சற்று முன்

₹50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ – வெற்றியை கொண்டாடிய படக்குழு!   |    அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு HPV தடுப்பூசி இயக்கத்தை தொடங்கிய ரசிகர் மன்றம்!   |    ஜெயசூர்யா – அனுஷ்கா – பிரபுதேவா இணையும் “கத்தனார்”: பிரம்மாண்ட டிரெய்லர் வைரல்!   |    32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் தியாகராஜன் – இளையராஜா கூட்டணி   |    அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் அரசியல் போர் ஆரம்பம்
Updated on : 31 December 2017

இருபது ஆண்டுகளாக ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று காலை ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவித்துள்ளார். 



 



முதலில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி தனக்கு அரசியலில் வருவது பற்றி பயம் இல்லை மீடியாவை பார்த்துதான் பயம். சோ அடிக்கடி என்னிடம் கூறுவார் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்று அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு பக்க பலமாக இருந்திருப்பார். 



 



நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதில் போட்டயிடப்போவது இல்லை. 



 



பணம், பதவி ஆசை எனக்கு இல்லை. நான் பதவிக்காக இல்லை அரசியல் மிகவும் கெட்டுவிட்டது, ஜனநாயகம் சீர் குலைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டது. வேற்று மாநிலங்கள் நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்.



 



ஜாதி மத வேறுபாடின்றி ஒரு ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் எனக்கு தொண்டர்கள் வேண்டாம் தவறுகளை தட்டி கேட்கும் காவலர்களே தேவை. கொள்ளையடிக்கும் ஆட்சி முறையை மாற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். 



 



உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே என் தாரக மந்திரம். சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன். சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த விஷயங்களை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



இவ்வாறு ரஜினி மக்களுக்கு தன்னுடைய அரசியல் முடிவு பற்றி அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா