சற்று முன்
சினிமா செய்திகள்
Fox Star Studios to release Rajathandhiram
Updated on : 15 February 2015
Having tasted resounding success with remarkable films like Raja Rani,
Cuckoo and Mundasupatti among a host of others in the Tamil industry, Fox
Star Studios will now be distributing the upcoming Tamil language feature
film, RAJATHANDHIRAM; a thrilling heist film.
The con-heist film, Rajathandhiram grabbed the attention of viewers
everywhere when it unveiled its first-look teasers and trailer. The 6 character-teasers, unravelling the story of each of its actors, was a cleverly conceived and
executed campaign. The first-of-its kind to be done for Tamil films, it garnered
huge responses from Twitter, YouTube users and on other social media.
The film Rajathandhiram has some interesting firsts, starting with its makers.
Producers White Bucket Productions and Sunland Cinemas make their
respective production debuts with this con-heist film.
Renowned director, Gautham Vasudev Menon is also associated with the film
as its Creative Producer and has ensured that the film is a quality offering that
strikes a chord with audiences everywhere.
Rajathandhiram is a city-based ‘con’ caper, laced with generous amounts of
revenge, wit, humour and romance. Narrated through a new-age screenplay,
the film presents a series of mind games transcending and testing friendships,
society and love. Directed by A G Amid, the film stars Veera, Regina Cassandra,
Ajai Prasath and debutante Darbuka Siva.
G V Prakash Kumar, the music director of the film has composed a beautiful
love song for the film while Sandeep Chowta has scored the film’s background
music and S R Kathir is the cinematographer of the film.
“We are proud to be associated with Fox Star Studios for our debut production,
Rajathandhiram. Thanks to our association with the legendary studio, this film
will have an extended reach, more viewers from a lot more places; giving us
greater exposure and in all, making the film ‘bigger’ in every way.” –Senthil
Veeraasamy, Producer, White Bucket Productions
Rajathandhiram is slated for an early March 2015 release.
சமீபத்திய செய்திகள்
சென்னையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ‘EXAM’ வெப் சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா
இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் OTT தளங்களில் ஒன்றான Prime Video India-வில் மே 15 முதல் வெளியாகவுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் இணைய தொடரான ‘EXAM’ வெப் தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து தயாரித்துள்ள இந்த தொடரை, தேசிய விருது பெற்ற இயக்குநர் ஏ சற்குணம் இயக்கியுள்ளார்.
ஏழு அத்தியாயங்களாக உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மர்மம், பதட்டம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘EXAM’ தொடர், ரசிகர்களுக்கு வித்தியாசமான OTT அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் - காயத்ரி, இயக்குநர் ஏ. சற்குணம், நடிகைகள் துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு தொடரின் உருவாக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், '' நாங்கள் 'வா குவாட்டர் கட்டிங் 'எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான 'களவாணி' திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார். இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, 'பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்' என எடுத்துச் சொன்னோம்
சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம். ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும். 'எக்ஸாம்' தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம் ... ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.
சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது. கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான். 'வதந்தி' தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.
நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.
நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான் என்று சொன்னார்.
இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும். அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார். அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். '' என்றார்.
இயக்குநர் காயத்ரி பேசுகையில், '' அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்... ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்... சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும். நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்... குறிப்புகள் வழங்கினாலும்... மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.
ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம். திறமையான நடிகர்களாக- கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.
இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.
பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், '' சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.
நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்... அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு... ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.
நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து... பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர். இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்... உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.
அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் ...ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும். இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்'' என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ' இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட். புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.
ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்....ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.
நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள். அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.
இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.
இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி'' என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசுகையில், '' மரமல்லி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி. மரமல்லி கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்) அடித்துக் கொண்டோம்.
இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின் மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது'' என்றார்.
சிவப்பு உடையில் அதிரடி லுக்… கீர்த்தி சுரேஷின் ‘சத்தியவான் சாவித்திரி’ ஃபர்ஸ்ட் லுக் வைரல்!
Zee Studios மற்றும் Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான “சத்தியவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், திரில்லர் மற்றும் கோர்ட் ரூம் டிராமா கலந்த ஜனரஞ்சக படைப்பாக உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், வக்கீல்கள் நிறைந்த நீதிமன்ற சூழலில் சிவப்பு உடையில் தீர்க்கமான பார்வையுடன் திரும்பிப் பார்க்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கதையின் மையக்கருவையும், அவரது கதாப்பாத்திரத்தின் தீவிரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை, மகிழ்ச்சியான சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது. தனது சீனியர் வழக்கறிஞர் ஒரு வழக்கில் தவறான தரப்புக்கு வாதாடுவதை உணரும் அவர், அதை சுட்டிக்காட்ட முயற்சிக்கிறார். ஆனால் அதன்பிறகு வெளிப்படும் உண்மைகள், அவரது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகின்றன. அந்த சிக்கலிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே படத்தின் பரபரப்பான திரைக்கதை.
திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடனும், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை வடிவமைத்துள்ளதாக இயக்குநர் பிரவீன் S விஜய் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் பாலசரவணன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
வித்தியாசமான கோர்ட் ரூம் திரில்லராக உருவாகி வரும் “சத்தியவான் சாவித்திரி”, கீர்த்தி சுரேஷின் மற்றொரு சக்திவாய்ந்த கதாப்பாத்திரமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் பிரசாந்த் பாண்டியராஜ் – ZEE5-ல் மே 22 முதல் ‘வாரண்ட்’!
தமிழ் OTT தளங்களில் தரமான மற்றும் வேரூன்றிய கதைகளை தொடர்ந்து வழங்கி வரும் ZEE5 Tamil, தனது புதிய ஒரிஜினல் தொடரான ‘வாரண்ட்’ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள இந்த தொடர், அதிகாரம், சட்டம் மற்றும் மனித மனத்தின் இருண்ட பரிமாணங்களை ஆராயும் விறுவிறுப்பான காவல் துறை நாடகமாக உருவாகியுள்ளது.
இந்த தொடரின் முக்கிய அம்சமாக, ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், இத்தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகராக அவரது முதல் முயற்சி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த தொடரை புதுமுக இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். இசையை சாம் C.S. அமைத்துள்ள நிலையில், தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வாளராகவும் பிரசாந்த் பாண்டியராஜ் பணியாற்றியுள்ளார்.
மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், அருள் தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு கதைக்கு மேலும் நம்பகத்தன்மையையும் உணர்வுப்பூர்வமான அடுக்குகளையும் சேர்க்கும் என கூறப்படுகிறது.
‘வாரண்ட்’ தொடர், சாதாரணமாக தோன்றும் காவல் துறை வழக்குகள் எவ்வாறு ஆபத்தான சூழ்நிலைகளாக மாறுகின்றன என்பதை மையமாகக் கொண்டு நகர்கிறது. இதில், “கோட்டை கருப்புசாமி” என்ற இரண்டாம் நிலை காவலரின் வாழ்க்கை மற்றும் மனநிலையே கதையின் மையமாக அமைகிறது. அவரது பயம், அவமானம் மற்றும் அதிகாரத்தை கையாளும் விதம், சட்டமும் நீதியும் இடையே உள்ள மங்கலான கோட்டை கேள்விக்குறியாக்குகிறது.
இந்த தொடரில் நடித்த அனுபவம் குறித்து பிரசாந்த் பாண்டியராஜ் கூறுகையில், “கோட்டை கருப்புசாமி என்பது வழக்கமான ஹீரோ அல்ல. அவர் மிகவும் மனிதத் தன்மை கொண்டவர். அந்த உண்மைத்தன்மை என்னை இந்த கதாப்பாத்திரத்தை தேர்வு செய்ய வைத்தது. ஒரு படைப்பாளியாக நான் எப்போதும் வெளிப்படையான காட்சிகளை விட உணர்வுகளின் நேர்மையை விரும்புவேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் கேமராவின் பின்னால் ஆராயும் உணர்வுகளை நேரடியாக அனுபவிக்க வைத்தது,” என்றார்.
சமரசமற்ற கதை சொல்லல், உணர்வுப்பூர்வமான கதாப்பாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான காவல் துறை பின்னணியுடன் உருவாகியுள்ள ‘வாரண்ட்’, ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான OTT அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 22 முதல் ZEE5 Tamil தளத்தில் ‘வாரண்ட்’ தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாண்டிராஜின் புதிய திரில்லர் காமெடி “பரிமளா & கோ” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகில் குடும்பங்களோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
“தலைவன் தலைவி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதிய களத்தில் இப்படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். குடும்ப உணர்வுகளையும், நகைச்சுவையையும் தனக்கே உரிய பாணியில் கையாளும் அவர், இந்த முறை திரில்லர் மற்றும் காமெடியை இணைத்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த குடும்ப உறுப்பினர்களின் தனித்துவமான குணாதிசயங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் அபூர்வமான சம்பவங்களும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன. சென்னை முதல் கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த திரைக்கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களின் வித்தியாசமான தோற்றங்களும், அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வடிவமைப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
படத்தில் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இளம் நடிகர் சந்தோஷ் சோபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதுடன், அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மற்றொரு காதல் ஜோடியாக சாண்டி மற்றும் அனந்திகா சனில்குமார் இணைந்துள்ளனர்.
மேலும், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த யோகிபாபு, “தலைவன் தலைவி” பட வெற்றிக்குப் பிறகு மீண்டும் பாண்டிராஜுடன் இணைந்து இப்படத்தில் முழுநீள முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், முற்றிலும் மாறுபட்ட காவல் அதிகாரி வேடத்தில் தோன்றுகிறார். அதேபோல் சிங்கம்புலி மற்றும் பக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
“பரிமளா & கோ” திரைப்படத்தை Lyca Productions நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரிக்கின்றன. ஒளிப்பதிவை ஜார்ஜ் C. வில்லியம்ஸ் மேற்கொண்டுள்ள நிலையில், இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகிறார்.
திரில்லர் மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள “பரிமளா & கோ”, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!
இசை உலகில் தனது தனித்துவமான குரலும் பாணியும் மூலம் ரசிகர்களை கவர்ந்துவரும் Dr சாருலதா மணி, தனது புதிய சுயாதீன பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் இசை ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார்.
A. R. Rahman இசையில் உருவான "Thug Life" படத்தில் இடம்பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” பாடலின் மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்த புதிய பாடல் வெளியாகியுள்ளது.
Divo Warner South வெளியீட்டில் வந்துள்ள “தென்றலில்” பாடலை, “மக்கள் செல்வன்” என அழைக்கப்படும் விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். திறமையான கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர், இந்தப் பாடலின் வெளியீட்டில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களிலும் Dr சாருலதா மணி தன்னுடைய முத்திரையை பதித்துள்ள ஒரு முக்கியமான படைப்பாக உருவாகியுள்ளது. பாரம்பரிய இசை மற்றும் நவீன மெலடிகளை இணைக்கும் அவரது திறமை, “தென்றலில்” பாடலில் தெளிவாக பிரதிபலிக்கிறது.
“என் உச்சி மண்டைல”, “Chillax”, “தீயே தீயே”, “கண்ணுக்குள் பொத்திவெப்பேன்”, “Sada Nannu”, “அஞ்சு வண்ணப் பூவே” போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ள அவர், இசை ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் Griffith University-யில் இசையில் PhD மற்றும் Postdoctoral Fellowship முடித்துள்ளதும் அவரது சிறப்பாகும்.
“தென்றலில்” பாடல் தற்போது அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது. இதன் இசை வீடியோவும் YouTube-ல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
புது முகங்கள் மாளவிகா மற்றும் தவன் நடித்துள்ள இந்த இசை வீடியோவை தரேன் கார்த்திக் இயக்கியுள்ளார்.
மென்மையான மெலடியுடன், மனதை வருடும் உணர்வுகளைக் கொண்டு உருவாகியுள்ள “தென்றலில்”, இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Toxic: A Fairy Tale for Grownups’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2026 ஜூன் 4 அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக CinemaCon நிகழ்வில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு கூறப்படுகிறது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த பாராட்டுகள், இப்படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
படம் தற்போது முழுமையாக தயாராகி இருக்கும் நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”
இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “Toxic” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கரா’ திரைப்படத்தின் டிக்கெட் ப்ரீ-புக்கிங் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் படத்திற்கான முன்பதிவு, ரசிகர்கள் மத்தியில் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.
ஆன்லைன் தளங்களில், குறிப்பாக BookMyShow போன்ற சேவைகள் மூலம் டிக்கெட்டுகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் திரையரங்கு ஷோக்கள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த திரையரங்குகளில் முன்பதிவு செய்ய முடிகிறது.
மேலும், சமூக வலைதளங்களிலும் “Bookings Open Now” என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி, ரசிகர்கள் உற்சாகமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இந்த படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளதால், வெளியீட்டிற்கு முன்பே நல்ல ஹைப் உருவாகியுள்ளது. பல இடங்களில் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக நிரம்பும் சூழல் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கரா’, ஓப்பனிங் நாளிலேயே ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் தொடங்கும் வாய்ப்பு அதிகம் என திரையுலக வட்டாரங்கள் கணிக்கின்றன. ரசிகர்கள் இப்போது First Day First Show அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு படத்தின் சிறப்புகளை பகிர்ந்தனர். ‘கருப்பு’ படத்தில் சூர்யாவுடன் திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், '' மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த 'கருப்பு' படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.
நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.
இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் 'கருப்பு' வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.... அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும். இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்... நடிகராகவும்... வர்ணனையாளராகவும்... இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.
இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்... இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.
படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது '' என்றார்.
இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், '' இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம். நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.
திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.
ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும் ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.
'வலிமை' படத்தின் அப்டேட்டிற்கு பிறகு 'கருப்பு' படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். என் மனைவி கூட ஆச்சரியப்பட்டார். சூர்யா சார் !உன் இயக்கத்தில் படத்தில் நடிக்கிறார்களா? என்று கேட்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் 'கருப்பு' படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.
படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது. '' என்றார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், ': கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட்( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பி அண்ணாவை சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் 'சூர்யா 45' படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை'' என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், '' கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள்'' என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், '' 'சூரரைப்போற்று' படத்தில் இடம்பெற்ற 'வெய்யோன் சில்லி' பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'ரெட்ரோ' மற்றும் 'கருப்பு' என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன'' என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், '' கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நான் 10 அடி, 20 அடி உயரமுள்ள அரிவாள்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலுக்காக நாங்கள் 85 அடி உயரமுள்ள ஒரு அருவாளை உருவாக்கினோம். எவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தில் மீண்டும் ஒரு படம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா..? என்று தெரியவில்லை. திரையரங்குகளில் பார்வையாளர்களின் வரவேற்பினை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் '' என்றார்.
விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், '' எல் கே ஜி படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் தொடங்கிய எனது பயணம்.. இப்போது 'கருப்பு 'திரைப்படம் வரை தொடர்கிறது. அவர் ஒரு அசுரத்தனமான உழைப்பாளி- அதாவது மிக கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு நபர் -அந்த உழைப்பை 'கருப்பு' படத்திற்காக அவர் பன்மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறார். படத்தின் திரைக்கதைக்காக அவர் பலதரப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி மிக ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
சூர்யா சாருக்கு 'கருப்பு: திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பை பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நான் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தாக அமையப்போகிறது.
இந்த ஆண்டில் சூர்யா சாருக்கு மூன்று படங்கள் வெளியாக உள்ளன. அந்த மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த ஆண்டை நாம் 'சூர்யாவின் ஆண்டு 'என்று கொண்டாடுவோம் ''என்றார்.
திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், '' சூர்யா சாருக்கு 'கருப்பு' திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும் .நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு 'செம விருந்தாக ' அமையப்போகிறது'' என்றார்.
மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!
சில பாடல்கள் கேட்கும் போதே மனதை வருடி, ஒரு இனிய உணர்வை பரப்பும். அப்படியான ஒரு மெலோடியான பாடலாக ‘வெள்ளிச்சுடரே’ தற்போது இசை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடித்துள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்த பாடல், வெளியான தருணத்திலிருந்தே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷி எழுதிய வரிகளுடன் உருவான இந்த பாடலை கபில் கபிலன் தனது இனிமையான குரலில் பாடியுள்ளார். ஒவ்வொரு வரியும் உணர்ச்சியால் நிரம்பி, கேட்பவரை பாடலின் உலகிற்குள் இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
பாடலின் ஆரம்பத்தில் மிதமான கிதார் இசை மனதை கவர, பின்னர் மெதுவாக அதிகரிக்கும் இசை ஓட்டம் பாடலின் உச்ச கட்ட உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறது. அதனுடன் சேரும் நாட்டுப்புற இசைக் கூறுகள், பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ், தனது தனித்துவமான இசை நுணுக்கத்தால் பாடல்களை நினைவில் நிற்கும்படி உருவாக்கும் திறமை கொண்டவர். ‘கண்கள் ஏதோ’, ‘பூவே’ போன்ற ஹிட் பாடல்களைத் தொடர்ந்து ‘வெள்ளிச்சுடரே’யும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இணைந்து, மீண்டும் மீண்டும் கேட்கப்படும் பாடலாக மாறியுள்ளது.
‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணி, மூன்றாவது முறையாக ‘இரண்டு வானம்’ மூலம் இணைந்துள்ளது. இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படம், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாகி வருகிறது. ‘வெள்ளிச்சுடரே’ பாடல் வெளியீடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளாவிய வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’
சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி உலகளாவிய அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படம், தீவிரமான சமூக உணர்வுகளுடன் உருவாகியுள்ளது.
இப்படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளதுடன், சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். ‘The India Story’ அல்லது ‘The India Story: Slow Poison’ என அறியப்படும் இந்த படம், விவசாயத்தில் பூச்சிக்கொல்லி இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனால் உருவாகும் மனித உடல்நல பாதிப்புகளை ஆழமாக எடுத்துரைக்கிறது.
ஒரு குடும்பத்தின் கதையைத் தாண்டி, பொதுமக்களின் வாழ்வையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் பெரிய சமூக பிரச்சினையை படம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் மற்றும் பொறுப்புணர்வு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறது.
இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, சுவாரஸ்யமான கதையம்சத்தையும் சமூகப் பொறுப்பையும் சமநிலைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அலட்சியத்தின் காரணமாக ஏற்படும், பொதுவாக கவனிக்கப்படாமல் போகும் விளைவுகளை இந்தப் படம் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதோடு, அதிகாரம் வாய்ந்த நிறுவனங்களின் பொறுப்புணர்வையும் கேள்விக்குறியாக்குகிறது.
இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,
“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும் ஷ்ரேயாஸ்இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்தஷ்ரேயாஸ் தல்படே முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில், ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை நடிப்புகளால் பாராட்டப்பட்ட ஷ்ரேயாஸ் தல்படே இணையும் இந்த படம், உணர்ச்சி மற்றும் தீவிரத்தைக் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் படத்திற்கு வலு சேர்க்கிறது. இணை தயாரிப்பாளர்களாக சுமித் பாகடே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி பணியாற்றியுள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை உலகளவில் வெளியிடுகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், சமூக பொறுப்புணர்வை தூண்டும் முக்கியமான படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா














