சற்று முன்

மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |    'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |   

சினிமா செய்திகள்

சேரன் விஷயத்தில் திரையுலகத்தை ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதி!
Updated on : 28 February 2017

'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரனுக்கு உதவும் வகையில் படம் ஒன்றை நடித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.



 



'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து' போன்ற படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், வசூல் வெற்றியை அடையும் வகையிலான படம் எதையும் சமீபத்தில் இயக்கவில்லை.



 



நடிப்பு, சி2எச் என பிற பணிகளில் ஈடுபட்டுவந்த சேரனுக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது. பெரிய நடிகர்கள் யாரும் என் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை என சேரன் ஆதங்கப்பட்டார்.



 



இந்நிலையில், மண்ணின் கதைகளை மனம் மாறாமல் படைக்கும் ஒரு கலைஞனுக்கு மீண்டுமொரு வெற்றி படத்தை வழங்க முடிவு செய்த விஜய் சேதுபதி, சேரனின் இயக்கத்தில் நடிப்பதாக விருப்பம் தெரிவித்தார். விஜய் சேதுபதிக்கு ஏற்ற ஒரு கதையை தயார் செய்யும் பணிகளில் சேரனும் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதியின் இந்த செயல் திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா