சற்று முன்

17 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தகமாக ‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’!   |    ‘திரௌபதி 2’ உடன் மீண்டும் திரையரங்குகளை நோக்கி மோகன் ஜி!   |    ஜி.வி. பிரகாஷ் இசையில் சிவனின் மகிமையை போற்றும் முதல் திருவாசக பாடல் வெளியீடு   |    பாலிவுட்டை நோக்கி இசையமைப்பாளர் 'ஹேஷம் அப்துல் வஹாப்'!   |    தமிழில் அடியெடுக்கும் கன்னட ஹீரோ சதீஷ் நினாசத்தின் ‘ரைஸ் ஆஃப் அசோகா’   |    ‘திரௌபதி 2’க்கு ஜிப்ரானின் இசை மிகப்பெரும் பலம்   |    நிஜ வாழ்வுக் கதைகளின் சக்தியை கொண்டாடும் Docu Fest Chennai   |    ‘சிறை’ வெற்றிக்குப் பிறகு L.K. அக்ஷய் குமார் நடிக்கும் அடுத்த படம் பூஜையுடன் ஆரம்பம்!   |    டோவினோ தாமஸின் பிறந்தநாளுக்கு ஐந்து மொழிகளில் வெளியான “பள்ளிச்சட்டம்பி” ஃபர்ஸ்ட் லுக்!   |    ‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே அடுத்த படத்திற்கு ஒப்பந்தமான கே.ஜெ. சுரேந்தர்!   |    தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணி… பூஜையுடன் தொடங்கிய #D55   |    “மங்காத்தா நாள்… அஜித் குடும்பத்தில் எழும் மோதல்?”   |    சுந்தர் சி – விஷால் கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி விருந்து   |    சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வாவின் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘திரௌபதி 2’ படத்தின் கதாநாயகிகளும் அவர்களது அனுபவங்களும்!   |    ZEE5 தமிழில் சமுத்திரகனியின் அடுத்த அதிரடி திரில்லர் “தடயம்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    வரலாற்றுக் காவியத்தில் வீரத் தோற்றம் - ‘திரௌபதி 2’ மூலம் புதிய உயரம் தொடும் ரிச்சர்ட் ரிஷி   |    கோயம்புத்தூரில் பொங்கல் விழாவுடன் முடிவடைந்த ‘அறுவடை’ படப்பிடிப்பு   |    300 கோடி வசூல் சாதனை… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான நன்றி கூறிய ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி   |    சசிகுமார் நடிப்பில் அரசியல் & உணர்வு காட்சிகள் நிறைந்த “மை லார்ட்” டிரெய்லர் வெளியீடு   |   

சினிமா செய்திகள்

விஜய் புற்று நோய் பாதித்த சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றினர்
Updated on : 21 February 2015

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.


சென்னையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் புற்றுநோய் பாதித்த குழந்தைகள் விஜய்யை பார்த்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களது ஆசை 'Make A Wish India' என்ற தொண்டு நிறுவனம் மூலமாக விஜய்க்கு தெரியப்படுத்தப்பட்டது.


"படப்பிடிப்பின் இடைவெளியில் பார்த்தால் நன்றாக இருக்காது. நான் அலுவலகத்திற்கு வருகிறேன். அங்கு கூட்டிக் கொண்டு வாருங்கள்" என்று கூறி இருக்கிறார். அக்குழந்தைகளை பார்த்த விஜய், அவர்களிடம் நீண்ட நேரம் கலந்துரையாடி இருக்கிறார். அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களது ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.


"இவ்வளவு அழகான சிரிப்பை நான் இதற்கு முன் கண்டதில்லை" என்று இக்குழந்தைகள் சந்திப்பு குறித்து ரசிகர்களுடன் கலந்துரையாடும் ட்விட்டர் பக்கத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.


'Make A Wish India' என்ற தொண்டு நிறுவனம் ஏற்கனவே இம்மாதியான குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற சச்சின், சல்மான் கான் போன்ற நடிகர்களை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா