சற்று முன்

ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் 'டியர் ரதி'!   |    பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள 'சினம் கொள்' பாடல்   |    23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டுகளை குவித்த‌ ஹாலிவுட் திரைப்படம் 'டெதர்'!   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்!   |    டிசம்பர் 19 அன்று Sun NXT-இல் பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’!   |    நடிகர் விது நடித்திருக்கும் புதிய பட டைட்டில் லுக் & ப்ரோமோ வீடியோ வெளியீடு!   |    ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது!   |    “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!   |    தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம் - 4,000 கோடி ரூபாய் முதலீடு!   |    மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |   

சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் பங்களாவில் காவல்துறையினர் சோதனை
Updated on : 04 January 2016

சில நாட்களுக்கு முன் சிம்புவின் பீப் பாடல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் அலை ஓய்வதற்குள் சென்னை போரூர் செட்டியார் அகரம் பகுதியில் டி.ராஜேந்தருக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. இதை தன்னுடைய படங்களின் படபிடிப்புக்காக பயன்படுத்திவருகிறார் . மற்ற படப்பிடிப்புகளுக்கும் பங்களாவை வாடகைக்கு விடுவார் டி.ராஜேந்தர். அதேபோல் மற்ற படபிடிப்பு நிறுவனங்களுக்கும் வாடகைக்கு விடுவார். 





நேற்று முன்தினம் மதியம் 12.30 மணி அளவில் ‘‘போரூரில் உள்ள டி.ராஜேந்தரின் பங்களாவில் குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்டது என கூறி 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது. உடனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரவாயல் போலீசார் டி.ராஜேந்தர் பங்களாவுக்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



ஆனால் 2 மணி நேர சோதனைக்கு பிறகு அது புரளி என்பது தெரிய வந்தது. உடனே மிரட்டல் வந்த நம்பரை வைத்து சோதனை செய்ததில் அது ஒரு பெண் என்றும் அவர் ஆண் குரலில் பேசியிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் அவர் யார் என்பது தெரியவில்லை காவல் துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா