியமான நண்பராக இருக்கிறார். இவரைப் போன்ற மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது. இவரை எல்லாம் மிகவும் பத்திரமாக பாதுகாத்து வைத்து<
“என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர்கள் மணிகண்டன் மற்றும் பி. அஜித் குமார் இணைந்து உருவாக்கியுள்ள ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடர், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் மார்ச் 27 முதல் வெளியாகிறது. இதனை முன்னிட்டு சென்னை நகரில் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
10 அத்தியாயங்களைக் கொண்ட இந்த வெப் சீரிஸ், வித்தியாசமான கதைக்களத்தால் ஏற்கனவே கவனம் ஈர்த்துள்ளது. கதையின் முதல் அத்தியாயம் நாயகனின் வெட்டப்பட்ட தலையிலிருந்து தொடங்குவது போன்ற புதுமையான முயற்சி இதில் இடம்பெற்றுள்ளது.
இந்த தொடரில் விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், சிங்கம் புலி, வி.ஜே. பார்வதி, ரிஷா ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை மது நீலகண்டன் மற்றும் சண்முகசுந்தரம் மேற்கொண்டுள்ள நிலையில், இசையை ராஜேஷ் முருகேசன் அமைத்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவிற்கான தலைவர் கிருஷ்ணன் குட்டி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இணைய தொடரை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியான 40 நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறேன். அதில் முத்து என்கிற காட்டான் சீரிஸ் சிறப்பானது. இந்த முயற்சி ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் அடுத்த கட்ட நகர்விற்கான முயற்சி என நம்புகிறோம். இதில் விஜய் சேதுபதியின் பங்களிப்பு மிகவும் ஸ்பெஷலானது. கதையின் முதல் அத்தியாயத்தில் ஹீரோவின் தலை மட்டும்தான் இடம்பெறும். இது வித்தியாசமானது.
இந்த குழுவினருடனான பயணம் மிகவும் நீண்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இவர்களுடன் பயணித்திருக்கிறோம். பயணம் முழுவதும் அன்பால் நிறைந்திருந்தது. விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனத்துடன் நாங்கள் முதல்முறையாக இணைந்திருக்கிறோம்.
விஜய் சேதுபதியுடன் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து பணியாற்றிருக்கிறோம். இதற்காக விஜய் சேதுபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இணையத் தொடரை முன்னின்று இயக்கிய இயக்குநர் மணிகண்டனுக்கும் நன்றி. அவர்தான் இந்த இணைய தொடருக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இயக்குநர் அஜித்குமார், கதாசிரியர் ராஜ்குமாருக்குநன்றி. நடித்த நடிகர்கள் நடிகைகள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த இணைய தொடர் நாடு கடந்து அனைத்து ரசிகர்களையும் சென்றடைந்து வெற்றி பெறும் '' என்றார்.
ஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தின் கன்டென்ட் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பிரதீப் பேசுகையில், '' இந்த ப்ராஜெக்டை இயக்குநர் மணிகண்டன் எங்களிடம் முதன் முதலாக சொன்ன போது எங்கள் அனைவருக்கும் பிடித்திருந்தது. அதன் பிறகு விஜய் சேதுபதியை சந்தித்தோம். அப்போது அவர் இந்த கதையை நான் ஆத்மார்த்தமாக செய்கிறேன். எனக்கு இதைப் பற்றி நன்றாகத் தெரியும். இதை குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய இயலாது. இந்தப் ப்ராஜெக்ட் எத்தனை நாட்கள் நடைபெற்றாலும் நான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தார். ஒரு நட்சத்திர நடிகரிடம் இருந்து இப்படி ஒரு வாக்குறுதி கிடைப்பது பெரிய விசயம். அந்த நம்பிக்கை எங்களை ஊக்கப்படுத்தியது. நாங்கள் இதுவரை தயாரித்த தயாரிப்புகளில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட்.
பணிகளை தொடங்கினோம். ஆனால் தடங்கல் வேறு வடிவத்தில் வந்தது. இதன் படப்பிடிப்பு 20 நாட்கள் வரை நடந்த பிறகு பட்ஜெட் காரணமாக தயாரிப்பாளர்கள் பலரும் பின் வாங்கினர். இதனால் இந்த ப்ராஜெக்ட் நின்று விடுமோ..! என்ற நிலை ஏற்பட்டபோது.. நான் விஜய் சேதுபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த ப்ராஜெக்ட்டை நீங்கள் தயாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டேன். சிறிது நேரம் யோசித்து விட்டு பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாறினார்.
இதை நான் ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நாங்கள் கர்ப்பரேட் உலகத்தில் உள்ளவர்கள். அங்கு கோடு போட்ட இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டால் அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. இந்த சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு இறுதி வரை உறுதுணையாக நின்றார் விஜய் சேதுபதி. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றியை சொல்கிறேன்.
தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வெளியான இணைய தொடர் இதுதான் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதை தொடங்கும் போது பார்வையாளராக பார்ப்பது கதையின் நாயகனுடைய வெட்டப்பட்ட தலை மட்டும்தான். இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் எந்த துறையிலும் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் இது போன்றதொரு கதைக்கு ஆம் என்று சொல்லவே மாட்டார்கள். அதை சொல்லும் தைரியம் விஜய் சேதுபதிக்கு மட்டும்தான் இருக்கிறது. அதுதான் இந்த இணைய தொடரின் பிரம்மாண்டம். அந்த வெட்டுப்பட்ட தலையை பார்த்த பிறகு இந்த கதையை யாராலும் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது.
அத்துடன் இந்த இணையத் தொடரில் தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் மும்பையில் இருந்தும் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். அதனால் இது பான் இந்திய அளவிலான ப்ராஜெக்ட் தான் '' என்றார்.
இயக்குநர் - படத்தொகுப்பாளர் பி. அஜித் குமார் பேசுகையில், '' விஜய் சேதுபதி- இயக்குநர் மணிகண்டன் -ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு முதலில் நன்றி. நான் முதலில் பட தொகுப்பாளராகத்தான் பணியாற்றினேன். முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு.. இயக்குநருடனான கதை விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. பிரதீப் குறிப்பிட்டதை போல் இதற்கு தடங்கல் ஏற்பட்ட போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உறுதுணையாக ஆதரவளித்தார்கள். ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கியது. அதிலும் குறிப்பாக படைப்பு தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக விஜய் சேதுபதி தயாரிப்பு நிறுவனம் முழுமையான பங்களிப்பை வழங்கியது.
இணைந்து பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொரு வரும் திறமைசாலிகள். ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்தனர். இதில் இடம்பெறும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் கூட தங்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கினர்.
இந்த இணைய தொடருக்கான மணிகண்டனின் ஐடியா மிகவும் அருமையானதாக இருந்தது. இதனை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி இன்று அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலான படைப்பாக வழங்கி இருக்கிறோம். இதற்காக உழைத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இணையத் தொடர் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.
நடிகர் மிலிந்த் சோமன் பேசுகையில், '' இந்த மேடையில் நிற்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் தயாராகும் இணைய தொடரில்,இதில் தான் முதன் முதலாக நடித்திருக்கிறேன். இதற்காக விஜய் சேதுபதி மணிகண்டன் ஜியோ ஹாட் ஸ்டார் அடங்கிய இந்த குழுவினருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் குறிப்பாக இந்த கதையின் தொடக்கம் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரின் வெட்டப்பட்ட தலையில் இருந்து தொடங்குகிறது. இதுவே எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏன்? என்ற கேள்வியை இயக்குநரிடம் கேட்டபோது , அவர் அதற்கான விளக்கத்தை முழுமையாகவும், நேர்த்தியாகவும் அளித்தார். என் மீது நம்பிக்கை வைத்து அந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என் கதாபாத்திரம் மட்டுமல்ல இந்த தொடரில் பணியாற்றிய அனைவரும் ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றினார்கள். அதுவும் என்னை கவர்ந்தது. இதற்காகவும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரம் பேசுகையில், '' விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த' 96 'படத்தில் பணியாற்றினேன். இந்த ரெண்டு படமும் ஹிட். தற்போது மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறோம். இதுவும் வெற்றி பெறும்.
இதுபோன்ற திரைக்கதைகளை மணிகண்டனால் தான் கையாள முடியும். காக்கா முட்டை படத்திற்கு முன் வின்ட் ( Wind) என்றொரு குறும்படத்தை அவர் இயக்கி இருந்தார். அதில் இரண்டே கதாபாத்திரங்கள் தான். ஒன்று சடலம் . மற்றொன்று விஜய் சேதுபதி. அது ஒரு குறும்படம் போல் இருக்காது. திரைப்படம் போல் இருக்கும். அதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
'கடைசி விவசாயி' படத்தை பார்த்துவிட்டு விஜய்யிடம் பேசினேன். ஒவ்வொரு பிரேமையும் உங்கள் இருவரது உழைப்பையும் பார்த்து ரசித்தேன் என்றேன். இந்த இணையத் தொடரில் விஜய் சேதுபதி ஆக்சன் திரில்லர் ஜானரில் நடித்திருக்கிறார். இதில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் இருக்கிறது. அது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்'' என்றார்.
ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன் பேசுகையில், '' திறமையான நட்சத்திரங்களுடனும் அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய இந்த படைப்பில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததை பெருமிதமாக நினைக்கிறேன்'' என்றார்.
இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், '' இந்த குழுவினருடன் இணைந்து பயணித்த அனுபவம் மகிழ்ச்சியானதாக இருந்தது. மணிகண்டன் கதையை சொன்ன தருணத்திலிருந்து இதில் வேலை செய்தது மறக்க முடியாத அளவிற்கு திரில்லிங்காக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவதும் சந்தோஷமாக இருந்தது. முதலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் குட்டி குட்டியான பாடல்களை இடம்பெற வைக்கலாம் என்றுதான் விவாதித்தோம். ஆனால் திரைக்கதை நிறைவாகும் போது மூன்று பாடல்கள் மட்டுமே இடம்பெற்றது. அதில் ஒரு பாடலுக்கான மெட்டை உருவாக்கியது விஜய் சேதுபதி தான். படப்பிடிப்பு தளத்தில் அவர் அந்த சூழலில் உச்சரித்தது எனக்கு பிடித்திருந்தது. அதையே மெருகேற்றி பாடலாக உருவாக்கினோம்'' என்றார்.
கதாசிரியர் ஆர். ராஜ்குமார் பேசுகையில், '' இதில் இயக்குநர் மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதை உருவாக்கத்தில் பங்கு பெற்றேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. இயக்குநர் மணிகண்டன் சிறந்த நண்பர். காக்கா முட்டை படத்திற்கு முன்பிருந்தே பழக்கம். ஒரு பத்து பதினைந்து ஆண்டு கால நண்பர். அந்த தருணத்தில் இருந்து என்னுடைய திரைக்கதைக்கு அவர் உதவி செய்வார். அவருடைய திரைக்கதைக்கு நான் உதவி செய்வேன்.
இந்த இணைய தொடருக்காக மணிகண்டனின் ஐடியா ஸ்பெஷல் ஆக இருந்தது. இது மணிகண்டனின் அப்பாவின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவம். அதை விவாதித்து விரிவு படுத்தலாம் என பேசத் தொடங்கினோம். மாதக்கணக்கில் விவாதித்தோம். தலை கிடைத்து விட்டது முண்டம் எங்கே? அவன் நல்லவனா? கெட்டவனா? கொலைகாரனா ?கொள்ளைக்காரனா? என விசாரிப்பது போல் ஏராளமான கிளை கதைகளை உருவாக்கி, சுவாரசியமான புதிய எதிர்பாராத திருப்பங்களுடன் இதனை உருவாக்கினோம். இது ஒரு வகையான புது முயற்சி. இதற்கு வாய்ப்பளித்த மணிகண்டனுக்கு நன்றி.
நாங்கள் இருவரும் பேசிய விசயங்களை வைத்து இன்னும் இரண்டு இணைய தொடர்களை உருவாக்கலாம். அந்த அளவிற்கு கதாபாத்திரங்களை பற்றி பேசி இருக்கிறோம்.
இந்த கதையை விஜய் சேதுபதி தேர்வு செய்தது மிகப்பெரிய விசயம். எந்த ஒரு மாஸ் ஹீரோவும் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி இந்த ஸ்கிரிப்டை பெரிதாக நம்பினார். இதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இணைய தொடர் ஒரு புது முயற்சி புது முயற்சியை எப்போதும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்'' என்றார்.
நடிகை அபி நட்சத்திரா பேசுகையில், '' இந்த படைப்பில் ஒரு பகுதியாக இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் குழு மிகப் பெரியது. இந்த படைப்பும் பிரம்மாண்டமானது. நான் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிட்டு எனும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கேரக்டர் அனைவருக்கும் பிடிக்கும். விஜய் சேதுபதி சார் எனக்கு நிறைய முறை மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார். இந்த இணைய தொடர் ரசிகர்களின் ஆதரவுடன் பெரிய அளவில் வெற்றி பெறும்'' என்றார்.
நடிகை வி ஜே பார்வதி பேசுகையில், '' இந்த நாளிற்காக நிறைய ஆண்டுகள் காத்திருந்தேன். இயக்குநர் மணிகண்டனின் குழுவில் இருந்து பேசிய போது நான் முதலில் நம்பவில்லை. அதன் பிறகு மணிகண்டனுடன் இணைய வழியிலான சந்திப்பிற்குப் பிறகு நம்பிக்கை வந்தது. ஏனெனில் அவருடைய படைப்புகளை பார்த்து தான் நான் வளர்ந்திருக்கிறேன். உசிலம்பட்டிக்கு வர சொன்னார்கள், நான் நவீன உடையில் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகு காஸ்டியூம் டிசைனர் எனக்கு மதுரை பெண் கதாபாத்திரத்திற்கான ஆடையை வழங்கினார். எந்தவித மேக்கப்பும் இல்லாமல் அந்த டிரஸ்ஸை அணிந்து போட்டோ சூட்டுக்காக நின்ற போதுதான் நான் லலிதா எனும் கதாபாத்திரமாகவே தெரிந்தேன். அதை நான் என்னுடைய பாக்கியமாகவும், எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாகவும் கருதுகிறேன். விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணி என்றால் எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இதில் லலிதாவாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நிச்சயம் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும்'' என்றார்.
நடிகை ரிஷா ஜேக்கப் பேசுகையில், '' கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. நிறைய மேடைகளில் பேசி இருக்கிறேன். ஆனால் இந்த மேடை எனக்கு மிகவும் புதிதாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். கலவையான உணர்விலும் இருக்கிறேன். இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக விஜய் சேதுபதி சார்க்கும் இந்த இணைய தொடரின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதன் மூலம் நான் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். எதை... எதுவரை செய்யலாம்... எதை செய்யக்கூடாது... என்பதை எல்லாம் இதில் கற்றுக் கொண்டேன். என்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி'' என்றார்.
நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில், '' முத்து என்கிற காட்டான் இந்த வெப்சீரிசை தொடங்கியதிலிருந்து இந்த தருணம் வரை இதற்கு பின்னால் நடைபெற்ற விசயங்களை வைத்து இரண்டு மூன்று தொடர்களை உருவாக்கலாம். அனைத்தையும் கடந்து இன்று இந்த இணைய தொடர் வெளியாவதற்க்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனத்திற்கு பெரிய நன்றி.
நான் அவர்களுக்கு ஆதரவளித்ததாக அவர்கள் சொல்லலாம். ஆனால் அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். நான் இங்கு வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். தமிழில் உருவான மி
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!
தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹிட் பாடல்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தனது தனித்துவமான இசை மூலம் இசையுலகில் தனி முத்திரை பதித்து வருகிறார். அவரது இசை, படங்களுக்கு கூடுதல் வலிமையைக் கொடுப்பதுடன், ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுக்கும் முக்கிய அம்சமாகவும் இருந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘தாய் கிழவி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது பல புதிய படங்களில் இசையமைத்து வரும் நிவாஸ் கே. பிரசன்னா, தற்போது சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘புரொடக்ஷன் நம்பர் 4’ படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையில் உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் ஹரிஹர சுதன் அழகிரி இயக்குகிறார். ஜென் Z தலைமுறையின் கவனத்தை பெற்ற நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் அறிமுகமான சான்வே மேக்னா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திட்டமிட்ட காலக்கட்டத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை தேனி ஈஸ்வர் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை சி. எஸ். பாலச்சந்தர் கவனிக்க, ஆடை அலங்கார வடிவமைப்பை கிருத்திகா சேகர் மேற்கொள்கிறார்.
முன்னதாக ‘மாவீரன்’, ‘3BHK’ போன்ற வெற்றிப் படங்கள் மூலம் பான்-இந்திய அளவில் கவனம் பெற்ற சாந்தி டாக்கீஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மூலம் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா













