சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

பரபரப்பாக தொடங்குகிறது இருமுகன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!
Updated on : 10 March 2016

"பத்து எண்றதுக்குள்ள" திரைப்படத்திற்கு பிறகு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் "இருமுகன்". பெயரிடப்படாமல் துவங்கிய இந்த திரைப்படத்திற்கு, பின்னர் இருமுகன் என பெயரிடப்பட்டது. விக்ரம் இந்த திரைப்படத்தில்  இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.



விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.



தற்போது இருமுகன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே மாதம் வரை இந்த படப்பிடிப்பு நடக்கிறது.



சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.



தமிழில் "அரிமா நம்பி" திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த திரைப்படம், சைன்ஸ் பிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த படமாகும். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படத்தின் இசையும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா