சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

போலீஸ் நடிகையின் புகார்
Updated on : 25 July 2015

பாகுபலி'யின் அபார வசூலுக்கு இடையே வெற்றிகரமாக ஓடி அமோக வசூலை அள்ளி குவித்த படம் பாபநாசம். இந்த படத்தின் வெற்றிக்கு உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் கச்சிதமான திரைக்கதை காரணம் என்றாலும் கமல்ஹாசனுக்கு அடுத்து நடிப்பில் பேசப்பட்ட கதாபாத்திரம்  போலீஸ் வேடத்தில் நடித்த ஆஷா சரத் என்பது அனைவருக்கும் தெரியும். இவருடைய நடிப்பை பார்த்து அசந்துபோன கமல்ஹாசன், தன்னுடைய அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தில் அவருக்கு முக்கிய வேடம் ஒன்றில் ஒப்பந்தம் செய்துள்ளார்.





இந்நிலையில் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆஷா சரத்தின் ஆபாச புகைப்படங்கள் பிரபல சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷா சரத் கொச்சி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.



 



இதுகுறித்து ஆஷா சரத் நிருபர்களிடம் கூறியதாவது, "மார்பிங் செய்யப்பட்ட என்னுடைய ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக கொச்சி போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் செய்திருக்கிறேன்.  அவர்களும் உடனே புகாரை பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா