சற்று முன்

வெற்றியை கொண்டாடிய 'பறந்து போ' படக்குழுவினர்!   |    'ஃபென்டாஸ்டிக் ஃபோர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எப்படி இருக்கும்!   |    வக்கீலாக சரவணன் கலக்கும் ‘சட்டமும் நீதியும்' சீரிஸின் டிரெய்லர் வெளியானது!   |    தனுஷ் நடிக்கும் D54 வெகுவிமர்சையாக பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது   |    ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை 'டிரெண்டிங்' பேசியுள்ளது!   |    இந்திய இதிகாசத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள 'மஹாவதார் நரசிம்மா' டிரெய்லர் வெளியானது!   |    ராம் சாரின் படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம் - நடிகர் சிவா   |    ‘ஜென்ம நட்சத்திரம்’ படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன் போல இருக்கும் - நடிகர் தமன்   |    சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களை பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் 'மரியா'   |    சினிமாக்காரர்கள் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும்! - இயக்குநர் பேரரசு   |    அனிருத்தின் புதிய சாதனை   |    சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |   

சினிமா செய்திகள்

5 ஆயிரம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அஜீத்: ராதாரவி!
Updated on : 24 April 2018

நடிகர் அஜீத், 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.



நடிகர் அஜீத் சினிமாவில் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நிஜத்தில் நல்ல மனிதரும் கூட. இவர் நடிக்க ஒவ்வொரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை உதவிக்கென்று ஒதுக்கி விடுவாராம். இந்த நல்ல பழக்கம் அவர் நடித்த முதல் படத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜீத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இதில் ‘‘மறைந்த முன்னாள் நடிகர் ஜெயசங்கரின் மகன்தான் விஜய் சங்கர். இவர் பிரபல கண் மருத்துவர். இவருக்கு சொந்தமாக சென்னையில் கண் மருத்துவமனை உள்ளது. இதுவரை விஜய் சங்கர் அளித்த சிகிச்சையால் 60 ஆயிரம் கண் ஒளி பெற்று பயனடைந்துள்ளனர். 



இந்த 60 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு நடிகர் அஜீத்தான் பண உதவி செய்தாராம். இந்த தகவலை கண் மருத்துவர் விஜய் சங்கரே என்னிடம் சொன்னார்’’ என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா