சற்று முன்

இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |   

சினிமா செய்திகள்

பாவனா சம்பவம் - விஷால் சீற்றம்
Updated on : 20 February 2017

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்துக்கு மலையாளம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



 



இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால், "பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிறைய பெண்கள் அதை வெளியே சொல்ல கூச்சப்படுகின்றனர். ஆனால், பாவனா அதை பகிரங்கப்படுத்தியிருக்கிறார். அவரது தைரியத்தைப் பாராட்டுகிறேன். பாவனாவுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஒரு நடிகைக்கே இந்நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களுக்கு? கேரள முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம்.



 



குற்றவாளிகளை கண்டுபிடித்து, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே மறுபடியும் இந்த மாதிரியான விஷயத்தில் இறங்க பயப்படுவார்கள், யோசிப்பார்கள். மலையாள திரைப்பட சங்கத்தை தொடர்பு கொண்டு, எங்களால் ஆன உதவியைச் செய்வோம்.பாவனாவை நினைத்து மிகவும் வருந்துருகிறேன். நாங்கள் அனைவரும் அவருக்கு துணை நிற்போம். நிச்சயமாக நீதி கிடைக்கும்.



 



எண்ணூரில் 5 வயது குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமன்றி பல இடங்களில் குழந்தைகள் மீதான வன்முறை நடந்துவருவதை கேள்விப்படுகிறேன். தண்டனைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே நிறுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா