சற்று முன்

உலகளவில் எட்டு மொழிகளில் வெளியாகும் நேச்சுரல் ஸ்டார் நானியின் 'தி பாரடைஸ்'   |    சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 'கார்மேனி செல்வம்'   |    கறுமை அழகை நேசிக்கும் ஆண்களின் பார்வையைக் காட்சிப்படுத்தும் ‘ஈவா’ பாடல்!   |    சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது - தேஜா சஜ்ஜா   |    சிவராஜ்குமார் நடிபில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!   |    இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வரும் துல்கர் சல்மானின் 'லோகா'   |    சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்க வைக்கலாம்... - இயக்குநர் கார்த்திகேயன் மணி   |    முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள்! - இயக்குநர் ஆர். கே. செல்வமணி   |    1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கிய பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு!   |    விஜய் சேதுபதி வெளியிட்ட அசத்தலான கமர்ஷியல் திரில்லர் படமான 'ரைட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!   |    ஆக்ரோஷமான பாடல்காட்சியோடு தொடங்கிய ‘மலையப்பன்’ படப்பிடிப்பு   |    நான் இயக்குனரானால் யோகி வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் ரவி மோகன்   |    இந்தக் கதைக்கும் பாக்யராஜ் சாரின் கதைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை...   |    எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!   |    மகளிர் நலனுக்காக மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சி பாடல்!   |    தமிழக முதல்வரை சந்தித்த சின்னத்திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!   |    ‘அக்யூஸ்ட்’ 25வது நாள் வெற்றி விழா சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடப்பட்டது!   |    25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் காமெடி கூட்டணி!   |    45 நாள் ஆக்ஷன் மராத்தான் - இந்திய ஸ்டண்ட் குழுவுடன் இணைகிறார் 'ஜான் விக்’ புகழ் JJ Perry!   |    50,000-க்கும் அதிகமான ரசிகர்கள் பங்கேற்று புதிய வரலாறு படைத்த ராக்ஸ்டார் அனிருத்தின் ‘ஹுக்கும்’   |   

சினிமா செய்திகள்

குத்து சிம்புவுக்கா ரசிகர்களுக்கா!
Updated on : 03 September 2015

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்துக்கு குறளரசன் இசையமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.



 



இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. வாலு படம் பிரச்சினைகள் முடிந்து படம் திரைக்கு வந்த பின்னர்  ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் படமாக்கப்பட்டு படத்தை வெளியிட திட்டமிட்டபடி நயன்தாராவிடம் தேதிகள் கேட்டு தரவில்லை என்பதால் டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.



 



இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, நயன்தாரா மீது புகார் எதுவும் நாங்கள் புகார் நாங்கள் தரவில்லை.  ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கபடவேண்டி இருந்ததால் நயன்தாராவின் கால்ஷீட் கேட்க யாரை அணுகுவது என்று தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் “நீங்கள் நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். அவருக்கு கொடுக்கவேண்டிய மீத சம்பளத்தை உங்களிடமே கொடுத்துவிடுகிறோம் நீங்களே நயன்தாரவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினோம் அதற்க்கு அவர்கள் இதை நீங்கள் ஒரு  கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள், எழுதி கொடுத்தோம். இது தான் நடந்தது.



 



நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த பாடல்கள் இல்லாமல் படம் வெளியாகும். ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் பாடல்களே தீர்மானிக்கிறது. மக்களுக்கு படத்தை மிக விரைவில் கொண்டு சேர்ப்பதே படத்தின் பாடல்கள் தான் எனவும் சிம்பு கூறினார்.



 



ஆனால் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இந்த பாடல்கள் படத்திற்கு தேவையற்றவை சிம்புவும் TRரும் தங்கள் படம் என்றாலே குத்து பாட்டு இருந்தா தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் ரசிக்கவா அல்லது ரசிகர்கள் ரசிக்கவா என்று தெரியவில்லை. மேலும் நயன்தாராவின் கால்ஷீட் யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லை அதுனாலதான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினோம் என்று சிம்பு கூறுவது மிகவும் கோமாளித்தனமாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா