சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

போலீஸ் நடிகையின் புகார்
Updated on : 25 July 2015

பாகுபலி'யின் அபார வசூலுக்கு இடையே வெற்றிகரமாக ஓடி அமோக வசூலை அள்ளி குவித்த படம் பாபநாசம். இந்த படத்தின் வெற்றிக்கு உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் கச்சிதமான திரைக்கதை காரணம் என்றாலும் கமல்ஹாசனுக்கு அடுத்து நடிப்பில் பேசப்பட்ட கதாபாத்திரம்  போலீஸ் வேடத்தில் நடித்த ஆஷா சரத் என்பது அனைவருக்கும் தெரியும். இவருடைய நடிப்பை பார்த்து அசந்துபோன கமல்ஹாசன், தன்னுடைய அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தில் அவருக்கு முக்கிய வேடம் ஒன்றில் ஒப்பந்தம் செய்துள்ளார்.





இந்நிலையில் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆஷா சரத்தின் ஆபாச புகைப்படங்கள் பிரபல சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ஆஷா சரத் கொச்சி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.



 



இதுகுறித்து ஆஷா சரத் நிருபர்களிடம் கூறியதாவது, "மார்பிங் செய்யப்பட்ட என்னுடைய ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக கொச்சி போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் செய்திருக்கிறேன்.  அவர்களும் உடனே புகாரை பதிவு செய்து, சைபர் கிரைம் போலீஸ் மூலமாக விசாரித்து வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு  சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று உறுதியுடன் நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா