சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

பரபரப்பாக தொடங்குகிறது இருமுகன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு!
Updated on : 10 March 2016

"பத்து எண்றதுக்குள்ள" திரைப்படத்திற்கு பிறகு ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் திரைப்படம் "இருமுகன்". பெயரிடப்படாமல் துவங்கிய இந்த திரைப்படத்திற்கு, பின்னர் இருமுகன் என பெயரிடப்பட்டது. விக்ரம் இந்த திரைப்படத்தில்  இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.



விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.



தற்போது இருமுகன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மே மாதம் வரை இந்த படப்பிடிப்பு நடக்கிறது.



சென்னையைத் தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் காஷ்மீரில் நடைபெற உள்ள படப்பிடிப்பிற்காக இயக்குநர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகியோர் அங்கு நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தவேண்டிய இடங்களை தேர்வு செய்து வந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.



தமிழில் "அரிமா நம்பி" திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த திரைப்படம், சைன்ஸ் பிக்ஷன் திரில்லர் வகையை சார்ந்த படமாகும். மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் படத்தின் இசையும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா