சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விமர்சிக்கும் நடிகை கஸ்தூரி!
Updated on : 06 November 2017

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் குழந்தைகளுடன் ஏழை பெற்றோர்கள் தீக்குளித்த சம்பவத்தை சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததற்காக கார்ட்டூன் பாலா கைது செய்யப்பட்டார்.



 



இந்நிலையில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது குறித்தும் அவரது கார்ட்டூன் குறித்தும் நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.



 



"சமீபத்தில் நெல்லை தீக்குளிப்புகளை மையப்படுத்தி ஓவியர் பாலா வெளியிட்ட கேலிச்சித்திரம் பேரதிர்வுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஒருவகையில் அதைத்தான் பாலாவும் எதிர்பார்த்திருப்பார், விரும்பியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் இவரின் பல முந்தைய சித்திரங்களும், பொது நாகரிகத்தின் எல்லைகளை அறவே நிராகரிப்பவை. கூச்சநாச்சம் பார்க்காதவை. கருத்துக்களை வாழைப்பழ ஊசி போலோ, இல்லை ஆழம்பொதிந்த நையாண்டியாகவோ சொல்வது ஒரு வகை என்றால், பொளேரென்று முகத்தில் அறைந்தாற் போல் உரைப்பது இன்னொரு வகை. இதில் எங்கே எல்லை மீறப்படுகிறது, அப்படி மீறப்படும் எல்லைதான் எது என்பதெல்லாம் விவாதத்துக்குரிய விஷயம்.



 



நெல்லை ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி மனநிலை புரிகிறது. அரசியல்வாதிகளுக்கு விமர்சனங்களும், எதிர்ப்பும் பழக்கம். அதிகாரிகள் பொதுவாக ஊடக விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதில்லை. பாவம், ஏற்கனவே நான்கு உயிர்கள் கண் முன்னே துடிதுடித்து இறந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்னரே, மிக மோசமான மானக்கேட்டையும் சந்திக்கும் சூழல். ஆட்சியாளர் சந்தீப் ஒரு நல்லவர், பொறுப்புள்ள அதிகாரி என்பது உண்மையானால், வீண் பழி சுமத்தப்படும் போது, அதிலும் மிக ஆபாசமாக அது சித்தரிக்கபடும்போது, பதறித்தான் போயிருப்பார். அவர் போலீஸை நாடியதில் ஆச்சரியமில்லைதான். ஆனால், அது அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றே நான் பார்க்கிறேன்.



 



இப்படி உங்களுக்கு நடந்தால் சும்மா இருப்பீர்களா? என்று கேட்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல எனக்கு முழு தகுதியும் மனப்பக்குவமும் உண்டென்று நினைக்கிறேன்.



 



நடிகைகளை ஆபாசமாக போட்டோஷாப் செய்து வெளியிடும் எத்தனையோ இணையதளங்கள் உண்டு. இவை சிலரால் மட்டுமே பார்க்கப்படுகிற விளிம்பு நிலை ஊடகங்கள், கோர்ட் கேஸ் என்று போனால் அதுவரை சிலர் மட்டுமே பார்த்த கேவலமான தவறான சித்தரிப்புகள் பொதுவெளிக்கு வரும்.



 



அரெஸ்ட் ஆகும் வரை, பாலா என்பவரையும் அவரின் அந்தக் கார்டூனையும் சொற்பமானவர்களுக்கே தெரியும். இப்பொழுதோ, நாடு முழுவதும் வைரல் ஆகிவிட்டார். தன் மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை தானே விளம்பரப்படுத்திவிட்டார். கலெக்டர் நந்தூரி, போதாததற்கு இன்னும் இருவரையும் சேர்த்து செய்தியாக்கிவிட்டார்.



 



அவதூறு கிளப்புபவர்களை எதிர்கொள்வது எப்படியென்று என்னைக் கேளுங்கள். ஒரு நடிகையாக நான் சந்திக்காத வதந்தியா, அவதூறா? சொல்லப்பட்ட பழி பொய்யென்று நிரூபியுங்கள், பழித்தவரை பழி வாங்காதீர்கள். விமர்சனங்களுக்கு எதிர்வினையாக விளக்கங்களை, விவரங்களை எடுத்து வையுங்கள்; விமர்சித்தவருக்கு விளம்பரம் தேடித் தராதீர்கள். மாண்ட உயிர்களுக்கு பதில் சொல்வதை விடுத்து, மானம் போச்சே என்று மலைக்காதீர்கள். உங்களை குறிவைத்த அந்த சித்திரம் ஆபாசமான, விகாரமான, கீழ்த்தரமான ஒன்று தான். அதில் மாற்று கருத்தில்லை. அதில் கூறப்பட்ட கருத்து பொய்யாகவும், உங்களை காயப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டதாகவும் கூட இருக்கலாம். அதற்காக சமூகம் அந்த ஓவியனை தூற்றத் தயாராக இருந்தது.



 



அவசரப்பட்டு அடக்குமுறையை அவிழ்த்துவிட்டதால் உங்கள்பால் வந்திருக்கக்கூடிய பச்சாதாபம் திசைமாறிவிட்டதே என்று ஆதங்கப்படுவதைத் தவிர இப்போது வேறு எதுவும் செய்வதற்கில்லை" என்று அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா