சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

5 ஆயிரம் பேரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்தவர் அஜீத்: ராதாரவி!
Updated on : 24 April 2018

நடிகர் அஜீத், 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு உதவி செய்து அவர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார் என்று பிரபல நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.



நடிகர் அஜீத் சினிமாவில் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நிஜத்தில் நல்ல மனிதரும் கூட. இவர் நடிக்க ஒவ்வொரு படத்துக்கும் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை உதவிக்கென்று ஒதுக்கி விடுவாராம். இந்த நல்ல பழக்கம் அவர் நடித்த முதல் படத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில் நடிகர் ராதாரவி சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் அஜீத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இதில் ‘‘மறைந்த முன்னாள் நடிகர் ஜெயசங்கரின் மகன்தான் விஜய் சங்கர். இவர் பிரபல கண் மருத்துவர். இவருக்கு சொந்தமாக சென்னையில் கண் மருத்துவமனை உள்ளது. இதுவரை விஜய் சங்கர் அளித்த சிகிச்சையால் 60 ஆயிரம் கண் ஒளி பெற்று பயனடைந்துள்ளனர். 



இந்த 60 ஆயிரம் பேரில் 5 ஆயிரம் பேரின் கண் சிகிச்சைக்கு நடிகர் அஜீத்தான் பண உதவி செய்தாராம். இந்த தகவலை கண் மருத்துவர் விஜய் சங்கரே என்னிடம் சொன்னார்’’ என்று ராதாரவி மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா