சற்று முன்

'டெஸ்ட்' படத்தில் குமுதாவாக அறிமுகமாகும் நடிகை நயன்தாரா!   |    நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸ் டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    கிரிக்கெட் வீரர் ஆர் அஸ்வின் அறிமுகப்படுத்திய நடிகர் சித்தார்த்தின் அர்ஜுன் கதாபாத்திரம்!   |    அசத்தலான காமெடி சீரிஸாக 'செருப்புகள் ஜாக்கிரதை' மார்ச் 28 முதல் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களை ஓடிடியில் டென்ட் கொட்டா விரைவில் வெளியிட உள்ளது   |    சினிமா எடுப்பதும், சினிமாவில் நடிப்பதும் எளிது, வெளியிடுவது தான் கஷ்டம் - நடிகர் ராதாரவி   |    நாயகியாக 'பிக் பாஸ்' புகழ் ஆயிஷா ஜீனத் நடிக்கும் புதிய படம்!   |    சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு!   |    இலங்கை இந்திய நாட்டு கலைஞர்களின் கூட்டுமுயற்சியினால் உருவாகும் 'அந்தோனி'   |    54 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு பெற்று கோடை விடுமுறைக்கு திரைக்கு வர தயாராகவுள்ள ‘அக்யூஸ்ட்’   |    15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள 'விண்ணைத்தாண்டி வருவாயா'   |    எப்போதும் கனவு இருக்க வேண்டும். கனவு மெய்ப்பட கடுமையாக உழைக்க வேண்டும் - தயாரிப்பாளர் கவிதா   |    அடல்ட் என்ற விஷயத்திற்கு புது கோணம் கொடுத்திருக்கிறோம் - கார்த்திகேயன் சந்தானம்   |    பிளாக்பஸ்டர் படமான “எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி” மார்ச் 14 ரி-ரிலீஸ்!   |    நடிகை சோனா கண்ணீர்; 'ஸ்மோக்’ வெப்சீரிஸ் எடுப்பதற்குள் எதற்காக இத்தனை இடைஞ்சல்கள்?'   |    'காளிதாஸ் 2 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி!   |    சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' பிரம்மாண்டமாகத் துவங்கியது!   |    அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் & நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்ட 'பைசன்' ஃபர்ஸ்ட் லுக்!   |    திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற குடும்தபஸ்தன் படம், டிஜிட்டலில் ZEE5ல் ஸ்ட்ரீமாகிறது!   |    திரை பிரபலங்கள் தொடங்கி வைத்த இயக்குநர் விஜய்யின் புதிய போஸ்ட் புரொடக்‌ஷன் ஸ்டுடியோ!   |   

சினிமா செய்திகள்

இளையதளபதி விஜய்யின் மகன் சஞ்சயின் விருப்பம்
Updated on : 01 July 2015

இளையதளபதி விஜய் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் 'புலி'. தற்போது இதன்  படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் விஜய் இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.



 



விஜய் முதலில் சிம்புதேவனிடம் இந்த படத்தின் கதையை கேட்டபோது, அவ்வளவாக இந்த படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை  என்று கூறப்படுகிறது. இது வரலாற்று சம்பந்தப்பட்ட படம் என்பதால் இதில் நடித்து ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்று இருந்தாராம் விஜய். சிம்புதேவனின் கூறிய கதையை விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவரது 15 வயது மகன் சஞ்சய், இந்த படத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்கவேண்டும் என்றும் இந்த கதை குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும், ஆலோசனை கூற, மகனின் ஆலோசனையை மதித்த விஜய் உடனே ஒப்புக்கொண்ட படம் தான் 'புலி'. 



 



ஆகவே இந்த படம் குறிப்பாக குழந்தைகளை கவரும் படம் என்றும் குழந்தை ரசிகர்களை திரட்டும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா