சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

கருப்புப் பணம் குறித்து பேசிய சிம்பு; விஷாலுக்கு ரஜினி ஆலோசனை
Updated on : 12 April 2018

தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், கவுரவ செயலாளர் கதிரேசன் மற்றும் பொருளாளர் எஸ்.ஆர். பிரபு ஆகியோர் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்துள்ளனர்.



போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அவர்களிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்துள்ளார்.



மேலும், நல்ல நோக்கத்திற்காக இந்த வேலை நிறுத்தத்தை செய்துள்ளீர்கள். நீங்கள் செய்யும் செயல் நல்லதுதான். ஆனால் தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.



‘சீமராஜா‘ படத்தை தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை‘ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கும் புது படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.



இந்தப் படத்தை பற்றி அதிகாராப்பூர்வ அறிப்பு கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் கதாநாயகி யார் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்பதை பற்றி எந்த அறிப்பையும் வெளியிடவில்லை.



இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார் என்பதை அறிவித்துள்ளனர்.



அதேபோல் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.



 



மேலும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் சிவகார்த்திகேயனுடைய படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார்.



சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையில் இந்தப் படம் உருவாகவுள்ளதால் பிரம்மாண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் கூறுகின்றனர்.



அதிலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசை படத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் என்று கருதுகின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தை ஆர்.டி. ராஜா தயாரிக்கிறார்.



முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், பிரமாண்ட் பட்ஜெட் என தயாராகவுள்ள சிவகார்த்திகேயனின் புதிய படம் அவருக்கு மேலும் ஏறுமுகத்தை கொடுக்கும் என்று கூறுகின்றனர். விரைவில் சூட்டிங்கை தொடங்கவிருக்கும் படக்குழுவினர் 2019ம் ஆண்டு புது படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா