சற்று முன்

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீஸ்!   |    பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா? – அதர்வா முரளியின் ‘வலை’   |    ரிலீஸுக்கு முன்பே சரித்திரம் படைத்த ‘டாக்ஸிக்’   |    டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ – படப்பிடிப்பு நிறைவு, ஏப்ரல் 9 வெளியீடு   |    குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட ’லெகஸி’ நெட்ஃபிலிக்ஸில் 2026-ல் வெளியாகும்!   |    சமூக சிந்தனையுடன் கூடிய சினிமாவுக்கு அரசின் அங்கீகாரம் – ரௌடி பிக்சர்ஸ் மகிழ்ச்சி   |    தூய்மை பணியாளர் பத்மாவுக்கு பார்த்திபன் வழங்கிய மரியாதை!   |    அரசியல் அல்ல, முழு எண்டர்டெய்னர் - ‘லீடர்’ குறித்து லெஜெண்ட் சரவணன் விளக்கம்   |    Fire Fox Film House தயாரிப்பில் புதிய போலீஸ் லவ் கமர்ஷியல் படம், படப்பிடிப்பு தொடக்கம்!   |    ராம் சரண்–புச்சி பாபு சானா கூட்டணியில் ‘பெத்தி’, ஏப்ரல் 30 உலகளாவிய திரையரங்கு வெளியீடு!   |    'பராசக்தி' ZEE5-ல், பிப்ரவரி 7 முதல் உலகளாவிய டிஜிட்டல் வெளியீடு!   |    கனவே வில்லனாகும் காதல் பயணம் – ‘ட்ரீம் கேர்ள்’ குறித்து இயக்குநர் எம்.ஆர். பாரதி   |    லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ நிழல் உலகமும் காவல் துறையும் மோதும் மாஸ் ஆக்ஷன் திரில்லர்!   |    “சாத்தியமற்றதை மேடையில் சாத்தியமாக்கிய முரளிதரன்” - இயக்குநர் K. பாக்யராஜ்   |    எல்லைகளை கடந்த மாஸ் - ஜப்பானில் ‘புஷ்பா 2’ 14 நாளில் ரூ.6.1 கோடி வசூல்!   |    Hotstar Specials-ஆக ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'லக்கி' திரைப்படம் JioHotstar-ல்   |    விஜய் அரசியல் குறித்த அனு மோகன் கருத்துகள் தனிப்பட்டவை - ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர் விளக்கம்!   |    மீண்டும் திரையரங்குகளில் STR-ன் ‘சிலம்பாட்டம்’!   |    ‘பள்ளிச்சட்டம்பி’யில் விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர் கேரக்டர் போஸ்டர் வெளியீடு!   |    சென்னைக் கடற்கரையில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ‘வித் லவ்’ படக்குழுவினர்!   |   

சினிமா செய்திகள்

ரொமாண்டிக் காமெடி வலைத்தொடர் வரும் ஜூலை 24 முதல் 'Viu'வில் ஒளிபரப்பு
Updated on : 16 July 2018

'நிலா நிலா ஓடிவா' என்ற வரிகளை தலைப்பாக கேட்டவுடனே நாம் நிச்சயம் இது  'குழந்தைகள்' பற்றி ஏதேனும் ஒன்றாக தான் இருக்கும் என்று யூகிப்போம். ஆனால் ஆச்சரியமான ஒரு திருப்பமாக அது ஒரு வாம்பயர் சார்ந்த ரொமாண்டிக் காமெடி. வலைத் தொடர் உலகம் என்பது புதிய விஷயங்ளை செய்ய ஒரு பரந்த அளவிலான வாய்ப்பை வழங்குகிறது. 'வாம்பயர்' கதைகள் ஹாலிவுட் மற்றும் மேற்கத்திய திரைப்படத் துறையில் நன்கு பரிச்சயமாக இருந்தாலும், நமது சொந்த தமிழ் தொழில் துறையில் உலகளாவிய வீடியோ ஆன் டிமாண்ட் 'Viu' மூலம் பரிச்சயம் ஆக இருக்கிறது.  அஸ்வின் காகமானு மற்றும் சுனைனா ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடிக்க நிலா நிலா ஓடி வா' என்ற வலைத்தொடர் மூலம் இயக்குனர் ஜேஎஸ் நந்தினி இதனை முயற்சி செய்கிறார்.



டிஜிட்டல் தளத்தின் உலகில் வலுவான வெற்றியாளராக வளர்ந்து வரும் 'Viu' ஏற்கனவே பல்வேறு கூறுகளின் மூலம் எல்லோருடைய ஆர்வத்தையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் காமெடி வலைத்தொடர் வரும் ஜூலை 24 முதல் 'Viu'வில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. Viu பற்றி புகழ்ந்து பேசும் நந்தினி கூறும்போது, "தயாரிப்பாளர்களுக்கு இணங்கி சில படைப்பு சமரசங்கள் செய்யும் இந்த காலச்சூழலில், ஒரு படைப்பாளர் அல்லது இயக்குனர் முழு சுதந்திரத்தை வெளிப்படுத்துவது என்பது எளிதான விஷயம் அல்ல. எனினும், Viu ஒரு முழுமையான விதிவிலக்காக இருந்தது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தெளிவான அணுகுமுறை மட்டுமல்லாமல், ஒரு இயக்குனராக எனக்கு அவர்கள் முழு சுதந்திரம் வழங்கியதும் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.



முன்னணி நடிகர்களின் கதாபாத்திரத்தை பற்றி அவர் கூறும்போது, "அஸ்வின் ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. தன் கதாபாத்திரம் முழுமை அடைவதற்கு நிறைய முயற்சிகள் எடுத்தார் அஸ்வின். கதாபாத்திரத்திற்காக நிறைய பச்சை குத்திக் கொள்வார், முன்பை விட மிகச்சிறப்பான, முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுனைனா ஒரு வாம்பயராக நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரது அழகிய தோற்றம் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு ஆகியவை நிபந்தனையற்ற வகையில் கலந்து கதாபாத்திரத்திற்கு உயிராக அமைந்தன.



ஸ்ரீகிருஷ்ணா தயாள், அஸ்வத், கேப்ரியலா, மிஷா கோஷல், அனுபமா குமார், அபிஷேக் வினோத், பிரவீன், ஷிரா மற்றும் ஹரிஷ் என மிகச்சிறப்பான நடிகர்கள் இந்த தொடரில் நடித்திருப்பது இயக்குனருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது.



ஒரு வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் - காமெடி வார்த்தைகளில் வரையறுக்க அல்லது ஸ்கிரிப்ட்டை விவரிக்க எளிதானதாக இருக்கலாம், ஆனால் மிகப்பெரிய சவால் வலுவான தொழில்நுட்பக் குழுவின் கையில் தான்  உள்ளது. இயக்குனர் நந்தினி மேலும் கூறும்போது, "ஒட்டுமொத்த தொழில்நுட்ப கலைஞர்களும் சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார்கள். இந்த வகை சினிமாவுக்கு இருண்ட மற்றும் பயமுறுத்தும் வகையில் காட்சிகள் தேவை என்பதால், ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் பாரம்பரிய திரைப்பட செட் லைட்டிங் அல்லாமல், சாதாரண  விளக்குகளையே பயன்படுத்தினார். டாட்டூ ஸ்டுடியோ தான் கதையின் மையம் என்பதால்  கமல் (கலை இயக்குனர்), விஜய் மற்றும் நான் ஒரு வித்தியாசமான தோற்றத்தை, வாம்பயர் அடிப்படையிலான காட்சிகளுக்காக அமைக்க வேண்டியிருந்தது. இசையமைப்பாளர் அஸ்வத்தின் பின்னணி இசை, மூன்று அழகான பாடல்கள், மற்றும் ஒரு நவநாகரீக தலைப்பு பாடல் அனைவராலும் கண்டிப்பாக கவனிக்கப்படும். பிரபு சந்திரசேகர், வியக்க வைக்கும் வகையில் சண்டை காட்சிகளை வழங்கியுள்ளார். இது ஒரு பெரிய ஆக்‌ஷன் திரைப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு இணையாக சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா