சற்று முன்

4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |    கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்ட 'சுப்ரமண்யா' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!   |    'யுவர்ஸ் சின்சியர்லி ராம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு   |    கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் 'மார்டின்' பட முதல் சிங்கிள் 'ஜீவன் நீயே'   |    மோக்ஷக்ஞ்யா அறிமுகமாகும் பிரம்மாண்ட திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது   |    நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விளக்கம் அளித்த இயக்குனர்கள்   |    எட்டு எபிசோட்கள் அடங்கிய 'தலைவெட்டியான் பாளையம்' தொடரின் வெளியீட்டை அறிவித்தது பிரைம் வீடியோ!   |   

சினிமா செய்திகள்

குத்து சிம்புவுக்கா ரசிகர்களுக்கா!
Updated on : 03 September 2015

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்துக்கு குறளரசன் இசையமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.



 



இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. வாலு படம் பிரச்சினைகள் முடிந்து படம் திரைக்கு வந்த பின்னர்  ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் படமாக்கப்பட்டு படத்தை வெளியிட திட்டமிட்டபடி நயன்தாராவிடம் தேதிகள் கேட்டு தரவில்லை என்பதால் டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.



 



இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, நயன்தாரா மீது புகார் எதுவும் நாங்கள் புகார் நாங்கள் தரவில்லை.  ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கபடவேண்டி இருந்ததால் நயன்தாராவின் கால்ஷீட் கேட்க யாரை அணுகுவது என்று தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் “நீங்கள் நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். அவருக்கு கொடுக்கவேண்டிய மீத சம்பளத்தை உங்களிடமே கொடுத்துவிடுகிறோம் நீங்களே நயன்தாரவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினோம் அதற்க்கு அவர்கள் இதை நீங்கள் ஒரு  கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள், எழுதி கொடுத்தோம். இது தான் நடந்தது.



 



நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த பாடல்கள் இல்லாமல் படம் வெளியாகும். ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் பாடல்களே தீர்மானிக்கிறது. மக்களுக்கு படத்தை மிக விரைவில் கொண்டு சேர்ப்பதே படத்தின் பாடல்கள் தான் எனவும் சிம்பு கூறினார்.



 



ஆனால் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இந்த பாடல்கள் படத்திற்கு தேவையற்றவை சிம்புவும் TRரும் தங்கள் படம் என்றாலே குத்து பாட்டு இருந்தா தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் ரசிக்கவா அல்லது ரசிகர்கள் ரசிக்கவா என்று தெரியவில்லை. மேலும் நயன்தாராவின் கால்ஷீட் யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லை அதுனாலதான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினோம் என்று சிம்பு கூறுவது மிகவும் கோமாளித்தனமாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா