சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் அரசியல் போர் ஆரம்பம்
Updated on : 31 December 2017

இருபது ஆண்டுகளாக ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று காலை ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவித்துள்ளார். 



 



முதலில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி தனக்கு அரசியலில் வருவது பற்றி பயம் இல்லை மீடியாவை பார்த்துதான் பயம். சோ அடிக்கடி என்னிடம் கூறுவார் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்று அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு பக்க பலமாக இருந்திருப்பார். 



 



நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதில் போட்டயிடப்போவது இல்லை. 



 



பணம், பதவி ஆசை எனக்கு இல்லை. நான் பதவிக்காக இல்லை அரசியல் மிகவும் கெட்டுவிட்டது, ஜனநாயகம் சீர் குலைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டது. வேற்று மாநிலங்கள் நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்.



 



ஜாதி மத வேறுபாடின்றி ஒரு ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் எனக்கு தொண்டர்கள் வேண்டாம் தவறுகளை தட்டி கேட்கும் காவலர்களே தேவை. கொள்ளையடிக்கும் ஆட்சி முறையை மாற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். 



 



உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே என் தாரக மந்திரம். சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன். சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த விஷயங்களை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



இவ்வாறு ரஜினி மக்களுக்கு தன்னுடைய அரசியல் முடிவு பற்றி அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா