சற்று முன்

பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |    'தி பாரடைஸ்' படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானியின் புதிய பீஸ்ட் மோட் தோற்றம் வெளியாகியுள்ளது!!   |    பிக் பாஸ் விக்ரமன் - சுப்ரிதா நடிக்கும் புதிய படம்   |   

சினிமா செய்திகள்

ரஜினியின் அரசியல் போர் ஆரம்பம்
Updated on : 31 December 2017

இருபது ஆண்டுகளாக ரஜினியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு இன்று காலை ரசிகர்களை சந்தித்த ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை அறிவித்துள்ளார். 



 



முதலில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி தனக்கு அரசியலில் வருவது பற்றி பயம் இல்லை மீடியாவை பார்த்துதான் பயம். சோ அடிக்கடி என்னிடம் கூறுவார் மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இன்று அவர் என்னுடன் இருந்திருந்தால் எனக்கு பக்க பலமாக இருந்திருப்பார். 



 



நான் அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அதில் போட்டயிடப்போவது இல்லை. 



 



பணம், பதவி ஆசை எனக்கு இல்லை. நான் பதவிக்காக இல்லை அரசியல் மிகவும் கெட்டுவிட்டது, ஜனநாயகம் சீர் குலைந்துவிட்டது. கடந்த ஆண்டில் நடந்த சம்பவங்கள் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டது. வேற்று மாநிலங்கள் நம்மை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறது. இதனால் நான் மிகவும் வருந்துகிறேன்.



 



ஜாதி மத வேறுபாடின்றி ஒரு ஆன்மிக அரசியலை கொண்டு வருவேன் எனக்கு தொண்டர்கள் வேண்டாம் தவறுகளை தட்டி கேட்கும் காவலர்களே தேவை. கொள்ளையடிக்கும் ஆட்சி முறையை மாற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன். 



 



உண்மை, உழைப்பு, உயர்வு இதுவே என் தாரக மந்திரம். சட்டமன்ற தேர்தல் வரும்போது கட்சியின் பெயரை அறிவிப்பேன். சட்டமன்ற தேர்தல் வரும்வரை இந்த விஷயங்களை பற்றி யாரும் பேச வேண்டாம் என்றும் மக்களிடம் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



 



இவ்வாறு ரஜினி மக்களுக்கு தன்னுடைய அரசியல் முடிவு பற்றி அறிவித்துள்ளார். ரஜினியின் இந்த முடிவு ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா