சற்று முன்

அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |    பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் வெளியாகவுள்ள 'கேடி தி டெவில்'!   |    வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |   

சினிமா செய்திகள்

நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும்!
Updated on : 25 May 2017

கவிஞர் நா.காமராசன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கவிப்பேரரசு வைரமுத்து, நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும் என தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



 



''ஒரு தீவிரமான புதுக்கவிஞனுக்குத் திரைப்பாட்டு எழுத வராது என்ற பழைய நம்பிக்கையை உடைத்தவர் நா.காமராசன். இவர் திராவிடப் பண்ணையில் முளைத்தவர். இந்தி எதிர்ப்பு போர்க்களத்தில் தன்னை அடையாளப்படுத்தியவர். மதுரையில் காளிமுத்துவோடு சட்டத்தை எரித்துச் சிறை சென்றவர். 'சூரிய காந்தி' என்ற மரபுக்கவிதையில் தொடங்கிய அவரது எழுத்துப் பயணம் 'கருப்பு மலர்கள்' என்ற புரட்சிக் கவிதையில் சென்று முடிந்தது.



 



'போய்வா நதி அலையே - ஏழை



 



பூமிக்கு நீர் கொண்டுவா'



 



என்ற அவரது பாட்டு காதலிலும்கூட ஏழைகளையே கனவு கண்டது.



 



'நிர்வாணத்தை விற்கிறோம்



 



ஆடை வாங்குவதற்காக'



 



என்று பால்வினையாளிகளைப் பற்றி எழுதிய கவிஞன்



 



'வால் முளைத்த மண்ணே' - என்று புல்லைப் பற்றி எழுதிய கவிஞன்...



 



'புயலை'க் கடலின் வேட்டை நாய் என்று எழுதிய கவிஞன்...



 



'இனிமேல் இங்கு நேசிப்பதற்கு என்ன இருக்கிறது



 



ஆஸ்துமா மாத்திரைகளைத் தவிர'



 



என்ற கவிதை வரியோடு தன் காலத்தை முடித்துக்கொண்டார்.



 



நா.காமராசனின் கவிதைகளை கருணாநிதி வாழ்த்தினார்; அவருடைய பாடல்களை எம்.ஜி.ஆர் ஆதரித்தார். இப்படி இருபெரும் ஆளுமைகளாலும் வளர்க்கப்பட்டவர் இன்று எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.



 



இந்த உடம்பு அழியப் பிறந்தது. அழியும் உடம்பிலிருந்து அழியாததைச் செய்கிறவனே மரணத்தை வெற்றி கொள்கிறான். அவர் கவிதைகள் அழியாதவை. நா.காமராசன் இழப்பை அவரது கவிதைகள் ஈடு செய்துகொண்டே இருக்கும்.



 



அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும் இலக்கிய உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கல்'' என வைரமுத்து கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா