சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

விஜயகாந்த் கலக்கம், நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதி
Updated on : 11 July 2015

விஜயகாந்தும், இப்ராஹிம் ராவுத்தரும் உயிர் தோழர்கள் என்பது சினிமாவுலகம் மட்டுமின்றி அனைவரும் நன்கு அறிந்த ஒன்று. சிறுவயது முதல் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மதுரையில் இருந்து சென்னை வந்து ஒன்றாக போராடி அதுவும் தனது நண்பர் விஜயகாந்த்தை ஹீரோவாக்கி அழகு பார்த்தவர்  ராவுத்தர். இப்ராகிம் ராவுத்தர் படம் என்றாலே விஜயகாந்த்தான் ஹீரோ என்று எதிர்பார்க்கும் அளவுக்கு இருவரும் இணைபிரியாத நண்பர்கள்.



 





பெரிய ஹீரோவாக வளர்ந்த பின்பும் கூட அவருக்கு நிழலாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர்தான். விஜயகாந்தின் திருமணம் வரைக்கும் ஒன்றாகவே இருந்த இருவரும் அதற்கப்புறம் அந்த நட்பை தொடர முடியாமல் போனதற்கு காரணம் அரசியல்.



 





தற்போது ராவுத்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . நண்பர் மருத்துவமனையில் இருக்கும் செய்தி கேட்ட விஜயகாந்த் மருத்துவமனைக்கு விரைந்து  சென்றிருக்கிறார். அங்கு அவர் சுயநினைவில்லாமல் இருப்பது கண்டு அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்திருக்கிறார்.  



 





அங்கு அவரது நிலைமை கண்டு மனம் வருந்தி விஜயகாந்த் அவரது நண்பருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் 



 





நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா



 



அன்புடன் உன் நண்பன்

விஜயகாந்த்

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா