சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

குத்து சிம்புவுக்கா ரசிகர்களுக்கா!
Updated on : 03 September 2015

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படத்துக்கு குறளரசன் இசையமைத்து இருக்கிறார் ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்காக இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்திருக்கிறார்.



 



இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. வாலு படம் பிரச்சினைகள் முடிந்து படம் திரைக்கு வந்த பின்னர்  ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல் படமாக்கப்பட்டு படத்தை வெளியிட திட்டமிட்டபடி நயன்தாராவிடம் தேதிகள் கேட்டு தரவில்லை என்பதால் டி.ஆர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.



 



இதுபற்றி சிம்புவிடம் கேட்டபோது, நயன்தாரா மீது புகார் எதுவும் நாங்கள் புகார் நாங்கள் தரவில்லை.  ‘இது நம்ம ஆளு’ படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கபடவேண்டி இருந்ததால் நயன்தாராவின் கால்ஷீட் கேட்க யாரை அணுகுவது என்று தெரியவில்லை. எனவே தயாரிப்பாளர் சங்கத்திடம் “நீங்கள் நயன்தாராவிடம் தேதிகள் வாங்கி கொடுங்கள். அவருக்கு கொடுக்கவேண்டிய மீத சம்பளத்தை உங்களிடமே கொடுத்துவிடுகிறோம் நீங்களே நயன்தாரவிடம் கொடுத்துவிடுங்கள் என்று கூறினோம் அதற்க்கு அவர்கள் இதை நீங்கள் ஒரு  கடிதமாக எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார்கள், எழுதி கொடுத்தோம். இது தான் நடந்தது.



 



நயன்தாரா கால்ஷீட் கொடுக்கவில்லை என்றாலும் அந்த பாடல்கள் இல்லாமல் படம் வெளியாகும். ஒரு படத்தின் வெற்றியை அந்த படத்தின் பாடல்களே தீர்மானிக்கிறது. மக்களுக்கு படத்தை மிக விரைவில் கொண்டு சேர்ப்பதே படத்தின் பாடல்கள் தான் எனவும் சிம்பு கூறினார்.



 



ஆனால் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இந்த பாடல்கள் படத்திற்கு தேவையற்றவை சிம்புவும் TRரும் தங்கள் படம் என்றாலே குத்து பாட்டு இருந்தா தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று பிடிவாதம் பிடிக்கின்றனர். இவர்கள் ரசிக்கவா அல்லது ரசிகர்கள் ரசிக்கவா என்று தெரியவில்லை. மேலும் நயன்தாராவின் கால்ஷீட் யாரிடம் கேட்பது என்பது தெரியவில்லை அதுனாலதான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினோம் என்று சிம்பு கூறுவது மிகவும் கோமாளித்தனமாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா