சற்று முன்

’மெல்லிசை’ நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை நினைவூட்டியது - நடிகர் கிஷோர்!   |    பிக் பாஸ் புகழ் விக்ரமன் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட் - மூன்று வில்லன்கள் அறிமுகம்!   |    பல சவால்களை தாண்டி 'பராசக்தி' படத்தை படமாக்கினேன் - இயக்குநர் சுதா கொங்கரா!   |    அதர்வாவின் அர்ப்பணிப்பு இன்னும் அவரை பெரிய உயரத்திற்கு அழைத்து செல்லும் - நடிகை ஸ்ரீலீலா!   |    பல தருணங்களில் சிவகார்த்திகேயனை பார்த்து வியந்திருக்கிறேன் - நடிகர் ரவி மோகன்!   |    யாஷ் பிறந்தநாளில் 'டாக்ஸிக்' திரைப்படத்தில் யாஷ் கதாபாத்திரத்திர அறிமுக முன்னோட்டம்!   |    “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன் - நடிகர் அதர்வா முரளி!   |    அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு   |    ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை!   |    ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ படத்தில் ருக்மணி வசந்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    “மூன்வாக்” படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் ரசிகர்கள்!   |    இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு - நடிகர் ரவி மோகன்   |    அப்பாவின் பெருமையையும் அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள “ஃபாதர்”!   |    விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி நடிப்பில் “காந்தி டாக்ஸ்” - 30 ஜனவரி 2026 அன்று வெளியாகிறது!   |    பால் தினகரன் தலைமையில் கேக் வெட்டி கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு புது வருட பிரார்த்தனை   |    கபிலன் வைரமுத்து எழுதியுள்ள ‘நித்திலன் வாக்குமூலம்’ நாவல் இன்று வெளியானது!   |    ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் 'சுப்ரமணி'   |    'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    துபாயில் புதிய பாந்தர் கிளப் திறந்து வைத்த கிங் கான் ஷாருக்கான்!   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் அரசியல் போர் ஆரம்பம்
Updated on : 31 December 2017

இருபது ஆண்டுகளாக ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று காலை ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவித்துள்ளார். 



 



முதலில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி தனக்கு அரசியலில் வருவது பற்றி பயம் இல்லை மீடியாவை பார்த்துதான் பயம். சோ அடிக்கடி என்னிடம் கூறுவார் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்று அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு பக்க பலமாக இருந்திருப்பார். 



 



நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதில் போட்டயிடப்போவது இல்லை. 



 



பணம், பதவி ஆசை எனக்கு இல்லை. நான் பதவிக்காக இல்லை அரசியல் மிகவும் கெட்டுவிட்டது, ஜனநாயகம் சீர் குலைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டது. வேற்று மாநிலங்கள் நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்.



 



ஜாதி மத வேறுபாடின்றி ஒரு ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் எனக்கு தொண்டர்கள் வேண்டாம் தவறுகளை தட்டி கேட்கும் காவலர்களே தேவை. கொள்ளையடிக்கும் ஆட்சி முறையை மாற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். 



 



உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே என் தாரக மந்திரம். சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன். சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த விஷயங்களை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



இவ்வாறு ரஜினி மக்களுக்கு தன்னுடைய அரசியல் முடிவு பற்றி அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா